அப்போஸ்தலர்கள் 6 : 1 (RCTA)
அந்நாளில், சீடர்களின் தொகை பெருகவே, அவர்களிடையே கிரேக்கமொழி பேசுவோர், நாள்தோறும் நிகழும் அறப்பணியில், தங்கள் கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லையென எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முறையிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 2 (RCTA)
எனவே, பன்னிருவரும் சீடர்களை ஒன்றாகக் கூட்டி, "பந்தியில் பணிவிடை செய்வதற்காகக் கடவுளின் வார்த்தையைப் போதியாமல் விடுவது முறையன்று.
அப்போஸ்தலர்கள் 6 : 3 (RCTA)
ஆதலால் சகோதரரே உங்களிடையே நன்மதிப்புள்ளவர்களாய்த் தேவ ஆவியும் ஞானமும் நிரம்பப்பெற்ற எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை நாம் இப்பணிக்காக ஏற்படுத்துவோம்.
அப்போஸ்தலர்கள் 6 : 4 (RCTA)
நாங்களோ செபத்திலும், தேவ வார்த்தையைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்போம்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 5 (RCTA)
இவ்வேற்பாடு அங்குக் கூடியிருந்த அனைவர்க்கும் ஏற்புடையதாய் இருந்தது. அப்போது அவர்கள் விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்து விளங்கிய முடியப்பரையும், பிலிப்பு, பிரொக்கோரு, நிக்கானோர், தீமோன், பர்மேனா, அந்தியோகிய நகரத்தினரும் யூத மதத்தைத் தழுவியவருமான நிக்கொலா இவர்களையும் தேர்ந்தெடுத்து அப்போஸ்தலர்முன் நிறுத்தினர்.
அப்போஸ்தலர்கள் 6 : 6 (RCTA)
அப்போஸ்தலர்கள் செபம் செய்து, அவர்கள் மேல் கைகளை விரித்தனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 7 (RCTA)
கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவிவந்தது. யெருசலேமில் சீடர்களின் தொகை மிகப் பெருகிற்று. யூத குருக்கள் பலரும் விசுவாசத்திற்குப் பணிந்தனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 8 (RCTA)
முடியப்பர் அருளும் ஆற்றலும் நிறைந்தவராய் மக்களிடையே மாபெரும் அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 6 : 9 (RCTA)
அப்போது, உரிமை அடைந்தோரின் செபக் கூடத்தைச் சார்ந்த சிலரும், சிரேனே, அலெக்சந்திரியா நகரினர் சிலரும், சிலிசியா, ஆசியா நாட்டினர் சிலரும் முடியப்பரோடு தர்க்கம் செய்யக் கிளம்பினர்.
அப்போஸ்தலர்கள் 6 : 10 (RCTA)
ஆனால் அவரது ஞானத்தையும் அவர் வழியாய்ப் பேசிய தேவ ஆவியையும் அவர்கள் எதிர்த்து நிற்க முடியவில்லை.
அப்போஸ்தலர்கள் 6 : 11 (RCTA)
ஆதலால், "இவன் கடவுளுக்கும் மோயீசனுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் கூறியதைக் கேட்டோம்" என்று சொல்லச் சிலரைத் தூண்டிவிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 12 (RCTA)
அப்படியே மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் ஏவினர். அவர்கள் உடனடியாகக் கிளம்பிப் போய் அவரைப் பிடித்து, தலைமைச் சங்கத்திற்கு இழுத்து வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 13 (RCTA)
பொய்ச்சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினர். இச்சாட்சிகள், "இவன் புனித இடத்திற்கும் திருச்சட்டத்திற்கும் எதிராக ஓயாது பேசி வருகிறான்.
அப்போஸ்தலர்கள் 6 : 14 (RCTA)
'நாசரேத்தூர் இயேசு இவ்விடத்தை அழித்து விடுவார், மோயீசன் நமக்குக் காட்டிய முறைமைகளை மாற்றிவிடுவார்' என்று இவன் செல்லக் கேட்டோம்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 15 (RCTA)
சங்கத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் அவரை உற்று நோக்கியபோது, அவரது முகம் வானதூதரின் முகத்தைப் போல் இருப்பதைக் கண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

BG:

Opacity:

Color:


Size:


Font: