எபிரேயர் 7 : 1 (RCTA)
இந்த மெல்கிசேதேக் சாலேம் ஊர் அரசர்; உன்னத கடவுளின் குரு; அரசர்களை வெட்டி வீழ்த்தித் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தவர்.
எபிரேயர் 7 : 2 (RCTA)
ஆபிரகாமிடமிருந்து எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைப் பெற்றுக் கொண்டவர். முதலாவது, நீதியின் அரசர் என்பது அவருடைய பெயரின் பொருள்; பின்னர் அவர் சாலேம் அரசர்; அதற்கு அமைதியின் அரசர் என்பது பொருள்.
எபிரேயர் 7 : 3 (RCTA)
இவருக்குத் தந்தையில்லை, தாயில்லை, தலைமுறை வரலாறில்லை, வாழ்நாளுக்குத் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை; இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: அவரைப்போல் என்றென்றும் குருவாக நிலைத்திருக்கிறார்.
எபிரேயர் 7 : 4 (RCTA)
குலத்தந்தையாகிய ஆபிரகாமே போரில் கைப்பற்றிய பொருட்களுள் சிறந்தவற்றில் பத்தில் ஒரு பங்கை அவருக்கு அளித்தாரெனில், அவர் எத்துணை உயர்ந்தவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
எபிரேயர் 7 : 5 (RCTA)
பொதுமக்களிடமிருந்து திருச்சட்டப்படி பத்திலொரு பங்குபெற, லேவியின் குலத்தவருள் குருப்பணி ஏற்பவர்களுக்குக் கட்டளையுண்டு. ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர்களிடமிருந்தும் லேவியர் இவ்வாறு பெறுகின்றனர்.
எபிரேயர் 7 : 6 (RCTA)
ஆனால் அவர்களுடைய மரபைச் சாராத மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்திலொரு பங்கு பெற்றார்; இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே ஆசி அளித்தார்.
எபிரேயர் 7 : 7 (RCTA)
சிறியவனுக்குப் பெரியவன் ஆசி அளிப்பதே முறை. 'இதை யாரும் மறுக்க முடியாது.
எபிரேயர் 7 : 8 (RCTA)
மேலும் பத்திலொரு பங்கு வாங்கும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்; ஆனால் மெல்கிசேதேக் உயிருள்ளவர் எனச் சாட்சியம் பெற்றவர்.
எபிரேயர் 7 : 9 (RCTA)
அன்றியும், பத்திலொரு பங்கு வாங்கும் லேவியும் ஆபிரகாமின் வழியாகப் பத்திலொரு பங்கு கொடுத்தார் என்று சொல்லலாம்.
எபிரேயர் 7 : 10 (RCTA)
ஏனெனில், மெல்கிசேதேக் ஆபிரகாமை எதிர்கொண்டபோது, லேவி தம் முப்பாட்டனுக்குள் இருந்தார்.
எபிரேயர் 7 : 11 (RCTA)
லேவியக் குருத்துவத்தின் வழியாக நிறைவு உண்டானதெனில் ஆரோனின் முறைமைப்படி யென்றில்லாமல், 'மெல்கிசேதேக்கின் முறைமைப்படி' மற்றொரு குருவை ஏற்படுத்தவேண்டிய தேவையென்ன? -- மக்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டம் இந்த லேவியக் குருத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தது.
எபிரேயர் 7 : 12 (RCTA)
இனி, குருத்துவம் மாற்றமடைந்தால், சட்டமும் கட்டாயமாக மாற்றம் அடைய வேண்டும்--
எபிரேயர் 7 : 13 (RCTA)
உள்ளபடி, இவையெல்லாம் யாரைக் குறித்துச் சொல்லப்பட்டனவோ, அவர் வேறொரு மரபைச் சேர்ந்தவர். அம்மரபில் எவருமே பீடத்தில் திருப்பணி செய்ததில்லை.
எபிரேயர் 7 : 14 (RCTA)
நம்முடைய ஆண்டவர் யூதாவின் மரபில் தோன்றினார் என்பது தெரிந்ததுதானே? மோயீசன் குருக்களைப் பற்றிப் பேசியபோது, அந்த மரபைக் குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.
எபிரேயர் 7 : 15 (RCTA)
இப்படித் தோன்றிய அவ்வேறொரு குரு மெல்கிசேதேக்குக்கு ஒப்பானவராய்த் திருச் சட்டத்திலுள்ள கட்டளைப்படி இயல்பான பிறப்பினாலன்று,
எபிரேயர் 7 : 16 (RCTA)
அழியாத உயிரின் வல்லமையால் குருவாய்த் தோன்றினார் என்பதை நினைக்கும்போது, மேற்கூறியது இன்னும் தெளிவாகிறது.
எபிரேயர் 7 : 17 (RCTA)
"நீர் மெல்கிசேதேக் முறைமைப்படி, என்றென்றும் குருவாயிருக்கிறீர் " என்னும் சாட்சியம் உண்டன்றோ?
எபிரேயர் 7 : 18 (RCTA)
ஆம், முன்னைய கட்டளைக்கு வலிமையோ பயனோ இல்லாததால் அது நீக்கப்பட்டது.
எபிரேயர் 7 : 19 (RCTA)
ஏனெனில், திருச்சட்டம் எதையும் நிறைவுள்ளதாக்கவில்லை. அதைவிடச் சிறந்ததொரு நம்பிக்கை இப்போது தோன்றுகிறது. இந்த நம்பிக்கையால் நாம் கடவுளை அணுகுகிறோம்.
எபிரேயர் 7 : 20 (RCTA)
மேலும், ஆணையிட்டு அளிக்கப்பட்ட குருத்துவம் எவ்வளவோ உயர்ந்ததன்றோ?
எபிரேயர் 7 : 21 (RCTA)
லேவியர்கள் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை. இவரோ, "ஆண்டவர் ஆணையிட்டார்; மனம் வருந்தார்; நீர் என்றென்றும் குருவாயிருக்கிறீர்" என்று தமக்குக் கூறியவரின் ஆணையால் குருவானார்.
எபிரேயர் 7 : 22 (RCTA)
இங்ஙனம் இயேசு எவ்வளவோ மேலான உடன்படிக்கையின் பிணையாகியுள்ளார்.
எபிரேயர் 7 : 23 (RCTA)
அன்றியும், அந்தக் குருக்கள் நிலைத்திராதபடி சாவு தடுத்ததால் குருக்கள் பலர் ஏற்படலாயினர்.
எபிரேயர் 7 : 24 (RCTA)
இவரோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவத்தைப் பெற்றுள்ளார்.
எபிரேயர் 7 : 25 (RCTA)
ஆகையால் தம் வழியாகக் கடவுளை அணுகிச் செல்வோரை முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார். அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே வாழ்கிறார்.
எபிரேயர் 7 : 26 (RCTA)
நமக்கேற்ற தலைமைக் குரு எத்தகையவரெனில்: புனிதர், குற்றமில்லாதவர், மாசற்றவர், பாவிகளினின்று பிரிக்கப்பட்டு வானகங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.
எபிரேயர் 7 : 27 (RCTA)
ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல், இவர் முதன்முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் நாள்தோறும் பலி ஒப்புக்கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில், தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தபோது ஒரே முறையில் எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றிவிட்டார்.
எபிரேயர் 7 : 28 (RCTA)
திருச்சட்டம் குறைபாடுள்ள மனிதர்களையே தலைமைக் குருக்களாக ஏற்படுத்துகிறது. அச் சட்டத்துக்குப்பின் வந்த ஆணையோடு கூடிய திருவாக்கு என்றென்றும் நிறைவு பெற்ற மகனையே குருவாக ஏற்படுத்துகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: