உபாகமம் 27 : 1 (RCTA)
அன்றியும், இஸ்ராயலின் பெரியோர்கள் சூழ மோயீசன் மக்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதக்கின்ற கட்டளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
உபாகமம் 27 : 2 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிற்குப் போக யோர்தானைக் கடந்த பின்பு, நீ பெரிய கற்களை நாட்டி அவைகளுக்குச் சாந்து பூசுவாய்.
உபாகமம் 27 : 3 (RCTA)
ஏனேன்றால் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குள் புகும்படி நீ யோர்தானைக் கடந்த பின்பு, இந்த நீதிச்சட்டங்கள் யாவையும் மேற்படிக் கற்களில் எழுதக்கடவாய்.
உபாகமம் 27 : 4 (RCTA)
ஆகையால், நீங்கள் யோர்தானைக் கடந்தவுடனே, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்ட கற்களை ஏபால் என்ற மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சுண்ணாம்புக் காரை இடுவாய்.
உபாகமம் 27 : 5 (RCTA)
பிறகு அவ்விடத்திலே இருப்பாயுதம் படாதகற்களாலே உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்புவாய்.
உபாகமம் 27 : 6 (RCTA)
கொத்தாத கற்களாலே நீ அதைக்கட்டி, அதன் மீது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழுத்தகனப் பலிகளை ஒப்புக்கொடுப்பதுமன்றி,
உபாகமம் 27 : 7 (RCTA)
சமாதானப் பலிகளையும் கொடுத்த பின்பு, அங்கே உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வாய்.
உபாகமம் 27 : 8 (RCTA)
இந்த நீதிச் சட்டங்களையெல்லாம் வழுவில்லாமலும் தெளிவாகவும் எழுதக்கடவாய் என்றார்.
உபாகமம் 27 : 9 (RCTA)
பிறகு மோயீசனும் லேவி புதல்வர்களாகிய குருக்குளும், இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயலே, கவனித்துக் கேட்பாயாக. நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவருடைய இனமானாய்.
உபாகமம் 27 : 10 (RCTA)
அவருடைய குரலொலிக்குச் செவிகொடுக்வும், நாங்கள் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் நீதிமுறைகளையும் நிறைவேற்றவும் கடவாயாக என்றார்கள்.
உபாகமம் 27 : 11 (RCTA)
மேலும், அதே நாளில் மோயீசன் மக்களை நோக்கி:
உபாகமம் 27 : 12 (RCTA)
யோர்தனைக் கடந்த பின்பு மக்களுக்கு ஆசீர் அளிக்குமாறு சிமையோன், லேவி, யூதா, இஸாக்கார், சூசை, பெஞ்சமின் கோத்திரத்தார்கள் கரிஸீம் என்னும் மலையில் நிற்பார்கள்.
உபாகமம் 27 : 13 (RCTA)
இவர்களுக்கு எதிரிடையாக, சாபங்கூற ரூபன், காத், ஆஸேர், ஸாபுலோன், தான், நேப்தலி கோத்திரத்தார்கள் ஏபால் மலையில் நிற்பார்கள்.
உபாகமம் 27 : 14 (RCTA)
அப்பொழுது லேவியர்கள் உரத்த குரலில் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் நோக்கி:
உபாகமம் 27 : 15 (RCTA)
ஆண்டவருக்கு வெறுப் பூட்டும் காரியமாகிய விக்கிரகத்தை, உளியால் கல்லைக் கொத்தியாவது மாதிரியில் வெண்கலத்தை வார்த்தாவது தன் கையால் செய்து, அதை மறைவிடத்தில் வைத்திருக்கிற தொழிலாளிமேல் சாபம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக மக்களெல்லாரும்: ஆமென் என்று சொல்லக் கடவார்கள்.
உபாகமம் 27 : 16 (RCTA)
தன் தாய் தந்தையரை மதித்து நடவாதவன்மேலே சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 17 (RCTA)
பிறனுடைய எல்லைக் கல்லைப் புரட்டி ஒற்றிப் போடுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 18 (RCTA)
குருடனை வழிதப்பச் செய்கிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 19 (RCTA)
அகதி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நீதியைப் புரட்டுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 20 (RCTA)
தன் தந்தையின் மனைவியோடு தகாத உறவு கொள்பவன் அல்லது அவளுடைய படுக்கையின் மேல்மூடியைத் திறப்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 21 (RCTA)
யாதொரு மிருகத்தோடு கூடுபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 22 (RCTA)
தன் தந்தைக்கேனும் தாய்கேனும் பிறந்த புதல்வியாகிய தன் சகோதரியோடு தகாத உறவு கொள்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 23 (RCTA)
தன் மாமியோடு தகாத உறவு கொள்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 24 (RCTA)
தன் பிறனை மறைவிடத்திலே சாகடிப்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 25 (RCTA)
குற்றமற்றவனைக் கொலை செய்யும்படி கையூட்டு வாங்குபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
உபாகமம் 27 : 26 (RCTA)
இந்த நீதிச் சட்டங்களைக் கைக்கொண்டு நடவாதவன் அல்லது தன் செயலிலே நிறைவேற்றாதவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

BG:

Opacity:

Color:


Size:


Font: