மத்தேயு 17 : 1 (RCTA)
ஆறு நாட்களுக்குப்பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும், அவர் சகோதரர் அருளப்பரையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டு போய், அவர்கள்முன் உருமாறினார்.
மத்தேயு 17 : 2 (RCTA)
அவரது முகம் கதிரவனைப்போல் ஒளி வீசியது. அவர் ஆடைகள் ஒளியைப்போல வெண்மையாயின.
மத்தேயு 17 : 3 (RCTA)
இதோ! மோயீசனும் எலியாசும் அவர்களுக்குத் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
மத்தேயு 17 : 4 (RCTA)
இராயப்பர் இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்" என்று சொன்னார்.
மத்தேயு 17 : 5 (RCTA)
அவர் பேசிக் கொண்டிருக்கையிலே, இதோ! ஒளிரும் மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. "இவரே என் அன்பார்ந்த மகன்! இவரிடம் நான் பூரிப்படைகிறேன்; இவருக்குச் செவி சாயுங்கள்" என்ற குரலொலி, இதோ! மேகத்திலிருந்து கேட்டது.
மத்தேயு 17 : 6 (RCTA)
இதைக் கேட்ட சீடர் குப்புற விழுந்து பெரிதும் அஞ்சினர்.
மத்தேயு 17 : 7 (RCTA)
இயேசு அணுகிவந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சவேண்டாம்" என்றார்.
மத்தேயு 17 : 8 (RCTA)
அவர்கள் ஏறெடுத்துப் பார்த்தபோது இயேசுவையன்றி வேறு எவரையும் காணவில்லை.
மத்தேயு 17 : 9 (RCTA)
அவர்கள் மலையினின்று இறங்கும்பொழுது "மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்வரை இக்காட்சியை எவருக்கும் சொல்ல வேண்டாம்" என்று இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மத்தேயு 17 : 10 (RCTA)
"முதலில் எலியாஸ் வர வேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?" எனச் சீடர் அவரைக் கேட்டனர்.
மத்தேயு 17 : 11 (RCTA)
அதற்கு அவர், "எலியாஸ் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தத்தான் போகிறார்.
மத்தேயு 17 : 12 (RCTA)
நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் ஏற்கனவே வந்துவிட்டார். அவர்கள் அவரை அறிந்துகொள்ளாமல் தாம் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள். இவ்வாறே மனுமகனும் அவர்கள் கையால் பாடுபடப்போகிறார்" என்றார்.
மத்தேயு 17 : 13 (RCTA)
அவர் சொன்னது ஸ்நாபக அருளப்பரைப்பற்றித்தான் என்பதை அப்போது சீடர் உணர்ந்தனர்.
மத்தேயு 17 : 14 (RCTA)
அவர்கள் கூட்டத்திடம் வந்ததும், ஒருவன் அவரை அணுகி அவர்முன் முழந்தாளிட்டு,
மத்தேயு 17 : 15 (RCTA)
"ஆண்டவரே, என் மகன்மேல் இரக்கம் வையும். ஏனெனில், அவன் வலிப்பினால் துன்பப்படுகிறான். அடிக்கடி நெருப்பிலும் நீரிலும் விழுகிறான்.
மத்தேயு 17 : 16 (RCTA)
அவனை உம் சீடரிடம் கொண்டு வந்தேன். அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றான்.
மத்தேயு 17 : 17 (RCTA)
அதற்கு இயேசு, "விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் இங்குக்கொண்டு வாருங்கள்" என்றார்.
மத்தேயு 17 : 18 (RCTA)
இயேசு அவனைக் கடிய, பேய் அவனை விட்டு நீங்கியது. அந்நேரமுதல் பையன் குணமாயிருந்தான்.
மத்தேயு 17 : 19 (RCTA)
பின், சீடர் தனிமையாக இயேசுவை அணுகி, "அதை ஓட்ட ஏன் எங்களால் முடியவில்லை?" என்று வினவினர்.
மத்தேயு 17 : 20 (RCTA)
அதற்கு இயேசு கூறியது: "உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:
மத்தேயு 17 : 21 (RCTA)
கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இம்மலையை நோக்கி, 'இவ்விடம் விட்டு அவ்விடம் செல்' என்றால் அது பெயர்ந்து செல்லும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது."
மத்தேயு 17 : 22 (RCTA)
அவர்கள் கலிலேயாவில் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி, "மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப்போகிறார்.
மத்தேயு 17 : 23 (RCTA)
அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்று சொல்ல, அவர்கள் மிகவும் வருந்தினர்.
மத்தேயு 17 : 24 (RCTA)
அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தபோது வரிப்பணம் வாங்குவோர் இராயப்பரிடம் வந்து, "உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துவதில்லையா?" என்றனர்.
மத்தேயு 17 : 25 (RCTA)
"ஆம் செலுத்துகிறார்" என்றார். வீட்டுக்குள் வந்து அவர் இதைச் சொல்லுவதற்கு முன்னமே, இயேசு, "சீமோன், இதைப்பற்றி உன் கருத்து என்ன? மண்ணக அரசர்கள், தீர்வையோ வரியோ யாரிடம் வாங்குகின்றனர்? நம் மக்களிடமா? அன்னியரிடமா?" என்று கேட்டார்.
மத்தேயு 17 : 26 (RCTA)
"அன்னியரிடந்தான்" என்று அவர் சொல்ல, இயேசு, "இப்படியானால் மக்களுக்குக் கடமையில்லை அன்றோ?
மத்தேயு 17 : 27 (RCTA)
ஆயினும் நாம் அவர்களுக்கு இடறலாகாதபடி நீ கடலுக்குச் சென்று, தூண்டில் போட்டு, முதலில் படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் 'ஸ்நாத்தேர்' என்னும் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களுக்குச் செலுத்து" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: