பிரசங்கி 7 : 1 (RCTA)
(2) விலையுயர்ந்த நறுமணத் தைலங்களைக் காட்டிலும் நற்புகழே நல்லது. பிறந்த நாளைக் காட்டிலும் இறந்த நாள் நல்லது.
பிரசங்கி 7 : 2 (RCTA)
(3) விருந்து வீட்டிற்குப் போவதைவிடத் துக்க வீட்டுக்குப் போவது நல்லது. ஏனென்றால், இழவு வீட்டிலே எல்லா மனிதருக்கும் முடிவு உண்டென்று காணப்படுவதால், உயிரோடிருக்கிறவன் தனக்கு நிகழவிருப்பதைச் சிந்திப்பான்.
பிரசங்கி 7 : 3 (RCTA)
(4) சிரிப்பதைக் காட்டிலும் வருத்தமுற்றிருப்பதே நல்லது. ஏனென்றால், முகவாட்டத்தால் பாவிகளுடைய இதயம் திருத்தப்படும்.
பிரசங்கி 7 : 4 (RCTA)
(5) துக்கம் எங்கேயோ, அங்கேயே ஞானிகளின் இதயமும். மகிழ்ச்சி எங்கேயோ, அங்கேயே மூடனுடைய இதயமும்.
பிரசங்கி 7 : 5 (RCTA)
(6) மூடர்களின் இச்சக வர்த்தைகளால் ஏய்க்கப்படுவதைக் காட்டிலும் ஞானிகளின் வார்த்தைகளால் கண்டிக்கப்படுவதே நலம்.
பிரசங்கி 7 : 6 (RCTA)
(7) ஏனென்றால், பானையின் கீழ்ப் படபடவென்று எரியும் முட்களின் ஓசை எப்படியோ அப்படியே அறிவில்லாதவனுடைய சிரிப்பும். ஆனால், இதுவும் வீண்தான்.
பிரசங்கி 7 : 7 (RCTA)
(8) அவதூற்றால் ஞானி வருத்தப்படுவதுடன் அவனுடைய மனநிலையும் குலைந்துபோகிறது.
பிரசங்கி 7 : 8 (RCTA)
(9) காரியத்தைத் தொடங்குகிறதைவிட அதை முடிப்பது நலம். செருக்குள்ள மனிதனைக் காட்டிலும் பொறுமையுள்ளவனே சிறந்தவன்.
பிரசங்கி 7 : 9 (RCTA)
(10) விரைவில் கோபங் கொள்ள வேண்டாம். மூடர்களுடைய இதயம் கோபத்தின் இருப்பிடம்.
பிரசங்கி 7 : 10 (RCTA)
(11) நிகழ் காலத்தைக் காட்டிலும் கடந்த காலமே நலமாய் இருந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்க வேண்டாம். இப்படிக் கேட்பது மூடத்தனமே.
பிரசங்கி 7 : 11 (RCTA)
(12) செல்வத்தோடு கூடிய ஞானம் அதிகப் பயனுடையதும், சூரியனைப் பார்க்கிறவர்களுக்கு அதிகப் பயனுள்ளது மரம்.
பிரசங்கி 7 : 12 (RCTA)
(13) ஏனென்றால், ஞானமும் கேடயம்; பணமும் கேடயம். ஆனால், ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; அறிவும் வாழ்வு தரும்; பணமோ அதைத் தராது.
பிரசங்கி 7 : 13 (RCTA)
(14) கடவுளுடைய செயல்களைக் கவனித்துப் பார். அவர் எவனை வெறுத்துத் தள்ளிவிட்டாரோ அவன் அவன் சீர்ப்படவே மாட்டான்.
பிரசங்கி 7 : 14 (RCTA)
(15) வாழ்வு நாளில் நன்மைகளை அனுபவித்துக்கொண்டு, தாழ்வு நாளுக்கு உன்னைத் தயார்படுத்துவாயாக. உண்மையிலே கடவுளே வாழ்வு நாளையும் செய்தார்; தாழ்வு நாளையும் செய்தார். இதைப் பற்றிக் கடவுளுக்கு விரோதமாய் ஒன்றும் சொல்லக்கூடாது.
பிரசங்கி 7 : 15 (RCTA)
(16) மேலும், என் வீணான நாட்களில் நான் கண்டது என்ன வென்றால்: நீதியாய் நடக்கிற நீதிமான் துன்பத்தில் இருப்பதைக் கண்டேன்; அக்கிரமமாய் நடக்கிற பாவி வெகுநாள் வாழ்வதைக் கண்டேன்.
பிரசங்கி 7 : 16 (RCTA)
(17) நீதியிலே கூட அளவுக்கு மிஞ்சி நீதிமானாய் இருக்க வேண்டாம். ஞானத்திலும் அளவோடே ஞானியாய் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மூடனாவாய்.
பிரசங்கி 7 : 17 (RCTA)
(18) கடவுளுக்குத் துரோகம் செய்யாதே; அதிகப் பேதையாய் இராதே; இல்லாவிடில் உன் காலத்துக்கு முன்னே சாவாய்.
பிரசங்கி 7 : 18 (RCTA)
(19) நீதிமானை ஆதரிப்பதே சிறந்ததே; ஆயினும், பாவியைக் கைவிடலாகாது. கடவுளுக்குப் பயப்படுகிறவன் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்க வண்டும்.
பிரசங்கி 7 : 19 (RCTA)
(20) நகரத்துப் பத்து அதிகாரிகளைக் காட்டிலும் ஞானமே ஞானியை வலியவனாக்கும்.
பிரசங்கி 7 : 20 (RCTA)
(21) ஏனென்றால், நன்மை செய்தும், பாவம் செய்யாத நீதிமான் இவ்வுலகத்தில் இல்லை.
பிரசங்கி 7 : 21 (RCTA)
(22) சொல்லப்படும் எல்லாப் பேச்சுகளையும் கவனிக்க வேண்டாம்; சிலவேளை உன் சொந்த வேலைக்காரனே உன்னைக்குறித்துக் கோள் சொல்வதைக் கேட்பாய்.
பிரசங்கி 7 : 22 (RCTA)
(23) உள்ளபடி பலமுறை நீயே மற்றவர்களைக் குறித்துக் கோள் சொன்னாயென்று உன் மனச்சாட்சிக்குத் தெரியும்.
பிரசங்கி 7 : 23 (RCTA)
(24) ஞானத்தை அடைவதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்தேன். எப்படியும் ஞானியாவேனென்று தீர்மானித்திருந்தும், ஞானம் எனக்குத் தூரமாய்ப் போயிற்று;
பிரசங்கி 7 : 24 (RCTA)
(25) முன்னிலும் அதிக தூரம் போயிற்று. ஞானத்தின் ஆழம் மிகவும் பெரிது. அதைச் சோதித்துப் பார்க்க யாராலே கூடும்?
பிரசங்கி 7 : 25 (RCTA)
(26) அறியவும், ஆராயவும், ஞானத்தை அடையவும், காரியங்களின் காரணங்களைத் தேடவும், அறிவில்லாதவருடைய அக்கிரமத்தைக் கண்டுபிடிக்கவும், அவிவேகிகளுடைய தவறுகளை வெளிப்படுத்தவும் நான் என் மனத்தைச் செலுத்தினேன்.
பிரசங்கி 7 : 26 (RCTA)
(27) இப்படித் தேடினபோது, பெண்கள் சாவைக் காட்டிலும் கசப்புள்ளவர்களென்றும், அவர்கள் நெஞ்சம் வேடர்களின் கண்ணியும் வலையும் போன்றதென்றும், அவர்கள் கைகள் சங்கிலிகளென்றும் கண்டேன். கடவுளுக்கு முன்பாக நீதிமானாய் உள்ளவன் அவர்களிடம் சிக்கிக் கொள்ள மாட்டான். பாவிகளோ அவர்கள் கையில் அகப்படுவார்கள்.
பிரசங்கி 7 : 27 (RCTA)
(28) சங்கப்போதகன் சொல்லுகிறதாவது: அதன் காரணம் அறியும்படி நான் பல காரியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தேன்.
பிரசங்கி 7 : 28 (RCTA)
(29) ஒப்பிட்டுப் பார்த்தும், அந்த காரணத்தை நான் கண்டுபிடியாமல், ஒரு காரியத்தை மட்டும் நிச்சயமென்று கண்டேன். அது என்ன வென்றார்: ஆயிரம் பேருக்குள்ளே ஒரு (நல்ல) ஆடவனைக் கண்டேன்; எல்லாப் பெண்களுக்குள்ளேயும் ஒரு (நல்ல) பெண்ணை நான் காணவில்லை.
பிரசங்கி 7 : 29 (RCTA)
(30) இதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அதாவது: கடவுள் மனிதனை நேர்மை உள்ளவனாகவே படைத்தார். மனிதனோ பலப்பல காரியங்கள் ஆராய முற்பட்டு, அவைகளில் தானே தனக்கு விலங்கிட்டுக் கொண்டான். இதைக் கண்டுபிடிக்கத் தக்க ஞானியும் எங்கே? இந்த வாக்கின் விளக்கம் சொல்லத் தக்க (அறிஞனும்) எங்கே?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: