லூக்கா 14 : 1 (RCTA)
ஓய்வுநாளில் பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றபோது, அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
லூக்கா 14 : 2 (RCTA)
அங்கே அவருக்கு எதிரே, நீர்க்கோவை நோயுற்ற ஒருவன் இருந்தான்.
லூக்கா 14 : 3 (RCTA)
இயேசு சட்ட வல்லுநரையும் பரிசேயரையும் நோக்கி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா? இல்லையா?" எனக் கேட்டார்.
லூக்கா 14 : 4 (RCTA)
அவர்கள் பேசாதிருந்தனர். அவர் அவன்கையைப் பிடித்துக் குணமாக்கி அனுப்பிவிட்டார்.
லூக்கா 14 : 5 (RCTA)
பின் அவர்களிடம், "உங்களுள் ஒருவனுடைய மகனோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாளென்றாலும் உடனே அவன் தூக்கிவிடமாட்டானோ?" என்றார்.
லூக்கா 14 : 6 (RCTA)
அதற்கு மறுமொழி கூற அவர்களால் முடியவில்லை.
லூக்கா 14 : 7 (RCTA)
மேலும், அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதலிடங்களைத் தேர்ந்துகொள்வதைக் கண்டு, அவர்களுக்கு உவமையாகக் கூறினதாவது:
லூக்கா 14 : 8 (RCTA)
" உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே. ஏனெனில், உன்னைவிட மதிப்பிற்குரிய ஒருவரை அவன் அழைத்திருக்கலாம்.
லூக்கா 14 : 9 (RCTA)
உன்னையும் அவரையும் அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'இவருக்கு உன் இடத்தை விடு' என்பான். அப்போது நீ வெட்கிக் கடைசி இடத்திற்குச் செல்லவேண்டியிருக்கும்.
லூக்கா 14 : 10 (RCTA)
மாறாக, உன்னை ஒருவன் அழைக்கும்போது கடைசி இடத்தில் போய் அமர்ந்துகொள். அப்படிச் செய்தால் உன்னை அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'நண்ப, மேலிடத்திற்குப்போம்' என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன் பந்தியிலிருப்பவர் முன்பாக நீ பெருமை அடைவாய்.
லூக்கா 14 : 11 (RCTA)
ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."
லூக்கா 14 : 12 (RCTA)
பின் தம்மை அழைத்திருந்தவனை நோக்கி, "நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது, உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே. அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.
லூக்கா 14 : 13 (RCTA)
மாறாக, நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.
லூக்கா 14 : 14 (RCTA)
அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
லூக்கா 14 : 15 (RCTA)
அவருடன் பந்தியில் இருந்தவர்களுள் ஒருவன் இதைக்கேட்டு அவரை நோக்கி, "கடவுளின் அரசில் விருந்து உண்பவன் பேறுபெற்றவன்" என்றான்.
லூக்கா 14 : 16 (RCTA)
அதற்கு அவர் கூறியதாவது: "ஒருவன் பெரிய விருந்துசெய்ய விரும்பிப் பலரை அழைத்தான்.
லூக்கா 14 : 17 (RCTA)
விருந்துக்கு நேரமானதும், 'எல்லாம் ஏற்பாடாயிற்று, வாருங்கள்' என்று அழைக்கப்பெற்றவர்களிடம் சொல்லும்படி தன் ஊழியனை அனுப்பினான்.
லூக்கா 14 : 18 (RCTA)
எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர். 'தோட்டம் வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான் ஒருவன்.
லூக்கா 14 : 19 (RCTA)
' நான் ஐந்து ஏர் மாடு வாங்கியிருக்கிறேன். அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான். இன்னொருவன்.
லூக்கா 14 : 20 (RCTA)
'நான் மணமுடித்துள்ளேன். ஆதலால் என்னால் வரமுடியாது ' என்றான் வேறொருவன்.
லூக்கா 14 : 21 (RCTA)
"ஊழியன் திரும்பிவந்து இதையெல்லாம் தன் தலைவனுக்கு அறிவித்தான். வீட்டுத் தலைவன் சினமுற்றுத் தன் ஊழியனிடம், 'நகரத்தின் தெருக்களிலும் சந்துகளிலும் விரைவில் சென்று, ஏழைகள், ஊனர்கள், குருடர்கள், முடவர்கள் ஆகியோரை இங்கே கூட்டிவா' என்றான்.
லூக்கா 14 : 22 (RCTA)
ஊழியனும், 'ஐயா, நீர் கட்டளையிட்டப்படி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றான்..
லூக்கா 14 : 23 (RCTA)
அதற்குத் தலைவன், 'சாலைகளிலும் வேலியோரங்களிலும் போய் என் வீடு நிறையும்படி மக்களை வற்புறுத்திக் கூட்டிவா.
லூக்கா 14 : 24 (RCTA)
அழைக்கப்பெற்றவர்களுள் எவனும் என் விருந்தைச் சுவைக்கமாட்டான் என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றான்."
லூக்கா 14 : 25 (RCTA)
ஒருநாள் அவருடன் பெருங்கூட்டம் சென்று கொண்டிருந்தது. அவர் அவர்கள் பக்கம் திரும்பிக் கூறியதாவது:
லூக்கா 14 : 26 (RCTA)
"என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது.
லூக்கா 14 : 27 (RCTA)
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.
லூக்கா 14 : 28 (RCTA)
" உங்களுள் யாராவது கோபுரங்கட்ட விரும்பினால் வேலையை முடிக்கத் தன்னால் முடியுமாவென்று பார்ப்பதற்கு, முதலில் உட்கார்ந்து, வேண்டிய செலவைக் கணிக்க மாட்டானா?
லூக்கா 14 : 29 (RCTA)
இல்லாவிடில் அதற்கு அடித்தளமிட்டபின் முடிக்க முடியாததைக் கண்ணுறும் யாவரும்,
லூக்கா 14 : 30 (RCTA)
'இவன் கட்டத் தொடங்கினான், முடிக்கவில்லை' என்று ஏளனம் செய்வர்.
லூக்கா 14 : 31 (RCTA)
அல்லது, ஓர் அரசன் மற்றோர் அரசன் மேல் போர்தொடுக்கப் போகுமுன், இருபதாயிரம் பேருடன் தன்னை எதிர்த்து வருபவனை பத்தாயிரம் பேருடன் எதிர்க்க முடியுமோ என்று, முதலில் அமர்ந்து ஆராய்ந்து பார்க்க மாட்டானா?
லூக்கா 14 : 32 (RCTA)
எதிர்க்க முடியாதெனில், அவன் இன்னும் தொலைவிலிருக்கும்பொழுதே தூதுவிடுத்து, சமாதானத்திற்கு ஆவன கோருவான்.
லூக்கா 14 : 33 (RCTA)
இவ்வாறே தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது.
லூக்கா 14 : 34 (RCTA)
"உப்பு நல்லதுதான். ஆனனால் உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் ஏற்றப்பெறும்?
லூக்கா 14 : 35 (RCTA)
நிலத்திற்கோ எருக்குழிக்கோ பயனற்றது. வெளியில்தான் கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: