ஆதியாகமம் 49 : 1 (RCTA)
யாக்கோபு தன் புதல்வர்களை வரவழைத்து: நீங்கள் கூடிவாருங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன்.
ஆதியாகமம் 49 : 2 (RCTA)
கூடிவந்து கூர்ந்து கேளுங்கள். யாக்கோபின் புதல்வர்களே, உங்கள் தந்தையாகிய இஸ்ராயேலக்குச் செவிகொடுங்கள்:
ஆதியாகமம் 49 : 3 (RCTA)
என் மூத்த புதல்வனாகிய ரூபனே, நீ என் வலிமையும் என் துயரத்தின் அடிப்படையும் ஆனவன். வரங்களிலும் முதல்வன்; அதிகாரத்தில் பெரியவனும் நீயே.
ஆதியாகமம் 49 : 4 (RCTA)
தண்ணீரைப் போல் நீ வடிந்து போனாய். உள்ளபடி, உன் தந்தையினுடைய மஞ்சத்தின் மேல், ஏறி, அவனுடைய படுக்கையைத் தீட்டுப் படுத்தத் துணிந்தாய். ஆதலால் நீ ஒருக்காலும் மேன்மை அடைய மாட்டாய்.
ஆதியாகமம் 49 : 5 (RCTA)
சிமையோனும் லேவியும் சகோதரர்களாம்; முறையற்ற போராட்டத்தின் கருவிகளாம்.
ஆதியாகமம் 49 : 6 (RCTA)
என் ஆன்மா அவர்களுடைய சதியாலோசனைக்கு உடன்படாதிருப்பதாக. அவர்களுடைய கூட்டத்தில் எனக்குப் பெருமை உண்டாகாதிருப்பதாக. ஏனென்றால், அவர்கள் கோப வெறியால் ஒரு மனிதனைக் கொன்றார்கள்; வேண்டுமேன்றே அரண்களை அரித்தார்கள்.
ஆதியாகமம் 49 : 7 (RCTA)
அவர்களுடைய மூர்க்கமான கோபவெறியும் கொடுமையான எரிச்சலும் சபிக்கப் படக்கடவன. அவர்களை யாக்கோபினின்று பிரியவும் இஸ்ராயேலினின்று சிதறவும் பண்ணுவேன்.
ஆதியாகமம் 49 : 8 (RCTA)
யூதாவே, உன் சகோதரர் உன்னைத் துதித்துப் புகழ்வார்கள். உன் கை உன் பகைவருடைய தலையின் மேல் இருக்கும். உன் தந்தையின் புதல்வர்கள் உன்னை வணங்குவார்கள்.
ஆதியாகமம் 49 : 9 (RCTA)
யூதா சிங்கக் குட்டியாம். இரையைக் கவர எழுந்தாய், என் மகனே. ஆண் சிங்கத்தைப் போலும் பெண் சிங்கத்தைப் போலும் இளைப்பாற மடங்கிப் படுத்தாய். அவனைத் தட்டி எழுப்புகிறவன் யார்?
ஆதியாகமம் 49 : 10 (RCTA)
அனுப்பப்பட இருக்கிறவர் வரும் வரையிலும் செங்கோல். யூதாவை விட்டு (நீங்குவதும் இல்லை); அவனுடைய சந்ததியை விட்டுக் கடவுள் விலகுவதும் இல்லை.
ஆதியாகமம் 49 : 11 (RCTA)
மகனே, அவன் திராட்சைத் தோட்டத்தில் தன் கழுதைக் குட்டியையும், திராட்சைக் கொடியில் தன் கழுதையையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் மேற்சட்டையையும், திராட்சைச் சாரத்தில் தன் அங்கியையும் தேய்ப்பான்.
ஆதியாகமம் 49 : 12 (RCTA)
அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தை விட அழகுள்ளவை. அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
ஆதியாகமம் 49 : 13 (RCTA)
சாபுலோன், கடற்கரையிலும் கப்பற்றுறை அருகிலும் குடியிருப்பான். சீதோன் வரையிலும் அவன் பரவுவான்.
ஆதியாகமம் 49 : 14 (RCTA)
இசக்கார், தன் சொத்துக்களின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற வலிமையுள்ள கழுதையாம்.
ஆதியாகமம் 49 : 15 (RCTA)
அவன், இளைப்பாறுதல் நல்லதென்றும், நாடு மிக வசதியானதென்றும் கண்டான்; சுமைக்குத் தன் தோளைச் சாய்த்துக் கப்பம் கட்டுவதற்கு இணங்கினானே!
ஆதியாகமம் 49 : 16 (RCTA)
தான், இஸ்ராயேலின் வேறொரு கோத்திரம் போல் தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
ஆதியாகமம் 49 : 17 (RCTA)
தான், வழியில் கிடக்கிற பாம்பு போலவும் பாதையில் தென்படுகிற பாம்பு போலவும் ஆகி, குதிரை மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படி அதன் குதிக்காலைக் கடிக்கக் கடவான்.
ஆதியாகமம் 49 : 18 (RCTA)
ஆண்டவரே! உம்முடைய (மீட்பை) எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்.
ஆதியாகமம் 49 : 19 (RCTA)
காத், ஆயுதங்களை அணிந்தவனாய் இஸ்ராயேல் முன்னிலையில் போர்புரிவான்; ஆயுதங்களை அணிந்தவனாய்த் திரும்புவான்.
ஆதியாகமம் 49 : 20 (RCTA)
ஆசாரின் உணவு கொழுத்ததாம்; அரசர்களுக்கும் இன்பம் கொடுக்குமாம்.
ஆதியாகமம் 49 : 21 (RCTA)
நெப்தலியோ விடுதலை பெற்ற மகனும். அவன் சிறப்பான பேச்சுக்களையும் பேசுவான்.
ஆதியாகமம் 49 : 22 (RCTA)
சூசை விருத்தி அடையும் புதல்வனாம். அவன் பலுகிப் பெருகுவான். அவன் முகம் அழகானது. அவனைப் பார்க்க வேண்டிப் பெண்கள் மதில் மேல் ஏறுவார்கள்.
ஆதியாகமம் 49 : 23 (RCTA)
ஆனால், அம்புகளைக் கையில் ஏந்திய பகைவர் அவனை வலிய வம்புக்கு இழுத்து வாதாடினார்கள்; அவன் மீது பொறாமை கொண்டார்கள்.
ஆதியாகமம் 49 : 24 (RCTA)
அவனுடைய வில்லோ உறுதியாய் நின்றது. யாக்கோபின் வல்லபக் (கடவுளால்) அவன் கையிலும் புயத்திலும் இருந்த சங்கிலிகள் உடைக்கப்பட்டன. அதனால் அவன் இஸ்ராயேலின் மேய்ப்பனும் அரணும் ஆனான்.
ஆதியாகமம் 49 : 25 (RCTA)
உன் தந்தையின் கடவுளே உனக்குத் துணையாய் இருப்பார். எல்லாம் வல்லரே உன்னைப் பற்பல ஆசீர்களால் நிரப்புவார். உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசிராலும், கீழே பாதாளத்திலிருந்து உண்டாகும் ஆசீராலும் கொங்கைகளுக்கும் கர்ப்பத்திற்கும் உரிய ஆசீர்களாலும் அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.
ஆதியாகமம் 49 : 26 (RCTA)
உன் தந்தையின் ஆசிகள் அவன் மூதாதையரின் ஆசிகளிலும் சிறந்தவை. நித்திய மலைகளினால் ஆசிக்கப் பட்டிருக்கிறவர் வரும் வரை அவை விருத்தியாகவும், சூசையின் தலை மேலும் அவன் சகோதரரில் நசரேயனாய் இருப்போனின் உச்சந் தலை மேலும் வரவுங்கடவன.
ஆதியாகமம் 49 : 27 (RCTA)
பெஞ்சமினோ பறிக்கும் ஓநாயாம். அவன் காலையில் தன் இரையை உண்பான்; மாலையிலோ கொள்ளைப் பொருளைப் பங்கிடுவான் என்று யாக்கோபு உரைத்தான்.
ஆதியாகமம் 49 : 28 (RCTA)
இவர்கள் எல்லாரும் இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். இவர்களுடைய தந்தை இவர்களுக்கு இவற்றைச் சொல்லி, அவனவனுக்குரிய ஆசிமொழி கூறி அவனவனை ஆசீர்வதித்தான்.
ஆதியாகமம் 49 : 29 (RCTA)
மேலும் அவர்களை நோக்கி: இதோ நான் என் முன்னோரோடு சேர்க்கப்பட இருக்கிறேன். என்னை என் மூதாதையர் அண்டையில், ஏத்தையனான எபிரோனின் நிலத்திலுள்ள இரட்டைக் குகையில் அடக்கம் செய்யக் கடவீர்கள்.
ஆதியாகமம் 49 : 30 (RCTA)
அது கானான் நாட்டிலே மம்பிறேய்க்கு எதிரே இருக்கின்றது. ஆபிரகாம் ஏத்தையனான எபிரோனின் கையில் அதையும் அதற்குரிய நிலத்தையும் சொந்தக் கல்லறை நிலமாய் இருக்கும்படி வாங்கினார்.
ஆதியாகமம் 49 : 31 (RCTA)
அங்கே அவரையும் அவர் மனைவி சாறாளையும் அடக்கம் செய்தார்கள், அங்கே ஈசாக்கையும் அவர் மனைவி இரேபேக்காளையும் சேமித்தார்கள். அங்கே லீயாளையும் அடக்கம் செய்திருக்கிறேன் என்றான்.
ஆதியாகமம் 49 : 32 (RCTA)
ஆதியாகமம் 49 : 33 (RCTA)
(32) யாக்கோபு தன் புதல்வர்களுக்கு அறிவுரை வழங்கி முடித்த பின், தன் கால்களைப் படுக்கையின் மேல் மடக்கி உயிர் துறந்தான்; தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: