எசேக்கியேல் 26 : 1 (RCTA)
பதினோராம் ஆண்டில் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 26 : 2 (RCTA)
மனிதா, தீர் நகரம் யெருசலேமைக் குறித்து, 'ஆ, ஆ, மக்கள் நிறைந்த நகரத்தின் கதவுகள் உடைபட்டன; அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது குடிகளில்லா நகரமாகும், நானோ மக்களால் நிரப்புவேன்' என்று சொல்லிற்று; அதனால்,
எசேக்கியேல் 26 : 3 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: 'தீர் நகரமே, இதோ நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; கடலலை போலப் புறவினத்தாரை உனக்கெதிராய் எழுப்புவோம்.
எசேக்கியேல் 26 : 4 (RCTA)
அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடிப்பார்கள்; இடிந்த மண்ணும் அதில் இராதபடி அகற்றி, வெறும் கற்பாறையாக நாம் ஆக்குவோம்;
எசேக்கியேல் 26 : 5 (RCTA)
கடல் நடுவில் அதை வலை காயுமிடமாக்குவோம்; ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; அது புறவினத்தார்க்குக் கொள்ளைப் பொருள் ஆகிவிடும்.
எசேக்கியேல் 26 : 6 (RCTA)
வெளியூர்களான அதன் புதல்வியர் வாளுக்கு இரையாகி வீழ்வார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
எசேக்கியேல் 26 : 7 (RCTA)
ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, அரசர்க்கு அரசனாகிய நபுக்கோதனசார் என்னும் பபிலோன் அரசனை, வடக்கிலிருந்து தீருக்கெதிராய் வரச்செய்வோம்: அவன், குதிரைகளோடும் தேர்களோடும், குதிரை வீரர்களோடும் பெருங் கூட்டத்தோடும், திரளான படைகளோடும் பாய்ந்து வருவான்.
எசேக்கியேல் 26 : 8 (RCTA)
வெளியூர்களான உன் புதல்வியரை வாளால் வீழ்த்தி, கொத்தளங்களால் உன்னை வளைத்து, கோட்டைகளால் உன்னைச் சூழ்ந்து, கூரை போலக் கேடயங்கள் தூக்கி உனக்கெதிராய்ப் போர் புரிவான்.
எசேக்கியேல் 26 : 9 (RCTA)
மதில் இடிக்கும் எந்திரங்களை எதிரே வைத்து உன் கோபுரங்கள் அனைத்தையும் இடித்து நொறுக்குவான்;
எசேக்கியேல் 26 : 10 (RCTA)
அது கிளப்பும் புழுதி உன்னை மூடி மறைக்கும் அளவுக்கு, அவனது குதிரைப்படை பெரிதாய் இருக்கும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவது போல், அவன் உனக்குள் நுழையும் போது, குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் செய்யும் பேரிரைச்சல் உன் மதில்களை அதிரச் செய்யும்.
எசேக்கியேல் 26 : 11 (RCTA)
அவன் குதிரைகளின் குளம்புகளால் உன் தெருக்களெல்லாம் மிதிக்கப்படும்; உன் மக்களை வாளால் வெட்டுவான்; உன் பெருந் தூண்கள் தரையில் சாயும்.
எசேக்கியேல் 26 : 12 (RCTA)
உன் செல்வத்தைக் கொள்ளையிடுவார்கள், உன் சரக்குகளைப் பறிப்பார்கள், உன் மதில்களை இடிப்பார்கள், அழகிய வீடுகளை அழிப்பார்கள், உன்னிலுள்ள கற்களையும் மரங்களையும் மண்ணையும் தண்ணீரில் எறிவார்கள்.
எசேக்கியேல் 26 : 13 (RCTA)
இசை முழக்கத்தை உன்னிடத்தில் ஒயப்பண்ணுவோம், உன் வீணையோசை இனிமேல் கேட்காது.
எசேக்கியேல் 26 : 14 (RCTA)
நீ வெறுங் கற்பாறை போல் ஆவாய்; வலைகள் காயும் இடமாய் இருப்பாய்; இனி மீண்டும் கட்டப்படமாட்டாய்; ஏனெனில் ஆண்டவராகிய நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 26 : 15 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் தீர் நகருக்குக் கூறுகிறார்: நீ வீழ்ச்சியுற்று, உன் மக்கள் கொன்று குவிக்கப்படும் போது, உன்னில் காயம் பட்டவர்கள் பயங்கரமாய் அலறி ஒலமிடும் ஒசையால் தீவுகள் அதிருமல்லவா?
எசேக்கியேல் 26 : 16 (RCTA)
கடற்கரை வாசிகளின் தரைவர்கள் அனைவரும், தங்கள் இருக்கைகளை விட்டிறங்கித் தங்கள் மகிமையின் அடையாளமான ஆடைகளைக் கழற்றி விட்டுச் சித்திர உடைகளை உரிந்து போடுவார்கள்; திகில் பிடித்தவர்களாய் மயங்குவார்; தரையிலே உட்கார்ந்து, நீ திடீரென வீழ்ச்சியுற்றதை எண்ணி எண்ணி வியப்படைவார்கள்.
எசேக்கியேல் 26 : 17 (RCTA)
அவர்கள் புலம்பி அழுது உனக்குச் சொல்வார்கள்: 'பேர்பெற்ற பட்டினமே, கடலின் அரசியே, நீயும் உன் குடிகளும் கடலில் வலிமை காட்டி, கடற்கரை நாடுகளுகெல்லாம் அச்சம் தந்தாயே, நீ இப்படி வீழ்ச்சியுற்றது எவ்வாறு?
எசேக்கியேல் 26 : 18 (RCTA)
நீ வீழ்ச்சியுற்ற நாளாகிய இன்று, தீவுகள் திகில் கொள்ளுகின்றன; ஆம், நீ மறைந்து போவதைக் கண்டு கடலின் தீவெல்லாம் கலங்கித் திடுக்கிடும்.'
எசேக்கியேல் 26 : 19 (RCTA)
ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் உன்னைக் குடியற்ற பட்டணம் போலப் பாழ்படுத்தி, உன் மேல் புயலை எழுப்பிக் கடல் நீரால் உன்னை மூழ்கடித்து,
எசேக்கியேல் 26 : 20 (RCTA)
ஆழ்ந்த பாதாளத்தில் இறங்கிய பண்டைய மக்களுடன் உன்னையும் தள்ளி, அங்கே அந்தப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நீயும் பாழடைந்த படுகுழியிலே வாழச் செய்வோம்; உன்னில் மக்கள் வாழமாட்டார்கள்; வாழ்வோர் நாட்டில் உனக்கு இடமிருக்காது.
எசேக்கியேல் 26 : 21 (RCTA)
கொடிய முடிவுக்கு உன்னைக் கொண்டு வருவோம்; நீ இனி இருக்கமாட்டாய்; உன்னைத் தேடுவார்கள்; நீ காணப்படமாட்டாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: