உபாகமம் 30 : 1 (RCTA)
ஆகையால், நான் உன் கண்களுக்குமுன் எடுத்துக் காட்டிய ஆசீருக்கு அல்லது சாபத்திற்கு அடுத்த இந்தக் காரியங்ளெல்லாம் உன்பால் நிறைவேறிய பின்பு, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்த எல்லா இனத்தாரிடையேயும் இருந்து நீ உன் இதயத்தில் வருந்தி,
உபாகமம் 30 : 2 (RCTA)
அவர் பக்கமாய்த் திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடி நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் அவருடைய கட்டளைகளை அனுசரித்து நிறைவேற்றுவீர்களாயின்,
உபாகமம் 30 : 3 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிறையின்று விடுதலையாக்குவார். அவர் உனக்கு இறங்கி, உன்னைச் சிதறடித்துள்ள எல்லா இனத்தவர்களிடயேயுமிருந்து உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்வார்.
உபாகமம் 30 : 4 (RCTA)
நீ வானத்தின் கடையெல்லைகள் வரையிலும் சிதறுண்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர் அங்கேயிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வருவார்.
உபாகமம் 30 : 5 (RCTA)
அவர் உன்னை எடுத்து, உன் மூதாதையர் உரிமையாக்கிக் கொண்ட நாட்டில் உன்னைச் சேர்த்து நீ அதை உரிமையாக்கிக் கொள்ளச் செய்து, தம் ஆசீரால் உன் மூதாதையரைக் காட்டிலும் உன்னை அதிகமாய்ப் பெருகச் செய்வார்.
உபாகமம் 30 : 6 (RCTA)
மேலும், நீ வாழ்வு பெறும் பொருட்டு உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவேடும் அன்புசெய்யும்படியாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன் இதயத்தையும் உன் சந்ததியாரின் இதயத்தையும் விருத்தசேதனம் செய்து,
உபாகமம் 30 : 7 (RCTA)
இந்தச் சாபங்களையெல்லாம் உன் எதிரிகள்மேலும் உன்னைப் பழித்து வதைத்த உன் பகைவர்கள் மேலும் விழச்செய்வார். நீயோ மனந்திரும்பியவனாய்,
உபாகமம் 30 : 8 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலியைக் கேட்டு, இன்று நான் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகளின்படியெல்லாம் நடப்பாய்.
உபாகமம் 30 : 9 (RCTA)
அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும் உன் கருவின் கனிகளிலும் உன் மிருகவுயிர்களின் பலன்களிலும் உன் நிலத்தின் விளைச்சல்கள் முதலிய எல்லா நன்மைகளிலும் உனக்கு முழுநிறைவு உண்டாகச் செய்வார். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் மீது மகிழ்வு கொண்டது போல் உன் மீதும் விருப்பம் கொண்டு, எல்லா நன்மைகளையும் ஏராளமாய் உனக்கு அருளும்படி திரும்பி வருவார்.
உபாகமம் 30 : 10 (RCTA)
ஆனால், நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலிக்குச் செவிகொடுத்து, இந்த நூலில் எழுதப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளையும் சடங்குமுறைகளையும் கைக்கொண்டு அனுசரித்து, உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடமாய்த் திரும்பினால் மட்டுமே (முன் குறிக்கப்பட்ட நன்மைகளைப் பெறுவாய்).
உபாகமம் 30 : 11 (RCTA)
இன்று நான் உனக்குக் கற்பிக்கின்ற இக்கட்டளை உன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதும் அன்று. உனக்குத் தூரமானதும் அன்று.
உபாகமம் 30 : 12 (RCTA)
நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதன்படி செய்யும்பொருட்டு, எங்களுக்காக வானத்தில் ஏறிக்கொண்டு வரத்தக்கவன் யார் என்னறு நீ சொல்லும்படிக்கு, (அந்தக் கட்டளை) வானத்தில் வைக்கப்பட்டதும் அன்று;
உபாகமம் 30 : 13 (RCTA)
நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதன்படி நடக்கும்பொருட்டு, எங்களுக்காகக் கடலைத் தாண்டிகொண்டு வரத்தக்கவன் யார் என்று நீ சாக்குப்போக்குச் சொல்லும்படிக்கு, (அந்தக் கட்டளை) கடலுக்கு அப்பால் வைக்கப்பட்டதும் அன்று, நீ அந்தக் கட்டளையின்படி நடக்கும்பொருட்டு,
உபாகமம் 30 : 14 (RCTA)
அது உனக்கு மிகவும் அண்மையிலேயே இருக்கிறது. அது உன் வாயிலும் உன் இதயத்திலும் உள்ளது.
உபாகமம் 30 : 15 (RCTA)
இன்று நான் ஒரு பக்கத்திலே வாழ்வையும் நன்மையையும், மற்றொரு பக்கத்திலே சாவையும் தீமையையும் வைத்து உனக்குக் காண்பித்தேன் என்பதைச் சிந்தித்துப்பார்.
உபாகமம் 30 : 16 (RCTA)
நீ வாழ்ந்து பெருகவும், நீ உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசீர் அளிக்கும்படிக்கும் நீ அவர் பால் அன்புகொள்ளவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும் சட்டங்களையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு அனுசரிக்கவும் கடவாய்.
உபாகமம் 30 : 17 (RCTA)
ஆனால், உன் இதயம் பேதலித்து, நீ உன் காதை அடைத்து மதிமயங்கிப் பொய்யைப் பின்பற்றிப் பிற தேவர்களுக்குப் பணிபுரிவாயாகில், நீ அழிந்து போவாயென்றும்,
உபாகமம் 30 : 18 (RCTA)
யோர்தானைக் கடந்து நீ உரிமைகொள்ளப் புகவிருக்கும் நாட்டிலே கொஞ்சக் காலத்தில் மடிவாயென்றும் இன்று நான் உனக்கு முன்னறிவித்துச் சொல்கிறேன்.
உபாகமம் 30 : 19 (RCTA)
நான் வாழ்வையும் சாவையும், ஆசீரையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைத்துக் காட்டினேன் என்பதற்கு விண்ணையும் மண்ணையும் இன்று சாட்சியாய் வைக்கிறேன். ஆதலால், நீயும் உன் சந்ததியும் வாழ்வு பெறவும்,
உபாகமம் 30 : 20 (RCTA)
உன் உயிரும் நிடிய வாழ்வுமான ஆண்டவர், ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டுச் சொல்லிய நாட்டிலே நீ குடியேறவும், நீ உயிரைத் தேர்ந்துகொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர்பால் அன்புகூர்ந்து, அவருடைய திருவுளத்துக்கு அமைந்து, அவரைப் பற்றிக்கொள்வாய் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: