ஏசாயா 17 : 1 (RCTA)
தமஸ்குப் பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: இதோ, தமஸ்கு ஒரு நகரமாய் இராமற் போகும், பாழடைந்த மண்மேடாய்க் கிடக்கும்.
ஏசாயா 17 : 2 (RCTA)
அரோயர் பட்டணங்கள் கைவிடப்படும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாய் விட்டுவிடப்படும்; அவை அவ்விடத்திலேயே அடைந்திருக்கும், அவற்றை அச்சுறுத்துபவன் எவனுமில்லை.
ஏசாயா 17 : 3 (RCTA)
எப்பிராயீமின் அரண்காவல் அழிந்து விடும், தமஸ்குவின் அரசுரிமை பறிக்கப்படும்; சீரியா நாட்டிலே எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களின் மகிமையைப் போல் ஆவார்கள் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ஏசாயா 17 : 4 (RCTA)
மேலும் அந் நாளில், யாக்கோபின் மகிமை தரைமட்டமாய்த் தாழ்த்தப்படும், அவனுடைய உடல் வலிமை குன்றிப் போகும்.
ஏசாயா 17 : 5 (RCTA)
அறுப்பவன், நிற்கின்ற தானிய மணிகளைச் சேர்ப்பது போலும், கையால் கதிர்களை எளிதாகக் கொய்வது போலும், ரப்பாயீம் பள்ளத்தாக்கில் தப்புக் கதிர்களைத் தேடிப் பொறுக்குவதுபோலும் இருக்கும்;
ஏசாயா 17 : 6 (RCTA)
ஒலிவ மரத்தின் காய்களைப் பறிக்கும் போது உயர்ந்தோங்கிய கிளை நுனியில் ஒன்றிரண்டும், பழமரத்துக் கிளைகளிலே நாலைந்தும் காய்கள் தப்புவது போல், அவர்களிலும் தப்பியவர்கள் எஞ்சியிருப்பார் என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்.
ஏசாயா 17 : 7 (RCTA)
அந்நாளில் தன்னைப் படைத்தவர் முன் மனிதன் தலைவணங்குவான்; அவனுடைய கண்கள் இஸ்ராயேலின் பரிசுத்தரை நோக்கும்;
ஏசாயா 17 : 8 (RCTA)
தன்னுடைய கை வேலைப்பாடுகளான பீடங்களைப் பொருட்படுத்தமாட்டான்; தானே தன் கைகளால் செய்த மரச் சிலைகளையும் கற்கூம்புகளையும் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்.
ஏசாயா 17 : 9 (RCTA)
அந் நாளில், இஸ்ராயேல் மக்களின் முன்னிலையில் அமோரியர், ருவிதியர் இவர்களின் நகரங்கள் கைவிடப்பட்டது போல் அரண் சூழ்ந்த உன் நகரங்களும் கைவிடப்படும். அவை யாவும் பாலை வெளியாகும்.
ஏசாயா 17 : 10 (RCTA)
ஏனெனில் உன்னுடைய மீட்பின் கடவுளை நீ மறந்துவிட்டாய்; உன் புகலிடமான பாறையை நீ நினைவுகூரவில்லை; ஆதலால், இனிய செடிகளையே நீ நட்டு வைத்தாலும், அந்நிய தெய்வங்களுக்குரிய நாற்றுகளைப் பயிரிட்டாலும்,
ஏசாயா 17 : 11 (RCTA)
நீ அவற்றை நட்ட நாளிலேயே வளரச் செய்தாலும், விதைத்த நாள் காலையிலேயே பூக்கச் செய்தாலும், துயரத்தின் நாளில் ஆற்ற முடியாத வேதனை வரும் போது, அறுவைடையே கிடைக்காமல் போய்விடுமே!
ஏசாயா 17 : 12 (RCTA)
இதோ, பல நாட்டு மக்களின் பேரிரைச்சல்: கடல் கொந்தளிப்பின் இரைச்சல் போல முழங்குகிறார்கள்; இதோ, மக்களினங்களின் கர்ச்சனை கேட்கின்றது; வெள்ளப் பெருக்கின் கர்ச்சனை போல கர்ச்சிக்கிறார்கள்!
ஏசாயா 17 : 13 (RCTA)
பெரு வெள்ளம்போல பல நாட்டினர் கர்ச்சிக்கிறார்கள், ஆயினும் அவர் அதட்டுவார், அவர்கள் ஓடிப் போவார்கள், பெருங் காற்றால் மலை மேலே பறந்தோடும் பதர் போலும், புயல் காற்றில் சுழன்றோடும் தூசு போலும் சிதறிப் போவார்கள்.
ஏசாயா 17 : 14 (RCTA)
மாலையில், இதோ, திகிலுண்டாகும்! விடியுமுன் அவர்கள் அழிந்துபோவர்கள்! நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பாடு இதுவாகும், நம்மைச் சூறையாடுவோர் கதி இவ்வாறாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: