லேவியராகமம் 22 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 22 : 2 (RCTA)
நீ ஆரோனோடும் அவன் புதல்வரோடும் பேசி, இஸ்ராயேல் மக்களால் நமக்கு நேர்ந்து விடப்பட்ட காணிக்கைகளை அவர்கள் தொடவேண்டாமென்றும், அவர்களே நமக்குச் செலுத்திவருகிற பரிசுத்த மாக்கப்பட்டவைகளின் பெயரை இழிவுபடுத்த வேண்டாமென்றும் சொல். நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 22 : 3 (RCTA)
நீ அவர்களையும் அவர்களின் சந்ததியாரையும் நோக்கி: உங்கள் வம்ச சந்ததியாரில் எவனேனும் தீட்டுப்பட்டவனாயிருந்து, இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குக் காணிக்கையாக, ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளின் அண்டையில் சென்றானாயின், அவன் ஆண்டவர் முன்னிலையில் கொலை செய்யப்படுவான்.
லேவியராகமம் 22 : 4 (RCTA)
நாம் ஆண்டவர். ஆரோனின் சந்ததியாரில் தொழுநோய் அல்லது மேகவெட்டை உள்ளவன் தான் குணமடையும் வரை நமக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட காணிக்கைகளில் ஒன்றையும் உண்ணலாகாது. பிணத்தைத் தொட்டதினால் தீட்டுள்ளவனையும், இந்திரியக் கழிவு உள்ளவனையும்,
லேவியராகமம் 22 : 5 (RCTA)
தீட்டுப்படுத்தும் ஊர், விலங்கு மற்றமுள்ள தொடத்தகாத பொருள் முதலியவற்றைத் தொட்டவன்,
லேவியராகமம் 22 : 6 (RCTA)
மாலைவரை அசுத்தனாய் இருந்து, ஆண்டவருக்கு அருச்சித்து ஒதுக்கப்பட்டவைகளை உண்ணலாகாது. ஆனால் அவன் தன் உடலைத் தண்ணீரால் கழுவி,
லேவியராகமம் 22 : 7 (RCTA)
சூரியன் மறைந்த பின் சுத்திகரம் அடைவானாயின், அப்பொழுது, தனக்குச் சொந்த உணவாகிய காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளை உண்ணலாம்.
லேவியராகமம் 22 : 8 (RCTA)
குருக்கள், தானாய்ச் செத்ததையோ கொடிய விலங்கால் கொல்லப்பட்டதையோ உண்ணாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பார்களாக. நாம் ஆண்டவர்.
லேவியராகமம் 22 : 9 (RCTA)
அவர்கள் பாவத்துக்கு உட்படாதபடிக்கும், பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தின பின் அவர்கள் அதிலே சாகாதபடிக்கும் நம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளக் கடவார்கள். நாம் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர்.
லேவியராகமம் 22 : 10 (RCTA)
அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவற்றை உண்ணலாகாது. குருவின் வீட்டில் குடியிருக்கிறவனும், கூலி வேலை செய்கிறவனும் அவற்றை உண்ணலாகாது.
லேவியராகமம் 22 : 11 (RCTA)
ஆயினும், குருவினால் பணத்துக்கு வாங்கப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்திருப்பவனும் அவற்றை உண்ணலாம்.
லேவியராகமம் 22 : 12 (RCTA)
குருவின் புதல்வி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்த மானவற்றையும் படைக்கப்பட்ட புதுப் பலன்களையும் உண்ணலாகாது.
லேவியராகமம் 22 : 13 (RCTA)
ஆனால், அவள் விதவையாகி அல்லது பிள்ளையில்லாது, தள்ளுபடி யானவளாகித் தந்தை வீட்டிற்குத் திரும்பி வந்தவளானால், அவள் சிறு பெண்ணாயிருந்த நாளிலே உண்டு வந்ததுபோல் இப்பொழுதும் தந்தையின் உணவை உண்ணலாம். அந்நியரில் ஒருவனும் அதை உண்ணலாகாது.
லேவியராகமம் 22 : 14 (RCTA)
அறியாமல் பரிசுத்தமானதை உண்டவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடு கூட ஆலயத்திற்காகக் குருவிடம் கொடுத்து விடக் கடவான்.
லேவியராகமம் 22 : 15 (RCTA)
இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டவற்றை அவர்கள் பரிசுத்தக் குறைச்சல் செய்யாதிருப்பார்களாக.
லேவியராகமம் 22 : 16 (RCTA)
அவர்கள் பரிசுத்தமானவற்றை உண்டால் தங்கள் குற்றத்திற்காகப் பெறவிருக்கும் தண்டனைக்கு அஞ்சக்கடவார்கள். அவர்களைப் பரிசுத்தமாக்குகின்ற ஆண்டவர் நாமே, என்று திருவுளம் பற்றினார்.
லேவியராகமம் 22 : 17 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 22 : 18 (RCTA)
நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் நோக்கி: அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேலரிலும் உங்களிடையே தங்குகிற அந்நியரிலும் யாரேனும் தன் நேர்ச்சியின்படியோ தன் உற்சாகத்தின்படியோ தன் காணிக்கையை ஒப்புக்கொடுக்க வரும்போது, ஆண்டவருக்குத் தகனப்பலிக்கென்று அவன் கொண்டு வரும் காணிக்கை எவ்வகையானதாயிருந்த போதிலும்,
லேவியராகமம் 22 : 19 (RCTA)
அதைப் படைக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டால், அது மாடுகளிலாவது செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது மறுவற்ற ஆணாய் இருக்கவேண்டும்.
லேவியராகமம் 22 : 20 (RCTA)
அது மறுவுள்ளதாயின், ( அதைச் ) செலுத்தாதிருப்பீர்கள்.
லேவியராகமம் 22 : 21 (RCTA)
அதை ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதன்று. ஒருவன் நேர்ச்சியாகவோ, உற்சாகமாகவோ மாடுகளிலும் சரி ஆடுகளிலும் சரி, ஆண்டவருக்குச் சமாதானப் பலியைச் செலுத்துவதாயின், அது ஏற்றுக் கொள்ளப்படும்படி ஒரு மறுவுமின்றி உத்தமமாய் இருக்கவேண்டும்.
லேவியராகமம் 22 : 22 (RCTA)
அது குருடு, நெரிசல், தழும்பு, கொப்புளம், சொறி, சிரங்கு முதலிய பழுது உள்ளதாயின், அதை ஆண்டவருச் செலுத்தவும் கூடாது; ஆண்டவருடைய பலிபீடத்தில் தகனப் பலியிடவும் கூடாது.
லேவியராகமம் 22 : 23 (RCTA)
நீ உற்சாகத்தை முன்னிட்டு ஆட்டையோ, மாட்டையோ படைக்க மனமுள்ளவனாய் இருந்தால், அறுத்த காதும் முறித்த வாலுமுள்ள விலங்கைப் பலியிட்டாலும் இடலாம். ஆனால், நேர்ச்சைக்காக அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
லேவியராகமம் 22 : 24 (RCTA)
விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் கத்தியால் அறுத்து விதை எடுக்கப்பட்டதையும் ஆண்டவருக்குப் படைத்தலாகாது. உங்கள் நாட்டில் அதைக் கண்டிப்பாய்ச் செய்யலாகாது.
லேவியராகமம் 22 : 25 (RCTA)
நீங்கள் அந்நியன் கையிலே அப்பங்களையோ, வேறு யாதொன்றையோ வாங்கி, அவன் பெயரால் ஆண்டவருக்குச் செலுத்தாதீர்கள். உண்மையில் அவையெல்லாம் தீட்டும் பழுதும் உள்ளவை. அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றருளினார்.
லேவியராகமம் 22 : 26 (RCTA)
மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
லேவியராகமம் 22 : 27 (RCTA)
கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டுக்குட்டியோ, வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்தால். அது ஏழு நாள் தன் தாயின் முலைப்பாலைக் குடிக்கும். ஆனால், எட்டாம் நாளில் அல்லது அதற்குப் பின் வரும் நாளில் அது ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படலாம்.
லேவியராகமம் 22 : 28 (RCTA)
( படைக்கலாமென்றாலும், ) பசுவையும் ஆட்டையும் தன் தன் குட்டியுடன் ஒரே நாளில் பலியிடலாகாது.
லேவியராகமம் 22 : 29 (RCTA)
உங்கள் மீது ஆண்டவர் தயவுள்ளவராய் இருக்கும்படி அவருக்கு நன்றியறிதலாக ஒரு பலியைச் செலுத்துவீர்களாயின்,
லேவியராகமம் 22 : 30 (RCTA)
அதை அதே நாளிலே உண்பீர்கள். அதில் யாதொன்றும் மறுநாள் சூரியன் உதிக்கும் வரை எஞ்சியிருக்கக் கூடாது.
லேவியராகமம் 22 : 31 (RCTA)
நாம் ஆண்டவர். நமது கட்டளைகளைக் கைக்கொண்டு, அவ்வாறே நடவுங்கள்.
லேவியராகமம் 22 : 32 (RCTA)
நாம் ஆண்டவர். நாம் இஸ்ராயேல் மக்கள் நடுவே பரிசுத்தரென்று மதிக்கப் பெறும்படியாய், நமது பெயரை இழிவு படுத்தாதீர்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிறவர் நாமே.
லேவியராகமம் 22 : 33 (RCTA)
உங்களுக்குக் கடவுளாய் இருக்கும்படி ( உங்களை ) எகிப்து நாட்டிலிருந்து விடுவித்தோம். நாமே ஆண்டவர், நாமே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: