ஏசாயா 46 : 1 (RCTA)
பேல் தெய்வம் உடைபட்டது, நாபோ நொறுக்கப்பட்டது; அவர்களுடைய சிலைகள் மிருகங்கள் மீதும் மாடுகள் மேலும் ஏற்றப்பட்டன; உங்களுடைய இந்தச் சுமைகள் பெரும் பாரமாய் உங்களை அழுத்திச் சோர்ந்து போகச் செய்கின்றன.
ஏசாயா 46 : 2 (RCTA)
சிலைகள் எல்லாம் உடைபட்டு ஒருங்கே தவிடு பொடியாய் ஆகிவிட்டன; தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் காப்பாற்ற முடியவில்லை, அவர்களோடு அவர்களின் சிலைகளும் சிறைப்பட்டன.
ஏசாயா 46 : 3 (RCTA)
தாய் வயிற்றிலிருந்தே நம்மால் தாங்கப்பட்டு, கருவிலிருந்தே நம்மால் தூக்கி வைக்கப்பட்ட யாக்கோபு வீட்டாரே, இஸ்ராயேல் வீட்டாரில் எஞ்சினோரே, அனைவரும் நமக்குச் செவிசாயுங்கள்.
ஏசாயா 46 : 4 (RCTA)
நீங்கள் முதுமையடையும் வரையில் நாம் மாறமாட்டோம், உங்கள் தலை நரைக்கும் வரை உங்களைத் தூக்கிச் செல்வோம்; நாமே படைத்தோம் நாமே உங்களைத் தாங்கினோம், நாமே தூக்கிப் போவோம், உங்களை விடுவிப்போம்.
ஏசாயா 46 : 5 (RCTA)
யாருக்கு நம்மை நிகராக்குவீர்கள்? யாருக்கு நம்மைச் சமமாக்குவீர்கள்?யாருக்கு நம்மை ஒப்பிடுவீர்கள்? நம்மை யாருக்கு இணையாக்குவீர்கள்?
ஏசாயா 46 : 6 (RCTA)
பையிலிருந்து பொன்னைக் கொட்டியும், தராசில் வெள்ளியை நிறுத்தும் கொடுத்துத் தெய்வமொன்று செய்து தரத் தட்டானை அமர்த்துகிறீர்கள்; செய்த பின் யாவரும் அதன் முன் விழுந்து வணங்குகிறார்கள்!
ஏசாயா 46 : 7 (RCTA)
அதைத் தோளில் சுமந்துகொண்டு போகிறார்கள், அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைக்கிறார்கள்; அது அங்கேயே இருக்கும்; தன் இடம் விட்டுப் பெயராது; அதனிடம் கூக்குரலிட்டாலும் அது, கேட்காது, துன்பத்தினின்று அவர்களைக் காப்பாற்றாது.
ஏசாயா 46 : 8 (RCTA)
துரோகிகளே, இதை நினைத்து வெட்கப்படுங்கள், உங்கள் உள்ளத்தில் நுழைந்து பாருங்கள்.
ஏசாயா 46 : 9 (RCTA)
பண்டைக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள், நாமே கடவுள், நம்மையல்லால் வேறு தெய்வமில்லை, நமக்கு நிகரானது கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏசாயா 46 : 10 (RCTA)
ஆதியிலிருந்தே இறுதிக் காலத்தில் நடப்பவற்றையும், தொடக்கத்திலிருந்தே இன்னும் நிகழவிருந்தவற்றையும் அறிவித்தோம். 'நமது தீர்மானம் உறுதியாய் நிற்கும், நம் விருப்பமெல்லாம் நிறைவேறும்' என்று சொன்னோம்.
ஏசாயா 46 : 11 (RCTA)
கிழக்கிலிருந்து பறவையொன்றைக் கூப்பிடுவோம், நமது சித்தத்தைச் செய்யும் ஒருவனைத் தொலைவிலிருந்து வரச் செய்வோம்; இதோ, (நாமே) சொன்னோம், சொன்னபடியே செய்வோம், தீர்மானம் செய்தோம், அதைச் செயல்படுத்துவோம்.
ஏசாயா 46 : 12 (RCTA)
கடின இதயம் கொண்டவர்களே, நீதிக்குத் தொலைவில் நிற்பவர்களே, கேளுங்கள்:
ஏசாயா 46 : 13 (RCTA)
நம்முடைய நீதியை அருகில் கொணர்ந்துள்ளோம், இனித் தொலைவில் இராது; நமது மீட்பு காலந் தாழ்த்தாது, சீயோனில் மீட்பையும், இஸ்ராயேலில் நம் மகிமையையும் நாட்டுவோம்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: