லூக்கா 15 : 1 (RCTA)
அவர் சொல்வதைக் கேட்க ஆயக்காரரும் பாவிகளும் அவரை அணுகிய வண்ணமாயிருந்தனர்.
லூக்கா 15 : 2 (RCTA)
அதனால் பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்.
லூக்கா 15 : 3 (RCTA)
அப்போது அவர் பின்வரும் உவமையைக் கூறினார்:
லூக்கா 15 : 4 (RCTA)
"உங்களுள் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்க, அவற்றில் ஒன்றை இழந்தால் அவன் தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பாழ்வெளியில் விட்டுவிட்டு, இழந்த ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டானா?
லூக்கா 15 : 5 (RCTA)
கண்டுபிடித்தபின் அதைத் தன் தோள்மேல் போட்டுக்கொண்டு,
லூக்கா 15 : 6 (RCTA)
மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து, என்னோடு மகிழுங்கள். ஏனெனில், இழந்துபோன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பான்.
லூக்கா 15 : 7 (RCTA)
அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
லூக்கா 15 : 8 (RCTA)
" ஒரு பெண்ணிடம் இருந்த பத்து வெள்ளிக் காசுகளுள் ஒன்று காணாமற்போய் விட்டால், விளக்கேற்றி, வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை, அவள் அக்கறையோடு தேடுவதில்லையா?
லூக்கா 15 : 9 (RCTA)
அதைக் கண்டுபிடித்தபின், தன் தோழியரையும் அண்டை வீட்டுப் பெண்களையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள். ஏனெனில், காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்.' என்பாள்.
லூக்கா 15 : 10 (RCTA)
அவ்வாறே, மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் கடவுளுடைய தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
லூக்கா 15 : 11 (RCTA)
அவர் மேலும் கூறியதாவது: "ஒருவருக்கு மக்கள் இருவர் இருந்தனர்.
லூக்கா 15 : 12 (RCTA)
இளையவன் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு வரவேண்டிய பங்கைக் கொடும்' என்றான். அவர் தம் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்.
லூக்கா 15 : 13 (RCTA)
சில நாட்களுக்குப்பின் இளைய மகன் தன் சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தைத் திரட்டிக்கொண்டு தொலைநாட்டிற்குப் பயணமானான். அவ்விடத்தில் ஊதாரித்தனமாக வாழ்ந்து, சொத்தை எல்லாம் அழித்தான்.
லூக்கா 15 : 14 (RCTA)
எல்லாவற்றையும் செலவழித்தபின்பு, அந்நாடெங்கும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. 'அப்போது அவன் வறுமையுறலானான்.
லூக்கா 15 : 15 (RCTA)
அந்நாட்டுக் குடிகளுள் ஒருவனிடம் அண்டிப் பிழைக்கச் சென்றான். அவன் அவனைப் பன்றி மேய்க்கத் தன் வயலுக்கு அனுப்பினான்.
லூக்கா 15 : 16 (RCTA)
பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தன் வயிற்றை நிரப்ப விரும்பினான். ஆனால், அதையும் அவனுக்கு அளிப்பாரில்லை.
லூக்கா 15 : 17 (RCTA)
அறிவு தெளிந்து, 'என் தந்தையின் கூலியாட்கள் எத்தனையோ பேருக்கு நிறைய உணவு இருக்க, நான் இங்குப் பசியால் மடிகிறேன்! எழுந்து என் தந்தையிடம் போவேன்.
லூக்கா 15 : 18 (RCTA)
போய், "அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்.
லூக்கா 15 : 19 (RCTA)
இனிமேல் நான் உம்முடைய மகன் என்று எண்ணப்படத் தகுதியற்றவன். என்னை உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக நடத்தும்" என்று அவரிடம் சொல்வேன்' என்றான்.
லூக்கா 15 : 20 (RCTA)
அப்படியே எழுந்து தன் தந்தையிடம் வந்தான். "அவன் தொலைவில் வரும்போதே அவனுடைய தந்தை அவனைக் கண்டு மனமுருகி, ஓடிப்போய் அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.
லூக்கா 15 : 21 (RCTA)
மகன் அவரிடம், 'அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்' என்றான்.
லூக்கா 15 : 22 (RCTA)
தந்தையோ ஊழியர்களை நோக்கி, 'முதல்தரமான ஆடை கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், கால்களுக்கு மிதியடிகளையும் விரைவில் அணிவியுங்கள்.
லூக்கா 15 : 23 (RCTA)
கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். விருந்து கொண்டாடுவோம்.
லூக்கா 15 : 24 (RCTA)
ஏனெனில், இறந்துபோயிருந்த என் மகன் இவன் மீண்டும் உயிர்பெற்றுள்ளான்; காணாமற்போயிருந்தவன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்' என்றார். அவர்கள் விருந்து கொண்டாடத் தொடங்கினர்.
லூக்கா 15 : 25 (RCTA)
"அப்போது மூத்த மகன் வயலில் இருந்தான். வயலிருந்து திரும்பி வீட்டை நெருங்கியபொழுது நடனத்தையும் இசைமுழக்கத்தையும் கேட்டு,
லூக்கா 15 : 26 (RCTA)
ஊழியர்களுள் ஒருவனை அழைத்து நடப்பதென்னவென்று வினவினான்.
லூக்கா 15 : 27 (RCTA)
அதற்கு ஊழியன், 'உம் தம்பி வந்துவிட்டார். அவர் நலமாகத் தம்மிடம் வந்து சேர்ந்ததால், உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றான்.
லூக்கா 15 : 28 (RCTA)
அவனோ சினந்து உள்ளே நுழைய மனமில்லாதிருந்தான். எனவே, அவனுடைய தந்தை வெளியில் வந்து அவனை அழைத்தார்.
லூக்கா 15 : 29 (RCTA)
அவன் தன் தந்தையிடம், 'இதோ! இத்தனை ஆண்டுகளாக உமக்கு ஊழியம் செய்துவருகிறேன்; உம்முடைய கட்டளையை என்றும் மீறியதில்லை. ஆயினும் என் நண்பரோடு விருந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டிகூட நீர் எனக்குக் கொடுத்ததில்லை.
லூக்கா 15 : 30 (RCTA)
விலைமாதரோடு உமது சொத்தை யெல்லாம் அழித்துவிட்ட இந்த மகன் இவன் வந்தபொழுது, அவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கின்றீரே! ' என்றான்.
லூக்கா 15 : 31 (RCTA)
"அதற்குத் தந்தை, 'மகனே, நீ என்றும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
லூக்கா 15 : 32 (RCTA)
நாம் விருந்தாடி மகிழ்வது முறையே. ஏனெனில், உன் தம்பி இறந்துபோயிருந்தான், உயிர்த்துவிட்டான்; காணாமற்போயிருந்தான், கிடைத்துவிட்டான்' என்றார்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

BG:

Opacity:

Color:


Size:


Font: