எசேக்கியேல் 22 : 1 (RCTA)
மேலும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 22 : 2 (RCTA)
மனிதா, இரத்தத்தைச் சிந்தின யெருசலேமுக்கு நீதி செலுத்த மாட்டாயோ? அதைத் தீர்ப்பிட மாட்டாயோ?
எசேக்கியேல் 22 : 3 (RCTA)
அப்படியானால் அதனுடைய அக்கிரமங்களையெல்லாம் எடுத்துக்காட்டி, அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தனக்குத் தண்டனை நாள் விரைவில் வரும்படி, தன் நடுவில் இரத்தத்தைச் சிந்தித் தனக்கு எதிராகச் சிலைகளை உண்டு பண்ணித் தன்னையே தீட்டுப்படுத்திக் கொண்ட பட்டணம் இதுவே.
எசேக்கியேல் 22 : 4 (RCTA)
இரத்தத்தைச் சிந்தி, அதனால் குற்றவாளியாகிச் சிலைகளை உண்டு பண்ணி, அதனால் உன்னேயே தீட்டுப்படுத்தி உன் நாட்களைக் குறைத்து, அதனால் உன் கடைசி நாளை நீயே வரவழைத்துக் கொண்டாய்; ஆகையால் உன்னைப் புறவினத்தார்க்கு நிந்தையாகவும், அண்டை நாட்டார்க்குப் பரிகாசமாகவும் ஆக்கினோம்;
எசேக்கியேல் 22 : 5 (RCTA)
உனக்கு அருகில் இருப்பவர்களும், தொலைவில் இருப்பவர்களும் பேர் கெட்ட நகரம் என்றும், அமளி நிறைந்த ஊரென்றும் உன்னை இகழ்வார்கள்.
எசேக்கியேல் 22 : 6 (RCTA)
இதோ, இஸ்ராயேலின் தலைவர்கள் தத்தம் வல்லமைக்கேற்ப உன் நடுவில் இரத்தம் சிந்துவதே வேலையாய் இருந்தார்கள்.
எசேக்கியேல் 22 : 7 (RCTA)
தாய் தந்தையரை உன் நடுவில் அவமதித்தார்கள்; உன்னை நாடி வந்த அந்நியருக்கு இடுக்கண் செய்தார்கள்; உன்னிடமுள்ள கைம்பெண்களையும் அனாதைப் பிள்ளைகளையும் துன்புறுத்தினார்கள்.
எசேக்கியேல் 22 : 8 (RCTA)
நீயோ நமது கோயிலை அவசங்கைப்படுத்தி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தம் இழக்கச் செய்தாய்.
எசேக்கியேல் 22 : 9 (RCTA)
இரத்தத்தைச் சிந்தும் அக்கிரமிகள் உன்னில் இருக்கிறார்கள்; மலைகளின் மேல் படைக்கப்பட்டதை உண்ணுகிறார்கள்; உன் நடுவில் அக்கிரமம் செய்யத்துணிகிறார்கள்;
எசேக்கியேல் 22 : 10 (RCTA)
தங்கள் தந்தையின் நிருவாணத்தை வெளிப்படுத்துகிறவர்களும், தீட்டுப்பட்ட பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னில் உள்ளனர்.
எசேக்கியேல் 22 : 11 (RCTA)
ஒருவன் தன் அயலான் மனைவியைக் கெடுக்கிறான்; இன்னொருவன் தன் மருமகளைக் கெடுத்துக் கற்பழிக்கிறான்; மற்றொருவன் சொந்தத் தந்தைக்குப் பிறந்த தன் உடன் பிறந்த சகோதரியை முறைகேடாய்க் கெடுக்கிறான்.
எசேக்கியேல் 22 : 12 (RCTA)
உன்னில் பலர் கொலை செய்ய இலஞ்சம் வாங்குகிறார்கள்; நீ வட்டி வாங்குகிறாய்; கொடுத்ததற்கு அதிகமாய்த் திரும்பப் பெறுகிறாய்; பொருளாசையால் அயலானை ஒடுக்குகிறாய்; நம்மை மறந்துவிட்டாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 22 : 13 (RCTA)
இதோ, உன் பொருளாசையையும், உன் நடுவில் சிந்தப்பட்ட இரத்தத்தையும் கண்டு நாம் கைகளைத் தட்டுகிறோம்.
எசேக்கியேல் 22 : 14 (RCTA)
நாம் உன்னைத் தண்டிக்கும் நாட்களில் உன் இதயம் அதைத் தாங்குமோ? உன் கைகள் திடமாக இருக்குமோ? ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; இதைச் செய்தே தீருவோம்.
எசேக்கியேல் 22 : 15 (RCTA)
உன்னைப் புறவினத்தார் நடுவில் சிதறடித்து, வேற்று நாடுகளுக்கு விரட்டியடித்து, உன் அக்கிரமத்தை உன்னிடமிருந்து அகற்றுவோம்.
எசேக்கியேல் 22 : 16 (RCTA)
வேற்றினத்தார் கண்முன் உன்னால் நமது பரிசுத்தம் குலைந்து போகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்."
எசேக்கியேல் 22 : 17 (RCTA)
ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 22 : 18 (RCTA)
மனிதா, இஸ்ராயேல் வீட்டார் நமக்குக் களிம்பாகி விட்டார்கள்; அவர்கள் எல்லாம் நெருப்பில் கிடக்கும் பித்தளை, வெள்ளீயம், இரும்பு, காரீயம் ஆனார்கள்; வெள்ளியின் களிம்பானார்கள்.
எசேக்கியேல் 22 : 19 (RCTA)
ஆகையால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் எல்லாரும் களிம்பாகிவிட்டதால், உங்களைவரையும் யெருசலேமில் ஒன்றுசேர்ப்போம்;
எசேக்கியேல் 22 : 20 (RCTA)
வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் இவை நெருப்பில் உருக்கப்படுவது போல, நமது கோப அக்கினியால் உங்களை ஒன்று சேர்த்து உருக்குவோம்.
எசேக்கியேல் 22 : 21 (RCTA)
நாம் உங்களைக் கூட்டி, நமது கோப அக்கினியால் உங்களைச் சுட்டெரிப்போம்; நீங்கள் யெருசலேமின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.
எசேக்கியேல் 22 : 22 (RCTA)
உலையில் வெள்ளி உருக்கப்படுவது போல நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள்; நமது கோபத்தை உங்கள் மேல் காட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்."
எசேக்கியேல் 22 : 23 (RCTA)
அன்றியும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 22 : 24 (RCTA)
மனிதா, அந்த நகருக்குச் சொல்: நீ சுத்தப்படுத்தப்படாத பூமி; ஆண்டவர் உன் மேல் சினங்கொண்டு மழை பொழியவில்லை.
எசேக்கியேல் 22 : 25 (RCTA)
பொய் தீர்க்கதரிசிகள் அதன் நடுவில் ஒப்பந்தம் செய்து கொண்டு, கார்ச்சிக்கும் சிங்கம் இரை தேடிப் பிடிப்பது போல், ஆன்மாக்களை விழுங்கினார்கள்; மனிதா உயிர்களைக் குடித்தார்கள்; செல்வத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும் பறித்துக் கொண்டார்கள்; கைம்பெண்களை மிகுதிப்படுத்தினார்கள்.
எசேக்கியேல் 22 : 26 (RCTA)
அதனுடைய குருக்கள் நமது சட்டத்தை அவமதித்தார்கள்; பரிசுத்தமானவற்றைத் தீட்டுப்படுத்தினார்கள்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமற்றதற்கும் வேற்றுமை பாராமலும், அசுத்தமானதையும் அசுத்தமற்றதையும் பிரித்துணர்த்தாமலும் இருந்தார்கள்; நமது ஒய்வுநாளைப் பொருட்படுத்தவில்லை; அதனால் அவர்கள் நடுவில் நாம் அவமதிக்கப்பட்டோம்.
எசேக்கியேல் 22 : 27 (RCTA)
அதிலுள்ள தலைவர்களோ இரையைக் கவ்வும் ஒநாய்கள் போலத் தங்கள் பொருளாசையால் செல்வம் திரட்டுவதற்காகக் கொலை செய்யவும், ஆன்மாக்களைக் கெடுக்கவும் தயங்கவில்லை.
எசேக்கியேல் 22 : 28 (RCTA)
அதனுடைய பொய்த் தீர்க்கதரிசிகள், வெளிப்பூச்சுப் பூசிக் கொண்டு, போலிக்காட்சிகள் கண்டு, பொய்களைச் சொல்லி ஆண்டவர் சொல்லாததை ஆண்டவர் சொன்னதாகக் கூறிப் பிதற்றினார்கள்.
எசேக்கியேல் 22 : 29 (RCTA)
மக்களோ பிறர்பொருளைப் பறித்தார்கள்; கொள்ளை அடித்தார்கள்; ஏழைகளையும் எளியவர்களையும் ஒடுக்கினார்கள்; அந்நியரை அநியாயமாய்த் துன்புறுத்தினார்கள்.
எசேக்கியேல் 22 : 30 (RCTA)
நமக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நடுவில் சுவர் போல நின்று, நாம் இந்த நாட்டை அழிக்காதபடி தடுக்கக் கூடியவன் ஒருவனைத் தேடினோம்; அப்படிப்பட்டவன் எவனையும் காணோம்.
எசேக்கியேல் 22 : 31 (RCTA)
ஆகையால் நமது ஆத்திரத்தை அவர்கள் மேல் காட்டினோம்; நமது கோபாக்கினியால் அவர்களை அழித்தோம்; அவர்கள் குற்றங்களை அவர்கள் மேலேயே சுமத்தினோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: