அப்போஸ்தலர்கள் 5 : 1 (RCTA)
அனனியா என்ற வேறொருவனும் அவன் மனைவி சபிராளும் தம் நிலத்தை விற்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 2 (RCTA)
விற்றதில் ஒரு பகுதியை அவன் வைத்துக்கொண்டு ஒரு பகுதியைக் கொண்டுபோய் அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான். அவன் மனைவியும் அதற்கு உடந்தையாயிருந்தாள்.
அப்போஸ்தலர்கள் 5 : 3 (RCTA)
அப்பொழுது இராயப்பர், "அனனியாவே, நிலம் விற்றதில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியை ஏமாற்றும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன் ?
அப்போஸ்தலர்கள் 5 : 4 (RCTA)
அது உன் பெயரில் இருந்தவரையில் உன்னுடையது தானே; விற்ற பிறகும் தொகை முழுவதும் உனக்கு உரிமையாகத்தான் இருந்ததில்லையா ? பின், இத்தகைய எண்ணம் உன் உள்ளத்தில் உதித்தது எப்படி ? நீ பொய் சொன்னது மனிதரிடமன்று, கடவுளிடமே" என்றார்.
அப்போஸ்தலர்கள் 5 : 5 (RCTA)
இதைக் கேட்டதும் அனனியா அப்படியே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.
அப்போஸ்தலர்கள் 5 : 6 (RCTA)
இளைஞர்கள் எழுந்து, அவனைத் துணியால் மூடி, வெளியே கொண்டுபோய்ப் புதைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 7 (RCTA)
ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்குப்பின் அவன்மனைவி வந்தாள்; நடந்ததொன்றும் அவளுக்குத் தெரியாது.
அப்போஸ்தலர்கள் 5 : 8 (RCTA)
இராயப்பர் அவளை நோக்கி, "நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், சொல்" எனக் கேட்க, "ஆம், இவ்வளவுக்குத்தான்" என்றாள்.
அப்போஸ்தலர்கள் 5 : 9 (RCTA)
அதற்கு இராயப்பர், "நீங்கள் இருவரும் ஆண்டவரின் ஆவியைச் சோதிக்க ஒன்றுபட்டதேன்? உன் கணவனைப் புதைத்தவர்களின் காலடிகள் கேட்கின்றன; இதோ! கதவருகில் வந்துவிட்டார்கள்; உன்னையும் கொண்டுபோவார்கள்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 5 : 10 (RCTA)
என்றவுடனே, அவள் அவருடைய காலருகில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்தபோது, அவள் இறந்துகிடக்கக் கண்டார்கள்; வெளியே கொண்டுபோய் அவளுடைய கணவனுக்கருகில் அவளைப் புதைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 11 (RCTA)
சபையினர் எல்லாரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.
அப்போஸ்தலர்கள் 5 : 12 (RCTA)
அப்போஸ்தலர்களுடைய கையால் பல அருங்குறிகளும் அற்புதங்களும் மக்களிடையே நிகழ்ந்தன. எல்லாரும் சாலொமோன் மண்டபத்தில் ஒன்றாய்க் கூடுவதுண்டு.
அப்போஸ்தலர்கள் 5 : 13 (RCTA)
மற்றவர் யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை; ஆனால் பொதுமக்கள் அவர்களைப்பற்றிப் பெருமையாகப் பேசினார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 14 (RCTA)
பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் விசுவாசங்கொண்டு அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 15 (RCTA)
எனவே, இராயப்பர் போகும்போது, பிணியாளிகள் சிலர்மீது அவர் நிழலாவது விழும் என்று எதிர்பார்த்து, அவர்களைத் தெருக்களில் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடந்துவார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 16 (RCTA)
யெருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவியால் துன்புற்றவர்களையும் தூக்கிக் கொண்டுவந்து திரளாகக் கூடுவார்கள்; அவர்கள் அனைவரும் குணமடைவர்.
அப்போஸ்தலர்கள் 5 : 17 (RCTA)
தலைமைக்குருவுக்கும், சதுசேயர் கட்சியினரான அவருடைய ஆட்களுக்கும் பொறாமை பொங்கி எழ,
அப்போஸ்தலர்கள் 5 : 18 (RCTA)
அவர்கள் அப்போஸ்தலர்களைக் கைதுசெய்து பொதுச்சிறையில் வைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 19 (RCTA)
ஆனால், ஆண்டவருடைய தூதர் இரவில் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கூட்டிவந்து,
அப்போஸ்தலர்கள் 5 : 20 (RCTA)
"நீங்கள் போய்க் கோயிலில் நின்று, இப்புது வாழ்வைப்பற்றிய அனைத்தையும் மக்களுக்குத் தயங்காமல் சொல்லுங்கள்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 5 : 21 (RCTA)
இதைக் கேட்டு, அவர்கள் விடியற்காலையில் கோயிலுக்குப் போய்ப் போதிக்கத் தொடங்கினார்கள். தலைமைக்குரு தம் ஆட்களுடன் வந்து, இஸ்ராயேலரின் ஆலோசனைக்குழுவையும் தலைமைச்சங்கம் முழுவதையும் கூட்டி, அப்போஸ்தலர்களைக் கொண்டுவர, சிறைச்சாலைக்கு ஆள் அனுப்பினர்.
அப்போஸ்தலர்கள் 5 : 22 (RCTA)
காவலர்கள் போனபோது, சிறைச்சாலையில் அவர்களைக் காணவில்லை.
அப்போஸ்தலர்கள் 5 : 23 (RCTA)
திரும்பிவந்து, "சிறைச்சாலை பத்திரமாகப் பூட்டியிருப்பதையும் காவலர்கள் கதவு எதிரில் நிற்பதையும் கண்டோம்; திறந்தபோது உள்ளே ஒருவரையும் காணோம்" என்று அறிவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 24 (RCTA)
இதைக் கேட்ட கோயிலின் காவலர்த் தலைவனும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நடந்திருக்கக் கூடும் என்று திகைப்புற்றனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 25 (RCTA)
அப்போது ஒருவன் வந்து, "நீங்கள் சிறையில் வைத்தவர்கள் இதோ! கோயிலில் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார்களே" என்றான்.
அப்போஸ்தலர்கள் 5 : 26 (RCTA)
இதைக் கேட்டதும் காவலர்த்தலைவன் தன் ஆட்களுடன் போய் அவர்களைக் கூட்டிவந்தான். மக்கள் கல்லால் எறியக்கூடுமெனப் பயந்து அவர்களை வலுவந்தம் செய்யவில்லை.
அப்போஸ்தலர்கள் 5 : 27 (RCTA)
அவர்களைத் தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்தினான்.
அப்போஸ்தலர்கள் 5 : 28 (RCTA)
தலைமைக் குரு அவர்களை நோக்கி, "இப்பெயரைச் சொல்லிப் போதிக்கலாகாது என்று உங்களுக்கு நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா ? ஆயினும், இதோ நீங்கள் யெருசலேம் எங்கும் உங்கள் போதனையைப் பரப்பிவிட்டீர்கள். அதோடு, அந்த மனிதனின் இரத்தப் பழியையும் எங்கள்மேல் சுமத்தப் பார்க்கிறீர்கள்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 5 : 29 (RCTA)
அதற்கு இராயப்பரும் அப்போஸ்தலர்களும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்கு மேலாகக் கடவுளுக்கல்லவா கீழ்ப்படிய வேண்டும் ?
அப்போஸ்தலர்கள் 5 : 30 (RCTA)
நீங்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொலை செய்த இயேசுவை நம் முன்னோரின் கடவுள் உயிர்ப்பித்தார்.
அப்போஸ்தலர்கள் 5 : 31 (RCTA)
இஸ்ராயேலருக்கு மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும் அருளும்படி கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலக்கையால் உயர்த்தினார்.
அப்போஸ்தலர்கள் 5 : 32 (RCTA)
இதற்கு நாங்கள் சாட்சிகள்; கடவுள் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அளிக்கும் பரிசுத்த ஆவியும் இதற்கு சாட்சி" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 33 (RCTA)
இதைக் கேட்டுச் சங்கத்தினர் சீற்றங் கொண்டு அவர்களை ஒழித்துவிடத் திட்டமிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 34 (RCTA)
அப்பொழுது கமாலியேல் என்னும் பரிசேயர் ஒருவர் சங்கத்தின் நடுவில் எழுந்தார். இவர் மக்கள் எல்லாரிடமும் மதிப்புப் பெற்றிருந்த ஒரு சட்ட வல்லுநர். இவர் அப்போஸ்தலர்களைச் சற்று நேரம் வெளியே அனுப்பக் கட்டளையிட்டு,
அப்போஸ்தலர்கள் 5 : 35 (RCTA)
சங்கத்தை நோக்கி, "இஸ்ராயேலரே, இம்மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 36 (RCTA)
ஏனெனில், கொஞ்ச காலத்திற்கு முன்பு தெயுதாஸ் என்பவன் கிளம்பி, தான் ஒரு பெரிய மனிதன் என்று காட்டிக்கொண்டு வந்தான். ஏறத்தாழ நானூறு பேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். ஆனால், இறுதியில் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைரும் சிதறிப் போகவே எல்லாம் ஒன்றுமில்லாமல் போயிற்று.
அப்போஸ்தலர்கள் 5 : 37 (RCTA)
அவனுக்குப் பிறகு, மக்கள் தொகைக் கணக்கு எடுப்புக் காலத்தில் கலிலேயானான யூதாஸ் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்ய மக்களைத் தூண்டினான். அவனும் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறுண்டனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 38 (RCTA)
ஆகவே, நான் சொல்லுவது: இவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காரியத்தில் தலையிட வேண்டாம். ஏனெனில், இவர்கள் திட்டமிட்டிருப்பதும் செய்து வருவதும் மனிதருடைய செயலாயிருந்தால், சிதைந்துபோம்.
அப்போஸ்தலர்கள் 5 : 39 (RCTA)
கடவுளுடையதாயின், நீங்கள் அவர்களைத் தொலைக்க முடியாது. மேலும், நீங்கள் கடவுளோடு போராடுவோர் ஆகக்கூடும்" என்றார். அவர் சொன்னதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 40 (RCTA)
பிறகு அப்போஸ்தலர்களை உள்ளே வரச்செய்து கசையால் அடிப்பித்து, இனி இயேசுவின் பெயரைச் சொல்லிப் பேசலாகாதெனக் கட்டளையிட்டு அனுப்பிவிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 41 (RCTA)
அவர்களோ இயேசுவின் பெயருக்காகத் தாங்கள் இழிவுபடத் தக்கவர்களாய்க் கருதப்பட்டது பற்றி, மனமகிழ்ந்து மன்றத்தை விட்டு வெளியேறினர்.
அப்போஸ்தலர்கள் 5 : 42 (RCTA)
நாள்தோறும் விடாமல் கோயிலிலும் வீடுகளிலும் போதித்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42

BG:

Opacity:

Color:


Size:


Font: