மாற்கு 11 : 1 (RCTA)
அவர்கள் யெருசலேமை அணுகி ஒலிவமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபொழுது, அவர் தம் சீடர்களுள் இருவரை அழைத்து,
மாற்கு 11 : 2 (RCTA)
"உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழைந்தவுடன் இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
மாற்கு 11 : 3 (RCTA)
' என்ன செய்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை. உடனே திருப்பி இங்கே அனுப்பிவிடுவார்' என்றும் கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்.
மாற்கு 11 : 4 (RCTA)
அவர்கள் சென்று தெருவில் ஒரு வாசலருகே கழுதைக்குட்டியொன்று கட்டியிருக்கக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
மாற்கு 11 : 5 (RCTA)
அங்கே நின்றவர்களில் சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? குட்டியை அவிழ்க்கிறீர்களே" என்றார்கள்.
மாற்கு 11 : 6 (RCTA)
இயேசு சொன்னபடி சீடர் சொல்லவே, அவர்கள் விட்டுவிட்டார்கள்.
மாற்கு 11 : 7 (RCTA)
குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட, அவர் அதன்மேல் அமர்ந்தார்.
மாற்கு 11 : 8 (RCTA)
பலர் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். வேறு சிலர் வயல் வெளிகளில் இலைத்தழைகளை வெட்டி வழியில் பரப்பினர்.
மாற்கு 11 : 9 (RCTA)
முன்னே சென்றவர்களும் பின்னே வந்தவர்களும், "ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! நம் தந்தையாம் தாவீதின் அரசு வருகிறது.
மாற்கு 11 : 10 (RCTA)
அது வாழ்க! உன்னதங்களில் ஓசான்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.
மாற்கு 11 : 11 (RCTA)
அவர் யெருசலேமிற்கு வந்து கோவிலுக்குள் சென்றார். எல்லாம் சுற்றிப்பார்த்தார். ஏற்கெனவே பொழுது போய்விட்டதால் பன்னிருவருடன் பெத்தானியாவுக்குச் சென்றார்.
மாற்கு 11 : 12 (RCTA)
மறுநாள் பெத்தானியாவிலிருந்து போகும்பொழுது அவருக்குப் பசித்தது.
மாற்கு 11 : 13 (RCTA)
இலைகள் நிறைந்த ஓர் அத்திமரத்தைத் தொலைவிலே கண்டு, அதில் ஏதாவது அகப்படுமாவென்று பார்க்கப்போனார். அதன் அருகே வந்தபோது இலைகள் தவிர வேறொன்றும் காணவில்லை. ஏனெனில், அது அத்திப்பழக் காலமன்று.
மாற்கு 11 : 14 (RCTA)
அவர் அதை நோக்கி, "இனி ஒருவனும் ஒருகாலும் உன் பழத்தை உண்ணாதிருக்கட்டும்" என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
மாற்கு 11 : 15 (RCTA)
அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தத் தொடங்கி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.
மாற்கு 11 : 16 (RCTA)
யாதொரு பண்டத்தையும் கோயில்வழியாகக் கொண்டுபோக எவனையும் விடவில்லை.
மாற்கு 11 : 17 (RCTA)
என் வீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறதல்லவா? நீங்களோ அதைக் கள்வர் குகை யாக்கிவிட்டீர்கள்" என்று அவர்களுக்குப் போதிக்கலானார்.
மாற்கு 11 : 18 (RCTA)
இதைக் கேட்டுத் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவரை எப்படித் தொலைக்கலாம் என்று வழித்தேடினார்கள். ஏனெனில், மக்கள்கூட்டம் அனைத்தும் அவருடைய போதனையைப்பற்றி மலைத்துப்போனதால் அவர்கள் அவருக்கு அஞ்சியிருந்தார்கள்.
மாற்கு 11 : 19 (RCTA)
மாலையானதும் பட்டணத்தை விட்டு வெளியேறினார்.
மாற்கு 11 : 20 (RCTA)
காலையில் அவர்கள் அவ்வழியோரமாய்ப் போகும்பொழுது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருக்கக் கண்டார்கள்.
மாற்கு 11 : 21 (RCTA)
இராயப்பர் நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து, அவரை நோக்கி, "ராபி, நீர் சபித்த அத்திமரம் இதோ! பட்டுப்போயிற்று" என்றார்.
மாற்கு 11 : 22 (RCTA)
இயேசு மறமொழியாக, "கடவுள்மீது விசுவாசம் கொண்டிருங்கள்.
மாற்கு 11 : 23 (RCTA)
உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இம்மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து கடலில் விழு' என்று சொல்லி, தான் சொல்லியதெல்லாம் நிறைவேறும் என்று தன்னுளத்தில் தயங்காது விசுவசிப்பவன் எவனோ, அவனுக்கு அது கைகூடும்.
மாற்கு 11 : 24 (RCTA)
ஆதலால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் செபத்தில் எதெதைக் கேட்பீர்களோ, அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசியுங்கள், உங்களுக்குக் கைகூடும்.
மாற்கு 11 : 25 (RCTA)
நீங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார்மேலாவது உங்களுக்கு மனத்தாங்கல் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள்.
மாற்கு 11 : 26 (RCTA)
அவ்வாறே வானகத்திலிருக்கும் உங்கள் தந்தையும் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவார்" என்றார்.
மாற்கு 11 : 27 (RCTA)
மீண்டும் அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலின் முற்றத்தில் உலாவிக்கொண்டிருக்கும்பொழுது, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் மூப்பரும் அவரிடம் வந்து,
மாற்கு 11 : 28 (RCTA)
"எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் ? அல்லது, இப்படிச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?" என்றார்கள்.
மாற்கு 11 : 29 (RCTA)
அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறுவேன்.
மாற்கு 11 : 30 (RCTA)
அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா? பதில் சொல்லுங்கள்" என்றார்.
மாற்கு 11 : 31 (RCTA)
அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: " 'வானகத்திலிருந்து வந்தது' என்போமாகில், 'பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார்.
மாற்கு 11 : 32 (RCTA)
இல்லை, 'மனிதரிடமிருந்து வந்தது' என்று சொல்லலாமா?" -- பொதுமக்களுக்கு அஞ்சினார்கள். ஏனெனில், எல்லாரும் அருளப்பரை உண்மையான இறைவாக்கினர் என்று கருதிவந்தனர்.
மாற்கு 11 : 33 (RCTA)
எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக, "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: