லேவியராகமம் 9 : 1 (RCTA)
எட்டாம் நாளில் மோயீசன் ஆரோனையும், அவர் புதல்வரையும், இஸ்ராயேலரில் மூப்பரையும் வரவழைத்து, ஆரோனை நோக்கி:
லேவியராகமம் 9 : 2 (RCTA)
நீ பாவ நிவர்த்திப்பலியாக ஓர் இளங்காளையையும் தகனப் பலியாக மறுவற்ற ஓர் ஆட்டுக் கிடாயையும் மந்தையினின்று தெரிந்தெடுத்து ஆண்டவருக்கு முன் கொண்டுவரக் கடவாய் என்றார்.
லேவியராகமம் 9 : 3 (RCTA)
மேலும் இஸ்ராயேல் மக்களை நோக்கி: நீங்கள் பாவ நிவாரணப் பலிக்கென்று ஓர் ஆட்டுக் கிடாயையும், தகனப் பலிக்கென்று ஒரு இளங்காளையையும், ஒரு வயதான மறுவற்ற ஓர் ஆட்டுக்குட்டியையும்,
லேவியராகமம் 9 : 4 (RCTA)
சமாதானப் பலிக்கென்று ஒரு மாடும், ஒரு ஆட்டுக் கிடாயும் கொண்டு வந்து, அவற்றை ஆண்டவர் திருமுன் வெட்டிப் பலியிடுங்கள். ஒவ்வொன்றைப் பலியிட்டு வருகையில் அதனோடுகூட எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவையும் ஒப்புக்கொடுப்பீர்கள். ஏனென்றால், இன்று ஆண்டவர் உங்களுக்குக் காட்சியளிப்பார் என்றார்.
லேவியராகமம் 9 : 5 (RCTA)
அவர்கள் அவ்விதமே மோயீசன் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் கூடார வாயிலண்டை கொண்டு வந்தார்கள். சபையார் எல்லாரும் அவ்விடத்தில் சேர்ந்து நின்று கொண்டிருக்கையில்,
லேவியராகமம் 9 : 6 (RCTA)
மோயீசன் அவர்களை நோக்கி: ஆண்டவர் திருவுளம் பற்றின வாக்காவது: நீங்கள் (இவ்வாறு) செய்யுங்கள்; அவருடைய மாட்சியை நீங்கள் காண்பீர்கள் என்று சொன்னார்.
லேவியராகமம் 9 : 7 (RCTA)
பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிப்பீடத்தண்டை வந்து, உன் பாவத்திற்குப் பரிகாரமாகப் பலியிட்டு நெருப்பையும் ஒப்புக்கொடுத்து, உனக்காகவும் குடிகளுக்காகவும் மன்றாடு. பிறகு குடிகளின் பலிமிருகத்தை வெட்டி ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டபடியே, மக்களுக்காக மன்றாடு என்று சொன்னார்.
லேவியராகமம் 9 : 8 (RCTA)
அப்பொழுது ஆரோன் பலிப்பீடத்தண்டை வந்து, தம் பாவத்திற்குப் பரிகாரமாக இளங்காளையை வெட்டினார்.
லேவியராகமம் 9 : 9 (RCTA)
அவர் புதல்வர் அதன் இரத்தத்தை அவருக்குச் சமர்ப்பிக்க, அவர் அதில் விரலைத் தோய்த்துப் பீடத் கொம்புகளில் தடவி, மீதியானதைப் பீடத்தின் அடியில் ஊற்றினார்.
லேவியராகமம் 9 : 10 (RCTA)
பாவ நிவாரணப் பலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும் ஈரலின் சவ்வையும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, பீடத்தின் மேல் சுட்டெரித்தார்.
லேவியராகமம் 9 : 11 (RCTA)
அதன் இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
லேவியராகமம் 9 : 12 (RCTA)
பிறகு தகனப் பலியையும் செலுத்தினார். அவர் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவருக்கு வழங்க, அவர் அதைப் பலிப்பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
லேவியராகமம் 9 : 13 (RCTA)
அவர்கள் பலிப்பொருளை துண்டாக வெட்டி, அதைத் தலையோடும் எல்லா உறுப்புக்களோடும் அவருக்குச் சமர்ப்பித்தனர். அவர் எல்லாவற்றையும் பலிப்பீடத்தின் மேல் நெருப்பில் சுட்டெரித்தார்.
லேவியராகமம் 9 : 14 (RCTA)
முன்னரே குடல்களும் கால்களும் தண்ணீரில் கழுவப்பட்டிருந்தன.
லேவியராகமம் 9 : 15 (RCTA)
மேலும், அவர் குடிகளின் பாவ நிவாரணத்திற்குரிய பலியாகிய ஆட்டுக் கிடாயை ஒப்புக் கொடுத்து, கொன்று, பீடத்தைச் சுத்திகரித்த பின்னர்,
லேவியராகமம் 9 : 16 (RCTA)
அதைத் தகனப் பலியாக ஒப்புக் கொடுத்ததுமன்றி,
லேவியராகமம் 9 : 17 (RCTA)
காலையில் செலுத்தும் தகனப் பலியைப் பற்றிய சடங்குகளை நிறைவேற்றி மேற்சொன்ன பலியுடன் பான போசனப் பலியையும் சேர்த்து பீடத்தின் மேல் எரித்தார்.
லேவியராகமம் 9 : 18 (RCTA)
அன்றியும் குடிகளின் சமாதானப் பலியாகிய மாட்டையும் ஆட்டுக்கிடாயையும் பலியிட்டார். அவர் புதல்வர் அவருக்கு இரத்தத்தைக் கொடுக்க, அவர் அதைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
லேவியராகமம் 9 : 19 (RCTA)
ஆனால் அவர்கள் மாட்டின் கொழுப்பையும், செம்மறிக் கிடாயின் வாலையும், சிறுநீரகங்களுக்கு அடுத்த கொழுப்பையும்,
லேவியராகமம் 9 : 20 (RCTA)
கல்லீரலைச் சேர்ந்த சவ்வையும், மார்க் கண்டத்தின்மீது போட்டு வைத்தார்கள். கொழுப்புக்கள் பீடத்தின் மேல் சுட்டெரிக்கப்பட்ட பின்,
லேவியராகமம் 9 : 21 (RCTA)
மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி ஆரோன் சமாதானப் பலிப்பொருளின் மார்க்கண்டங்களையும், வலது முன்னந் தொடைகளையும் பிரித்தெடுத்து, ஆண்டவர் திருமுன் உயர்த்தினார்.
லேவியராகமம் 9 : 22 (RCTA)
இறுதியில் மக்களுக்கு முன் கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்தார். இவ்வாறு அவர் பாவநிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் நிறைவேற்றின பின்னர், இறங்கி வந்தார்.
லேவியராகமம் 9 : 23 (RCTA)
மோயீசனும் ஆரோனும் சாட்சியக் கூடாரத்துக்குள் புகுந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் வெளியே வந்து மக்களை ஆசீர்வதித்தனர். அந்நேரத்தில் ஆண்டவருடைய மாட்சி எல்லா மக்களுக்கும் தோன்றியது.
லேவியராகமம் 9 : 24 (RCTA)
அதாவது ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பீடத்தின் மேலிருந்த தகனப் பலியையும் அதன் கொழுப்புக்களையும் சுட்டெரித்தது. மக்கள் எல்லாரும் அதைக் கண்டபோது முகம் குப்புறவிழுந்து ஆண்டவரைப் போற்றினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: