அப்போஸ்தலர்கள் 4 : 1 (RCTA)
அவர்கள் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில், குருக்களும், கோயிலின் காவல்தலைவனும், சதுசேயர்களும் அங்குத் தோன்றினார்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 2 (RCTA)
அவர்கள் மக்களுக்குப் போதிப்பதையும், இயேசுவை எடுத்துக்காட்டாகக் கூறி, இறந்தோர் உயிர்த்தெழுவர் என அறிவிப்பதையும் கண்டு சினந்து,
அப்போஸ்தலர்கள் 4 : 3 (RCTA)
அவர்களைப் பிடித்தார்கள்; ஏற்கெனவே பொழுதுபோயிருந்ததால், மறுநாள்வரை அவர்களைக் காவலில் வைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 4 (RCTA)
தேவ வார்த்தையைக் கேட்டவர்களுள் பலர் விசுவாசங்கொண்டனர்; இப்படி விசுவசித்த ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாயிற்று.
அப்போஸ்தலர்கள் 4 : 5 (RCTA)
மறுநாள் மக்கள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் யெருசலேமில் கூடினார்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 6 (RCTA)
தலைமைக்குரு அன்னாஸ், கைப்பாஸ், யோவான், அலெக்சாந்தரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அங்கே இருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 7 (RCTA)
அப்போஸ்தலர்களை நடுவில் நிறுத்தி, "எந்த வல்லமையால், யார் பெயரால் இதை நீங்கள் செய்தீர்கள் ?" என்று வினவினர்.
அப்போஸ்தலர்கள் 4 : 8 (RCTA)
அப்பொழுது இராயப்பர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பெற்று, அவர்களைப் பார்த்துக் கூறியதாவது: "மக்கள் தலைவர்களே, பெரியோர்களே,
அப்போஸ்தலர்கள் 4 : 9 (RCTA)
நோயாளிக்கு நாங்கள் செய்த நன்மையைக்குறித்து விசாரிப்பீர்களாகில், இவன் எவ்வாறு குணமானான் என்று எங்களை இன்று கேட்பீர்களாகில்,
அப்போஸ்தலர்கள் 4 : 10 (RCTA)
இவன் குணம் பெற்று உங்கள்முன் நிற்பது நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால்தான்; இது உங்கள் எல்லோருக்கும், இஸ்ராயேல் மக்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கட்டும். இந்த இயேசுவைத்தாம் நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள்; கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார்.
அப்போஸ்தலர்கள் 4 : 11 (RCTA)
' வீடுகட்டுவோராகிய உங்களால் விலக்கப்பட்டு மூலைக்கல்லாய் அமைந்த கல் ' இவர்தாம்.
அப்போஸ்தலர்கள் 4 : 12 (RCTA)
இவராலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை; ஏனெனில், நாம் ' மீட்படைவதற்கு அவர் பெயரைத்தவிர இவ்வுலகில் மனிதருக்கு வேறு பெயர் அருளப்படவில்லை."
அப்போஸ்தலர்கள் 4 : 13 (RCTA)
இராயப்பரும் அருளப்பரும் கல்வியறிவு அற்றவர்கள் எனச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களுடைய துணிவைக் கண்டு வியப்புற்றனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதும் தெரியும்.
அப்போஸ்தலர்கள் 4 : 14 (RCTA)
எனினும் குணமான மனிதன் அவர்களுடன் நிற்பதைக் கண்டபோது ஒன்றும் மறுத்துப்பேச முடியவில்லை.
அப்போஸ்தலர்கள் 4 : 15 (RCTA)
மன்றத்தை விட்டு வெளியேற அவர்களுக்குக் கட்டளையிட்டு, தமக்குள் ஆலோசனை செய்து,
அப்போஸ்தலர்கள் 4 : 16 (RCTA)
"இவர்களை என்ன செய்யலாம்? சிறந்ததோர் அருங்குறி இவர்களால் நிகழ்ந்துள்ளது; யெருசலேமில் வாழ்வோர் அனைவருக்கும் அது நன்றாய்த் தெரியும்; அதை நம்மால் மறுக்க முடியாது.
அப்போஸ்தலர்கள் 4 : 17 (RCTA)
ஆயினும், இது மக்களிடையே மேலும் பரவாதிருக்க, இப்பெயரைச் சொல்லி யாரிடமும் பேசலாகாது என இவர்களை எச்சரிப்போம்" என்று முடிவுசெய்தனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 18 (RCTA)
இதன்பின் அவர்களை அழைத்து, இனி இயேசுவின் பெயரைச் சொல்லி, எதுவும் பேசவோ போதிக்கவோ கூடாது எனக் கட்டளையிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 19 (RCTA)
அதற்கு இராயப்பரும் அருளப்பரும் மறுமொழியாக: "கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு மேலாக நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்குமுன் நீதியா, நீங்களே தீர்மானியுங்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 20 (RCTA)
நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 21 (RCTA)
இப்படி அற்புதமாய்க் குணமடைந்த மனிதன் நாற்பது வயதிற்கு மேற்பட்டவன்;
அப்போஸ்தலர்கள் 4 : 22 (RCTA)
அவனுக்கு நிகழ்ந்ததைக்குறித்து எல்லாரும் கடவுளை மாட்சிமைப்படுத்தியதால், சங்கத்தினர் மக்களுக்கு அஞ்சி, அவர்களைத் தண்டிப்பதற்கு வழிகாணாமல், எச்சரித்து விடுதலைசெய்தனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 23 (RCTA)
அவர்கள் விடுதலை அடைந்தபின் தம்மவர்களிடம் வந்து, தலைமைக்குருக்களும் பெரியோர்களும் தங்களுக்குச் சொன்ன யாவற்றையும் அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 24 (RCTA)
அதைக் கேட்டவர்கள் ஒருமிக்க உரத்த குரலில் கடவுளை நோக்கி, "ஆண்டவரே, விண், மண், கடல் யாவற்றையும், அவற்றில் அடங்கிய அனைத்தையும் ஆக்கியவர் நீரே.
அப்போஸ்தலர்கள் 4 : 25 (RCTA)
நீரே பரிசுத்த ஆவியினால் உம் ஊழியர் தாவீதின் வாயிலாக மொழிந்தீர்: ' புறவினத்தார் சீறுவதேன் ? மக்கள் வீணான சூழ்ச்சி செய்வதேன் ?
அப்போஸ்தலர்கள் 4 : 26 (RCTA)
ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக மாநில மன்னர் எழுந்தனர்; தலைவரும் ஒன்றுபட்டனர். '
அப்போஸ்தலர்கள் 4 : 27 (RCTA)
"உள்ளபடியே, இந்நகரில் ஏரோதும் போஞ்சு பிலாத்தும் புறவினத்தாரும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றுபட்டு, நீர் அபிஷுகம்செய்த உம் புனித ஊழியராகிய இயேசுவை எதிர்த்து எழுந்தனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 28 (RCTA)
உமது கைவன்மையும் திருவுளமும் தீர்மானித்ததெல்லாம் நிகழும்படி, இவ்வாறு செய்தனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 29 (RCTA)
ஆண்டவரே, இப்பொழுது அவர்களது மிரட்டலைப் பாரும்; உமது வார்த்தையை முழுத்துணிவுடன் எடுத்துச்சொல்ல உம் ஊழியர்களுக்கு அருள்தாரும்.
அப்போஸ்தலர்கள் 4 : 30 (RCTA)
உம் புனித ஊழியராகிய இயேசுவின் பெயரால் நோய்கள் தீரவும், அருங்குறிகள், அற்புதங்கள் நடைபெறவும் உமது கைவன்மையைக் காட்டும்" என மன்றாடினார்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 31 (RCTA)
இவ்வாறு மன்றாடவே, அவர்கள் குழுமியிருந்த இடம் அதிர்ந்தது; அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பெற்று, கடவுளின் வார்த்தையைத் துணிவுடன் எடுத்துச்சொன்னார்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 32 (RCTA)
விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்; அவர்களுள் ஒருவனும் தன் உடைமை எதன்மீதும் உரிமைப்பாராட்டவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
அப்போஸ்தலர்கள் 4 : 33 (RCTA)
அப்போஸ்தலர்கள் மிகுந்த வல்லமையோடு ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியம் கூறினார்கள்; அனைவருமே மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 4 : 34 (RCTA)
வறுமைப்பட்ட நிலையில் அவர்களுள் ஒருவனும் இல்லை; ஏனெனில், நிலபுலம், வீடு உடையவர்கள் அவற்றை விற்று அத்தொகையைக் கொண்டுவந்து,
அப்போஸ்தலர்கள் 4 : 35 (RCTA)
அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தார்கள்; அவர்கள் அதை, அவனவன் தேவைக்குத் தக்கவாறு, பகிர்ந்து கொடுத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 4 : 36 (RCTA)
சைப்பாஸ் தீவினரான சூசை என்னும் லேவியர் ஒருவர் இருந்தார்; அப்போஸ்தலர்கள் அவருக்குப் பர்னபா என்று பெயரிட்டார்கள்; ( அதற்கு 'ஆறுதலின் புதல்வன் ' என்பது பொருள் ).
அப்போஸ்தலர்கள் 4 : 37 (RCTA)
அவரிடம் ஒரு நிலம் இருந்தது; அதை விற்று, தொகையைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: