ஆதியாகமம் 41 : 1 (RCTA)
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பாரவோன் ஒரு கனவு கண்டான். அது என்னவென்றால்: தான், நதிக் கரையில் நிற்பதாகக் கண்டான்.
ஆதியாகமம் 41 : 2 (RCTA)
நதியிலிருந்து அதிக அழகும் கொழுமையுமுள்ள ஏழு பசுக்கள் கரையேறி வந்து சதுப்பு நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.
ஆதியாகமம் 41 : 3 (RCTA)
பிறகு மெலிந்து நலிந்திருந்த வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து எறிவந்து, கரையிலே பசும்புல் இருந்த இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.
ஆதியாகமம் 41 : 4 (RCTA)
இவை அழகிய மேனியும் கொழுமையுமுள்ள ஏழு பசுக்களையும் விழுங்கி விட்டன. இதைக் கண்டு பாரவோன் விழித்துக் கொண்டான்.
ஆதியாகமம் 41 : 5 (RCTA)
மறுபடியும் அவன் தூங்கினான். தூக்கத்திலே மற்றொரு கனவு கண்டான். அதாவது: ஒரே தாளிலிருந்து செழுமையும் அழகுமுள்ள ஏழு கதிர்கள் ஓங்கி வளர்ந்திருந்தன.
ஆதியாகமம் 41 : 6 (RCTA)
பின், வாடிச் சாவியாய்ப் போயிருந்த வேறு ஏழு கதிர்களும் வெளிப்பட்டு,
ஆதியாகமம் 41 : 7 (RCTA)
முந்திய செழுமையும் அழுகுமுள்ள நல்ல கதிர்களை விழுங்கி விட்டன. பாரவோன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான்.
ஆதியாகமம் 41 : 8 (RCTA)
பொழுது விடிந்த போது, அஞ்சித் திடுக்கிட்டு, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துக் கனவை விவரித்துச் சொன்னான். ஆனால், அதன் பொருளைச் சொல்ல ஒருவராலும் கூடாது போயிற்று.
ஆதியாகமம் 41 : 9 (RCTA)
அப்போது பானத்தலைவன், முன் தனக்கு நேரிட்டதை நினைத்து, பாரவோனை நோக்கி: என் குற்றத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆதியாகமம் 41 : 10 (RCTA)
நம் அரசர் தம் ஊழியர் மீது கோபம் கொண்டு, அடியேனையும் அப்பத் தலைவனையும் படைத் தலைவரின் காவற் கிடங்கிலே அடைக்கக் கட்டளையிட்ட காலத்தில்,
ஆதியாகமம் 41 : 11 (RCTA)
அவனுக்கும் எனக்கும் இனி நிகழப் போவதைக் காட்டும் வெவ்வேறு கனவை நாங்கள் இருவரும் கண்டோம்.
ஆதியாகமம் 41 : 12 (RCTA)
அங்கே படைத்தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். நாங்கள் அவனிடம் கனவுகளைத் தெரிவித்தோம்.
ஆதியாகமம் 41 : 13 (RCTA)
அவன் எங்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நிறைவேறின, உண்மையிலேயே, நான் திரும்ப என் பதவியை பெற்றேன்; மற்றவன் கழுமரத்திலே தூக்கப் பட்டான் என்றான்.
ஆதியாகமம் 41 : 14 (RCTA)
அதைக் கேட்டு அரசன் சூசையை அழைத்து வரக் கட்டளையிட்டான். காவற் கிடங்குகளிலிருந்து அவனை விரைவில் கொண்டு வந்து, சவரம் பண்ணிப் புத்தாடை அணிவித்து, அரசன் முன் நிறுத்தினர்.
ஆதியாகமம் 41 : 15 (RCTA)
அரசன் அவனை நோக்கி: நான் கனவுகள் கண்டேன். அவற்றின் பொருளைச் சொல்ல ஒருவருமில்லை. நீயோ, அப்படிப்பட்டவற்றிற்கு மிக்க அறிவு நுணுக்கத்தோடு பொருள் சொல்ல வல்லவன் என்று கேள்விப் பட்டேன் என்றான்.
ஆதியாகமம் 41 : 16 (RCTA)
சூசை மறுமொழியாக: நானல்ல, கடவுளே பாரவோனுக்குச் சாதகமான விளக்கம் அளிப்பார் என்றான்.
ஆதியாகமம் 41 : 17 (RCTA)
அப்பொழுது பாரவோன் தான் கண்டதை விவரிக்கத் தொடங்கினான்: நான் நதிக்கரையில் நிற்பது போல் கண்டேன்.
ஆதியாகமம் 41 : 18 (RCTA)
மிக அழகும் செழுமையுமிக்க ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளிப்பட்டு, சதுப்பு நில மேய்ச்சல்களில் பசும் புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது,
ஆதியாகமம் 41 : 19 (RCTA)
வேறு ஏழு பசுக்கள் அவற்றைத் தொடர்ந்து வந்தன. இவை எவ்வளவு மெலிந்து நலிந்திருந்தன. என்றால், அவற்றைப்போல் எகிப்து நாடெங்கும் நான் ஒரு போதும் கண்டதில்லை.
ஆதியாகமம் 41 : 20 (RCTA)
இவை முன் சொன்ன பசுக்களை விழுங்கி விட்டன.
ஆதியாகமம் 41 : 21 (RCTA)
ஆயினும், சிறிதுகூட வயிறு புடைக்காமல் முன்போலவே எலும்பும் தோலுமாகத் தள்ளாடிக் கொண்டிருந்தன. நான் அந்நேரம் விழித்துக் கொண்டு, மறுபடியும் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தவனாய்,
ஆதியாகமம் 41 : 22 (RCTA)
வேறொரு கனவு கண்டேன்: செழுமையும் அழகுமுள்ள ஏழு கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்திருந்தன.
ஆதியாகமம் 41 : 23 (RCTA)
பின் வாடிச் சாவியாய்ப் போயிருந்த வேறு ஏழு கதிர்கள் தாளினின்று முளைத்தன.
ஆதியாகமம் 41 : 24 (RCTA)
இவை முன் சொன்ன எழிலும் செழுமையும் உள்ள நல்ல கதிர்களை விழுங்கிவிட்டன. இக்கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், அதன் பொருளைச் சொல்ல எவனாலும் இயலவில்லை என்றான்.
ஆதியாகமம் 41 : 25 (RCTA)
அதற்கு சூசை: அரசரின் இரு கனவுகளும் ஒன்றுதான், கடவுள் எது செய்யக் கருதியிருக்கிறாரோ, அதைப் பாரவோனுக்கு அறிவித்திருக்கிறார்.
ஆதியாகமம் 41 : 26 (RCTA)
அழகிய ஏழு பசுக்களும், நிறைந்த மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களும் ஏழு வளமான ஆண்டுகளாம். அவ்விரண்டு கனவுகளுக்கும் கருத்து ஒன்றே.
ஆதியாகமம் 41 : 27 (RCTA)
இவற்றின் பின் (கரையில்) ஏறிய எலும்பும் தோலுமான ஏழு பசுக்களும், சாவியாய் விளையாத ஏழு கதிர்களும் வரவிருக்கும் பஞ்சத்திற்குரிய ஏழு ஆண்டுகளாம்.
ஆதியாகமம் 41 : 28 (RCTA)
அவை எந்த முறைப்படி நிறைவேறுமென்று கேட்டால்,
ஆதியாகமம் 41 : 29 (RCTA)
இதோ எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏழு ஆண்டுகள் வரப் போகின்றன;
ஆதியாகமம் 41 : 30 (RCTA)
அதன்பின் வேறு ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். அது எப்படிப்பட்ட பஞ்சமென்றால், முந்தின வளமுள்ள ஆண்டுகள் மறக்கப்பட்டுப் போம். அது நாடு முழுவதையும் பாழாக்கும்.
ஆதியாகமம் 41 : 31 (RCTA)
வறுமையின் மிகுதியால் செழிப்பின். மிகுதி தோல்வியுறும்.
ஆதியாகமம் 41 : 32 (RCTA)
நீர் கண்ட இரண்டாவது கனவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறித்ததேயாம். அது கடவுளால் செய்யப்படுமென்றும், மிக விரைவில் நிறைவேறுமென்றும் சொல்வதற்கு ஆதாரமாய் இருக்கிறது.
ஆதியாகமம் 41 : 33 (RCTA)
ஆதலால், அரசர் இப்போது செய்ய வேண்டியது யாதெனில், அவர் அறிவும் திறமையுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்து நாட்டிற்குத் தலைவனாய் நியமிக்கக் கடவார்.
ஆதியாகமம் 41 : 34 (RCTA)
இவன் எல்லா நாடுகளிலும் செயலர்களை நியமித்து, நல்ல விளைச்சலுள்ள மேற்படி ஏழாண்டுகளில் விளைச்சலின் ஐந்திலொரு பகுதியை வாங்கி,
ஆதியாகமம் 41 : 35 (RCTA)
இப்போதே வரவிருக்கும் ஆண்டுகளிலே களஞ்சியங்களில் சேமித்து வைக்கக்கடவான். இவ்விதமாய், விளையும் தானியங்களெல்லாம் பாரவோன் அதிகாரத்தால் நகரங்களிலே சேகரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
ஆதியாகமம் 41 : 36 (RCTA)
அவவிதமாய், எகிப்தை வருத்தும் ஏழாண்டுப் பஞ்சத்திற்காகத் தானியங்கள் தயாராயிருந்தால், நாடு பஞ்சத்தினால் பாழாகாது என்றான்.
ஆதியாகமம் 41 : 37 (RCTA)
இந்த வார்த்தை பாரவோனுக்கும் அவன் அமைச்சர் அனைவருக்கும் பிரியமாயிற்று.
ஆதியாகமம் 41 : 38 (RCTA)
அவன் அவர்களை நோக்கி: தெய்வ ஞானத்தால் நிறைந்த இந்த மனிதனைப்போல் வேறொருவன் கிடைக்கக் கூடுமோ என்று சொல்லி, பின் சூசையை நோக்கி:
ஆதியாகமம் 41 : 39 (RCTA)
நீர் கூறிய எல்லாவற்றையும் கடவுளே உமக்குத் தெரிவித்திருக்க, உம்மிலும் அதிக ஞானமுடையவனேனும், உமக்கு ஒத்தவனேனும் எனக்குக் கிடைக்கக் கூடுமோ?
ஆதியாகமம் 41 : 40 (RCTA)
நீரே என் அரண்மனைக்குத் தலைவனாய் இருப்பீர். உமது கட்டளைக்கு மக்கள் எல்லாரும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அரியணையைப் பொறுத்த மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன் என்றான்.
ஆதியாகமம் 41 : 41 (RCTA)
மீண்டும் பாரவோன் சூசையை நோக்கி: இதோ எகிப்து நாடு முழுவதற்கும் உம்மைத் தலைவனாக நியமிக்கிறேன் என்று சொல்லி,
ஆதியாகமம் 41 : 42 (RCTA)
தன் கையினின்று முத்திரை மோதிரத்தைக் கழற்றி அதை அவன் கையில் போட்டு, மெல்லிய பட்டு நூலால் நெய்யப்பட்ட ஓர் ஆடையை அவனுக்கு உடுத்தி, பொன் கழுத்தணியை அவன் கழுத்திலே மாட்டி,
ஆதியாகமம் 41 : 43 (RCTA)
அவனைத் தன் இரண்டாம் தேரின்மேல் ஏற்றி: இவரைத் தெண்டனிட்டுப் பணியுங்கள். இவரே எகிப்து நாடு முழுவதற்கும் தலைவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று கட்டியக்காரன் கூறும்படி (கட்டளையிட்டான்).
ஆதியாகமம் 41 : 44 (RCTA)
மேலும், அரசன் சூசையை நோக்கி: நான் பாரவோன்; உம்முடைய உத்தரவின்றி எகிப்து நாடெங்கும் எவனாவது கையையோ காலையோ அசைக்கக் கூடாது என்றான்.
ஆதியாகமம் 41 : 45 (RCTA)
பின், (பாரவோன்) அவனுடைய பெயரையும் மாற்றி, எகிப்திய மொழியில் அவனைப் பூபாலன் என்று அழைத்து, எலியோப்பொலிஸின் குருவாகிய புத்திபாரே என்பவன் புதல்வியான ஆஸ்னேட்டை அவனுக்கு மனைவியாக அளித்தான். அப்போது சூசை எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.
ஆதியாகமம் 41 : 46 (RCTA)
(அவர் அரசனாகிய பாரவோனின் அரண்மனையில் பணி ஏற்ற போது அவருக்கு வயது முப்பது). அவர் எகிப்திலுள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்த்து வந்தார்.
ஆதியாகமம் 41 : 47 (RCTA)
அதற்குள்ளே ஏழாண்டுகளின் மிகுதியான விளைச்சல் தொடங்கியது. அரிக்கட்டாய் அறுக்கப்பட்ட பயிரின் தானியங்கள் களஞ்சியங்களில் சேர்க்கப்பட்டன.
ஆதியாகமம் 41 : 48 (RCTA)
அவ்வண்ணமே மிகுதியான தானியங்களை அந்தந்த நகரங்களில் சேர்த்து வைத்தார்கள்.
ஆதியாகமம் 41 : 49 (RCTA)
கோதுமை எவ்வளவு மிகுதியாக விளைந்ததென்றால், கடற்கரை மணலுக்கு ஒப்பாகவும் அளவுக்கு அடங்காத திரளாகவும் இருந்தது.
ஆதியாகமம் 41 : 50 (RCTA)
பஞ்சம் வருமுன்னே, சூசைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களை எலியோப்பொலிஸின் குருவாகிய புத்திபாரேயின் புதல்வியாகிய ஆஸ்னேட் அவனுக்குப் பெற்றாள்.
ஆதியாகமம் 41 : 51 (RCTA)
சூசை: எல்லாத் துன்பங்களையும் எம் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசேஸ் என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 41 : 52 (RCTA)
பின்: நான் வறியவனாய் இருந்த இந்த நாட்டிலே கடவுள் என்னை விருத்தியாக்கினார் என்று சொல்லி, இளையவனுக்கு எபிராயிம் என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 41 : 53 (RCTA)
எகிப்தில் உண்டான வளமான ஏழாண்டுகளும் முடிந்த பின், சூசை முன்னறிந்து சொல்லியபடி,
ஆதியாகமம் 41 : 54 (RCTA)
ஏழாண்டுப் பஞ்சம் தெடங்கியது. உலகமெங்கும் பஞ்சம் உண்டாயிற்று; ஆயினும், எகிப்து நாடெங்கும் உணவு கிடைத்தது.
ஆதியாகமம் 41 : 55 (RCTA)
பஞ்சம் சூழ்ந்த போது, எகிப்திய மக்கள் உணவுக்காகப் பாரவோனிடம் வந்து ஓலமிட, அவன்: சூசையிடம் சென்று, அவர் உங்களுக்குச் சொல்கிறபடி செய்யுங்கள் என்று அவர்களை அனுப்பி வந்தான்.
ஆதியாகமம் 41 : 56 (RCTA)
வரவர எல்லா நாடுகளிலும் பஞ்சம் அதிகமாகிவிட்டது. ஆகையால், சூசை களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விலைக்குக் கொடுத்து வந்தார். ஏனென்றால், அவர்களும் பஞ்சத்தால் வருந்தினார்கள்.
ஆதியாகமம் 41 : 57 (RCTA)
அன்றியும், பிற நாட்டாரும் பஞ்சத்தின் கொடுமையை முன்னிட்டுத் தானியங்களை விலைக்கு வாங்குவதற்கு சூசையிடம் வந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57

BG:

Opacity:

Color:


Size:


Font: