ஏசாயா 20 : 1 (RCTA)
அசீரியாவின் அரசனான சார்கோன் என்பவனால் அனுப்பப்பட்டு, அசோத் பட்டணத்துக்கு வந்த சேனைத் தலைவனாகிய தார்த்தான் என்பவன் போரிட்டு அந்தப் பட்டணத்தைப் பிடித்த அந்த ஆண்டில் -
ஏசாயா 20 : 2 (RCTA)
அந்தக் காலத்திலேயே- ஆமோஸ் என்பவனின் மகனான இசையாஸ் வாயிலாக ஆண்டவர் சொல்லியிருந்தார்: "நீ உன் இடையிலிருந்து சாக்கு உடையை அகற்றிவிட்டு, உன் கால்களிலிருந்து செருப்புகளையும் கழற்றி விட்டு நடமாடு" என்றார்; அவரும் அவ்வாறே செய்து, ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடி வந்தார்.
ஏசாயா 20 : 3 (RCTA)
ஆண்டவர் கூறினார்: "நம் ஊழியனாகிய இசையாஸ் ஆடையின்றியும் வெறுங்காலேடும் மூன்றாண்டுகள் நடமாடினது எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஓர் அடையாளமும் முன்குறியும் ஆகும்;
ஏசாயா 20 : 4 (RCTA)
(எவ்வாறெனில்) அசீரியாவின் அரசன் எகிப்தியரையும் எத்தியோப்பியரையும் சிறைபிடித்து, இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங்காலோடும் மறைக்கப்படாத பிட்டத்தினராய் நாடு கடத்துவான். இது எகிப்துக்கு மானக்கேடாய் இருக்கும்.
ஏசாயா 20 : 5 (RCTA)
அப்போது அவர்கள் தங்கள் நம்பிக்கையான எத்தியோப்பியாவை முன்னிட்டும், தங்கள் பெருமையான எகிப்தை முன்னிட்டும் திகைப்புற்று நாணுவார்கள்.
ஏசாயா 20 : 6 (RCTA)
அந் நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் வாழ்கிறவர்கள், 'இதோ, யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்படி யாரிடத்தில் உதவி தேடி ஓடினோமோ, அவர்களுக்கு நேர்ந்த கதி இதுவானால், நாம் எவ்வாறு தப்பிக்கப் போகிறோம்' என்பார்கள்."

1 2 3 4 5 6

BG:

Opacity:

Color:


Size:


Font: