ஆதியாகமம் 5 : 1 (RCTA)
ஆதாமுடைய சந்ததியாரின் அட்டவணையாவது: கடவுள் தாம் படைத்த நாளில் மனிதனைத் தெய்வச் சாயலாகப் படைத்தார்.
ஆதியாகமம் 5 : 2 (RCTA)
அவர் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்து ஆசீர்வதித்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர் மனிதன் என்னும் பெயரை அவர்களுக்குக் கொடுத்தார்.
ஆதியாகமம் 5 : 3 (RCTA)
நூற்றுமுப்பது ஆண்டுகள் வாழ்ந்த பின் ஆதாம் தன் உருவமும் சாயலும் கொண்ட ஒரு மகனைப் பெற்று, அவனைச் சேத் என்று அழைத்தான்.
ஆதியாகமம் 5 : 4 (RCTA)
சேத்தைப் பெற்ற பின் ஆதாம் எண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 5 (RCTA)
ஆதாமின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 6 (RCTA)
சேத் நூற்றைந்து ஆண்டு வாழ்ந்த பின் ஏனோஸைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 7 (RCTA)
ஏனோஸைப் பெற்ற பின் எண்ணுற்றேழு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 8 (RCTA)
சேத்தின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 9 (RCTA)
ஏனோஸ் தொண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்த பின் காயினானைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 10 (RCTA)
இவன் பிறந்த பின் எண்ணுற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 11 (RCTA)
ஏனோஸின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 12 (RCTA)
காயினான் எழுபது ஆண்டு வாழ்ந்த பின் மகலாலெயேலைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 13 (RCTA)
மகலாலெயேலைப் பெற்ற பின் கயினான் எண்ணுற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 14 (RCTA)
கயினானின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 15 (RCTA)
மகலாலெயேல் அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் யாரேதைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 16 (RCTA)
யாரேதைப் பெற்ற பின் மலலெயேல் எண்ணுற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 17 (RCTA)
மலலெயேலின் வாழ்நாள் மொத்தம் எண்ணுற்றுத் தொண்ணுற்றைந்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 18 (RCTA)
யாரேத் நூற்றருபத்திரண்டு ஆண்டு வாழ்ந்த பின் ஏனோக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 19 (RCTA)
ஏனோக்கைப் பெற்ற பின் எண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 20 (RCTA)
யாரேத்தின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 21 (RCTA)
ஏனோக்கு அறுபத்தைந்து ஆண்டு வாழ்ந்த பின் மெத்துசலாவைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 22 (RCTA)
ஏனோக்கு கடவுளுக்கு உகந்த விதமாய் நடந்து, மெத்துசலாவைப் பெற்ற பின் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 23 (RCTA)
ஏனோக்கின் வாழ்நாள் மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள்.
ஆதியாகமம் 5 : 24 (RCTA)
அவன் கடவுளுக்கு உகந்த விதமாய் நடந்து இவ்வுலகினின்று மறைந்தான். ஏனென்றால் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார்.
ஆதியாகமம் 5 : 25 (RCTA)
மெத்துசலா நூற்றெண்பத்தேழு ஆண்டு வாழ்ந்த பின் லாமேக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 26 (RCTA)
லாமேக்கைப் பெற்ற பின் மெத்துசலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 27 (RCTA)
மெத்துசலாவின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 28 (RCTA)
லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு ஆண்டு வாழ்ந்த பின்பு ஒரு புதல்வனைப் பெற்று:
ஆதியாகமம் 5 : 29 (RCTA)
ஆண்டவராலே சபிக்கப்பட்ட (இந்தப்) பூமியில் எங்கள் உழைப்பிலும் களைப்பிலும் இவனே எங்களுக்குத் தேற்றுபவன் ஆவான். என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 5 : 30 (RCTA)
நோவாவைப் பெற்ற பின் லாமேக்கு ஐந்நூற்றுத் தொண்ணுற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 31 (RCTA)
லாமேக்கின் வாழ்நாள் மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 32 (RCTA)
(31b) நோவா ஐந்நூறு ஆண்டுகள் சென்ற பின் சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

BG:

Opacity:

Color:


Size:


Font: