ஆதியாகமம் 7 : 1 (RCTA)
பின் ஆண்டவர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பெட்டகத்தினுள் செல்லுங்கள். ஏனென்றால், இப்பொழுது இருக்கிற மனிதர்களுக்குள்ளே உன்னையே நமது முன்னிலையில் நீதிமானென்று கண்டோம்.
ஆதியாகமம் 7 : 2 (RCTA)
சுத்தமான எல்லா மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடியும், அசுத்தமான மிருகங்களிலோ ஆணும் பெண்ணுமாக இரண்டு சோடியும்,
ஆதியாகமம் 7 : 3 (RCTA)
வானத்துப் பறவைகளிலும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடியும் உன்னோடு சேர்த்துக்கொள். அதனால் பூமியெங்கும் உள்ளவற்றின் வித்து காக்கப்படும்.
ஆதியாகமம் 7 : 4 (RCTA)
ஏனென்றால், இன்னும் ஏழு நாட்களுக்குப் பின் நாற்பது பகலும் நாற்பது இரவுமாகப் பூமியின் மேல் நாம் மழை பொழியச் செய்து, படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாவற்றையும் பூமியின் கண் அழித்து விடுவோம் என்றார்.
ஆதியாகமம் 7 : 5 (RCTA)
ஆகையால், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டபடி நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
ஆதியாகமம் 7 : 6 (RCTA)
வெள்ளம் பூமியின் மேல் பெருக்கெடுத்தோடிய காலத்தில் அவருக்கு வயது அறுநூறு.
ஆதியாகமம் 7 : 7 (RCTA)
நோவாவும், அவர் புதல்வர்களும், அவர் மனைவியும், அவர் புதல்வர்களின் மனைவியரும் வெள்ளப் பெருக்குக்குத் தப்புமாறு பெட்டகத்தினுள் புகுந்தார்கள்.
ஆதியாகமம் 7 : 8 (RCTA)
அன்றியும், கடவுள் நோவாவுக்குக் கட்டளையிட்ட வண்ணம், சுத்தமும் அசுத்தமுமான பிராணிகளிலும் பறவைகளிலும் பூமியில் ஊர்வன யாவற்றிலும்,
ஆதியாகமம் 7 : 9 (RCTA)
ஆணும் பெண்ணும் சோடி சோடியாக நோவாவோடு பெட்டகத்துள் நுழைந்தன.
ஆதியாகமம் 7 : 10 (RCTA)
ஏழு நாட்களுக்குப் பின்னர் வெள்ளம் பூமியின் மீது பெருக்கெடுத்தோடியது.
ஆதியாகமம் 7 : 11 (RCTA)
நோவாவுக்கு அறுநூறு வயது நடக்கும் பொழுது, அவ்வாண்டின் இரண்டாம் மாதம் பதினேழாம் நாளன்று பெரும் பாதாளத்தின் ஊற்றுக் கண்கள் அனைத்தும் உடைபட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன.
ஆதியாகமம் 7 : 12 (RCTA)
பூமியின் மீது நாற்பது பகலும் நாற்பது இரவும் (விடா) மழை பெய்தது.
ஆதியாகமம் 7 : 13 (RCTA)
(முன் குறிப்பிட்ட) அந்த (ஏழாம்) நாளிலே நோவா தம் புதல்வராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களோடும், தம் மனைவியோடும், தம் புதல்வர்களின் மூன்று மனைவியரோடும் பெட்டகத்துள் சென்றார்.
ஆதியாகமம் 7 : 14 (RCTA)
அவர்களோடு, பல்வேறுபட்ட காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், பூமியில் ஊர்வன, பறப்பன, பறவைகள் யாவும்,
ஆதியாகமம் 7 : 15 (RCTA)
உயிரினங்கள் எல்லாமே சோடி சோடியாய் நோவாவோடு கூடப் பெட்டகத்துள் புகுந்தன.
ஆதியாகமம் 7 : 16 (RCTA)
கடவுள் அவருக்குக் கட்டளையிட்ட வண்ணமே ஆணும் பெண்ணுமாக எல்லா உயிரினங்களும் உள்ளே புகுந்தன. பின் ஆண்டவர் வெளிப்புறமிருந்து அவனுக்குப் பின்னாலே கதவை அடைத்தார்.
ஆதியாகமம் 7 : 17 (RCTA)
பின் நாற்பது நாளும் பூமியின் மீது பெரு வெள்ளம் உண்டாகித் தண்ணீர் பெருக்கெடுக்கவே பெட்டகம் உயர மிதந்து செல்லலாயிற்று.
ஆதியாகமம் 7 : 18 (RCTA)
நீர்த்திரள் மிகுந்த வெள்ளமாகிப் பூமியின் மேலுள்ள எல்லாவற்றையும் மூடினது. பெட்டகம் நீரின் மீது மிதந்து கொண்டிருந்தது.
ஆதியாகமம் 7 : 19 (RCTA)
இன்னும் வெள்ளம் பூமியின் மீது மிஞ்சி அதிகரித்தமையால் வானத்துக்குக் கீழ் அதிக உயரமாய் இருந்த மலைகள் யாவுமே மூடப்பட்டன.
ஆதியாகமம் 7 : 20 (RCTA)
மூடப்பட்ட பெரிய மலைகளுக்கு மேல் பதினைந்து முழ உயரத்திற்குத் தண்ணீர் உயர்ந்து போயிற்று.
ஆதியாகமம் 7 : 21 (RCTA)
பூமியின் மீது நடமாடின உயிரினங்களான எல்லாப் பறவைகளும், வீட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின் மேல் ஊர்வன யாவும், எல்லா மனிதர்களும் அழிந்து போயினர்.
ஆதியாகமம் 7 : 22 (RCTA)
பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்கள் எல்லாம் மாண்டன.
ஆதியாகமம் 7 : 23 (RCTA)
அவ்வாறு கடவுள் மனிதன் முதல் உயிர்ப் பிராணிகள் வரை, ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரை பூமியில் வாழ்ந்து வந்த உயிர்கள் அனைத்தையும் அழித்து விட்டார். அவையெல்லாம் பூமியிலிருந்து மறைந்து போயின. நோவாவும் அவருடன் பெட்டகத்திலிருந்தவர்களுமே அப்போது தப்பிப் பிழைத்தார்கள்.
ஆதியாகமம் 7 : 24 (RCTA)
நீர்த்திரள் நூற்றைம்பது நாட்களாகப் பூமியை மூடிக்கொண்டிருந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: