ஆதியாகமம் 17 : 1 (RCTA)
ஆபிராம் தொண்ணுற்றொன்பது வயதுள்ளவனாய் இருந்த போது ஆண்டவர் அவனுக்குத் தோன்றி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ நமக்குமுன் நடந்து உத்தமனாய் இரு.
ஆதியாகமம் 17 : 2 (RCTA)
நாம் நமக்கும் உனக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்து, உன்னை மிகுதியாய்ப் பெருகச் செய்வோம் என்றார்.
ஆதியாகமம் 17 : 3 (RCTA)
ஆபிராம் முகம் குப்புற விழுந்து தொழுதான்.
ஆதியாகமம் 17 : 4 (RCTA)
அப்பொழுது கடவுள் அவனைப் பார்த்து: நாம் சுயம்பு. இதோ, நம் உடன்படிக்கை உன்னுடன் இருக்கும். நீ திரளான மக்களுக்குத் தந்தையாவாய்.
ஆதியாகமம் 17 : 5 (RCTA)
இன்று முதல் உன் பெயர் ஆபிராம் அன்று, ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய். ஏனென்றால், அநேக மக்களுக்கு உன்னைத் தந்தையாக ஏற்படுத்தினோம்.
ஆதியாகமம் 17 : 6 (RCTA)
நாம் உன்னைப் பெருந்திரளாய் விருத்தியடையச் செய்து பல இனத்தாருக்கும் உன்னைத் தந்தையாக்குவோம். அரசர்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள்.
ஆதியாகமம் 17 : 7 (RCTA)
நமக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நம் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாய் நிறுவுவோம். அதனாலே உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததியார்களுக்கும் நாம் கடவுளாக இருப்போம்.
ஆதியாகமம் 17 : 8 (RCTA)
அன்றியும், உனக்கு அன்னிய நாடாகிய இந்தக் கானான் நாடு முழுவதையும் உனக்கும் உன் சந்ததியாருக்கும் நித்திய உரிமையாகக் கொடுத்து, நாம் அவர்களுக்குக் கடவுளாக இருப்போம் என்றார்.
ஆதியாகமம் 17 : 9 (RCTA)
மீண்டும் கடவுள் ஆபிரகாமை நோக்கி: ஆதலால், நமது உடன்படிக்கையை நீயும் உனக்குப் பின் உன் சந்ததியாரும் தலைமுறை தலைமுறையாய்க் கடைப்பிடித்து வருவீர்களாக.
ஆதியாகமம் 17 : 10 (RCTA)
நமக்கும் உங்களுக்கும் உனக்குப் பின் வரும் சந்ததிக்குமிடையே உள்ள உடன்படிக்கை என்னவெனில், உங்களுக்குப் பிறக்கும் எல்லா ஆண் பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம் செய்யப்படும் என்பதாகும்.
ஆதியாகமம் 17 : 11 (RCTA)
நமக்கும் உங்களுக்குமிடையே (ஏற்பட்ட) உடன்படிக்கைக்கு அடையாளமாக உங்கள் நுனித்தோலை வெட்டுவீர்களாக.
ஆதியாகமம் 17 : 12 (RCTA)
உங்களில் ஆணாய்ப் பிறந்த குழந்தை எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படும். உங்கள் வீட்டில் பிறந்த ஊழியனும் சரி, விலைக்கு வாங்கின அடிமையும் சரி, புறவினத்துப் பிள்ளையும் சரி, உங்களில் தலைமுறை தலைமுறையாய்ப் பிறக்கும் ஆண் பிள்ளைகளெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்படுவார்கள்.
ஆதியாகமம் 17 : 13 (RCTA)
இவ்வாறு நம் உடன்படிக்கை உங்கள் மாமிசத்திலே நித்திய உடன்படிக்கையாய் இருக்கும்.
ஆதியாகமம் 17 : 14 (RCTA)
நுனித் தோல் வெட்டப்படாத ஆண்பிள்ளை இருந்தால், அப்படிப்பட்டவன் நம் உடன்படிக்கையை மீறினபடியால் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான் என்றார்.
ஆதியாகமம் 17 : 15 (RCTA)
மீண்டும் கடவுள் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாறாயியை, இனிச் சாறாயி என்றழையாமல், சாறாள் என்று அழைப்பாய்.
ஆதியாகமம் 17 : 16 (RCTA)
நாம் அவளை ஆசீர்வதிப்போம். அவள் மூலம் நாம் உனக்குத் தரவிருக்கிற புதல்வனையும் ஆசீர்வதிப்போம். இவன் பல மக்களுக்கும் முதல்வனாவான்; எல்லா இனத்தவரின் அரசர்களுக்கும் தந்தையாவான் என்றருளினார்.
ஆதியாகமம் 17 : 17 (RCTA)
ஆபிரகாம் முகம் குப்புற விழுந்து, புன் முறுவலோடு: நூறு வயதுள்ளவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணுறு வயதுள்ள சாறாள் பிள்ளை பெறுவாளோ என்று உள்ளத்தில் நினைந்து, கடவுளைப் பார்த்து:
ஆதியாகமம் 17 : 18 (RCTA)
இஸ்மாயில் உம் முன்னனிலையில் பிழைக்கக் கடவான் என்று விண்ணப்பம் செய்தார்.
ஆதியாகமம் 17 : 19 (RCTA)
அதற்குக் கடவுள் ஆபிரகாமை நோக்கி; உன் மனைவி சாறாள் உனக்கு ஒரு புதல்வனைப் பெறுவாள். அவனுக்கு ஈசாக் என்று பெயரிடுவாய். நம் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிறுவுவோம்.
ஆதியாகமம் 17 : 20 (RCTA)
அன்றியும் இஸ்மாயிலுக்காக நீ செய்த விண்ணப்பத்தையும் கேட்டருளினோம். இதோ, அவனுக்கு நாம் ஆசீர் அளிப்போம். அவனை நாம் மிகவும் பலுகிப் பெருகச் செய்வோம். அவன் பன்னிரண்டு தலைவர்களைப் பெறுவான். அவனை மாபெரும் இனமாக விருத்தியடையச் செய்வோம்.
ஆதியாகமம் 17 : 21 (RCTA)
ஆனால், வருகிற ஆண்டு இதே காலத்தில் சாறாள் உனக்குப் பெறவிருக்கிற ஈசாக்கோடு நாம் நம் உடன்படிக்கையை ஏற்படுத்துவோம் என்றார்.
ஆதியாகமம் 17 : 22 (RCTA)
ஆண்டவர் ஆபிரகாமோடு பேசி முடிந்த பின்பு ஆபிரகாமை விட்டு மறைந்தார்.
ஆதியாகமம் 17 : 23 (RCTA)
ஆபிரகாம் தம் மகனான இஸ்மாயிலும், தம் வீட்டில் பிறந்த ஊழியரும், விலைக்கு வாங்கப் பட்டிருந்த அனைவருமாகிய தம் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களையும் அன்றே அழைத்துக் கடவுள் தமக்குக் கட்டளையிட்ட வண்ணம், உடனே அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.
ஆதியாகமம் 17 : 24 (RCTA)
ஆபிரகாம் தமக்குத்தாமே நுனித் தோலை வெட்டிக் கொண்டார். அப்பொழுது அவருக்குத் தொண்ணுற்றொன்பது வயது.
ஆதியாகமம் 17 : 25 (RCTA)
அவர் மகனான இஸ்மாயில் பதின்மூன்று வயதுள்ள பிள்ளையாய் இருந்தான்.
ஆதியாகமம் 17 : 26 (RCTA)
ஒரே நாளில் ஆபிரகாமும், அவர் மகன் இஸ்மாயிலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
ஆதியாகமம் 17 : 27 (RCTA)
அவர் வீட்டில் பிறந்திருந்த எல்லா ஊழியர்களும், விலைக்கு வாங்கப் பட்ட அடிமைகளும், அன்னியர்களுமாகிய அவர் வீட்டு ஆடவர் அனைவரும் அவ்வாறே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: