அப்போஸ்தலர்கள் 2 : 1 (RCTA)
பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 2 (RCTA)
அப்பொழுது திடீரென, பெருங்காற்று வீசுவதுபோன்ற இரைச்சல் வானத்தினின்று உண்டாகி, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அப்போஸ்தலர்கள் 2 : 3 (RCTA)
நெருப்புப்போன்ற நாவுகள் அவர்களுக்குத் தோன்றிப் பிளவுண்டு, ஒவ்வொருவர்மேலும் வந்து தங்கின.
அப்போஸ்தலர்கள் 2 : 4 (RCTA)
எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத்தொடங்கினர்.
அப்போஸ்தலர்கள் 2 : 5 (RCTA)
அச்சமயத்தில், வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாட்டினின்றும் பக்தியுள்ள யூதர்கள் வந்து யெருசலேமில் தங்கியிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 6 (RCTA)
அந்த இரைச்சலைக் கேட்டு மக்கள் கூட்டமாகக் கூடினார்கள்; அவர்கள் பேசுவதை மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் மொழியில் கேட்டுத் திடுக்கிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 7 (RCTA)
அனைவரும் திகைத்துப்போய் வியப்புடன், "இதோ! பேசுகிற இவர்கள் எல்லாரும் கலிலேயர் அல்லரோ?
அப்போஸ்தலர்கள் 2 : 8 (RCTA)
அப்படியிருக்க அவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் நம் தாய்மொழியில் கேட்பதெப்படி?
அப்போஸ்தலர்கள் 2 : 9 (RCTA)
பார்த்தர், மேதர், எலாமீத்தர் ஆகியோரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா,
அப்போஸ்தலர்கள் 2 : 10 (RCTA)
பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சீரேனே நகரை அடுத்த லீபியாவின் பகுதிகள் ஆகிய நாடுகளில் வாழ்பவரும், உரோமையிலிருந்து வந்தவர்,
அப்போஸ்தலர்கள் 2 : 11 (RCTA)
யூதர், யூதமதத்தைத் தழுவியவர், - கிரேத்தர், அரபியர் ஆகிய நாம் யாவரும் நம் மொழிகளிலேயே கடவுளின் மாபெரும் செயல்களை அவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 2 : 12 (RCTA)
எல்லாரும் திகைத்துப்போய், "இதைப்பற்றி என்னதான் நினைப்பது ?" என்று ஒருவர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டு மனங்குழம்பி நின்றனர்.
அப்போஸ்தலர்கள் 2 : 13 (RCTA)
சிலர் "இவர்களுக்கு மதுமயக்கமோ" என்று ஏளனம் செய்தனர்.
அப்போஸ்தலர்கள் 2 : 14 (RCTA)
அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்துநின்று, மக்களை நோக்கி, உரத்த குரலில் பேசியதாவது: "யூதர்களே, மற்றும் யெருசலேம்வாழ் மக்களே, நான் சொல்வதை அறிந்துகொள்ளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 15 (RCTA)
நீங்கள் நினைப்பதுபோல் இவர்கள் மதுமயக்கம் கொண்டவர்களல்லர்: இப்போது காலை ஒன்பது மணிதானே.
அப்போஸ்தலர்கள் 2 : 16 (RCTA)
ஆனால், இது இறைவாக்கினரான யோவேல் கூறிய நிகழ்ச்சியே:
அப்போஸ்தலர்கள் 2 : 17 (RCTA)
' கடவுள் கூறுவது: இதோ! இறுதி நாட்களில் எல்லார்மேலும் என் ஆவியைப் பொழிவேன்; உங்கள் புதல்வர் புதல்வியர் இறைவாக்கு உரைப்பர், உங்கள் இளைஞர் காட்சிகள் அருளப்பெறுவர், உங்கள் முதியோர் கனவுகள் காண்பர்.
அப்போஸ்தலர்கள் 2 : 18 (RCTA)
ஆம், அப்பொழுது என் அடியான், என் அடியாள் ஒவ்வொருவர்மீதும் என் ஆவியைப் பொழிவேன்; அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.
அப்போஸ்தலர்கள் 2 : 19 (RCTA)
இன்னும், விண்ணில் அற்புதங்களும் மண்ணில் அருங்குறிகளும் காட்டுவேன்: எங்குமே இரத்தமும் நெருப்பும் புகையும்.
அப்போஸ்தலர்கள் 2 : 20 (RCTA)
ஒளிவிளங்கும் பெருநாளாம் ஆண்டவரின் நாள் வருமுன், கதிரோன் இருளாகும், நிலவோ இரத்தமாய் மாறும்.
அப்போஸ்தலர்கள் 2 : 21 (RCTA)
அப்பொழுது, ஆண்டவரின் பெயரைச் சொல்லி மன்றாடும் எவனும் மீட்புப் பெறுவான். '
அப்போஸ்தலர்கள் 2 : 22 (RCTA)
"இஸ்ராயேல் மக்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்: புதுமைகள், அற்புதங்கள், அருங்குறிகளால் நாசரேத்தூர் இயேசு கடவுளது சான்று பெற்றவராக உங்கள்முன் எண்பிக்கப்பெற்றார். ஏனெனில், நீங்கள் அறிந்திருப்பதுபோல், இவற்றையெல்லாம் உங்கள் நடுவில் கடவுளே அவர்வழியாகச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 2 : 23 (RCTA)
கடவுளின் திட்டத்திற்கும் முன்னறிவுக்கும் ஏற்பக் கையளிக்கப்பட்ட இவரைத்தாம், நீங்கள் திருச்சட்டம் அறியாதவர்களைக்கொண்டு சிலுவையிலறைந்து கொன்றீர்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 24 (RCTA)
கடவுளோ அவரை மரண வேதனைகளினின்று விடுவித்து, உயிர்த்தெழச் செய்தார்; ஏனெனில், மரணம் அவரைத் தன்பிடியில் வைத்திருத்தல் இயலாதது.
அப்போஸ்தலர்கள் 2 : 25 (RCTA)
அவரைப்பற்றித் தாவீது கூறுவது: ' ஆண்டவர் என்றுமே என் கண்முன் உள்ளார்; நான் அசைவுறாதபடி அவர் என் வலப்பக்கம் நிற்கிறார்.
அப்போஸ்தலர்கள் 2 : 26 (RCTA)
இதனால் என் உள்ளம் மகிழ்ந்தது, என் நாவு அக்களிப்பு எய்தியது; என் உடலும் நம்பிக்கையில் நிலைத்திருக்கும்.
அப்போஸ்தலர்கள் 2 : 27 (RCTA)
ஏனெனில், என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர், உம் புனிதர் அழிவுகாண விடமாட்டீர்.
அப்போஸ்தலர்கள் 2 : 28 (RCTA)
வாழ்வின் வழிகளை எனக்குக் காட்டினீர், உம் திருமுன் நிற்கும் என்னை மகிழ்வால் நிரப்புவீர். '
அப்போஸ்தலர்கள் 2 : 29 (RCTA)
"சகோதரரே, மூதாதையாகிய தாவீதைப்பற்றி ஒளிவுமறைவின்றி உங்களுக்குக் கூறலாமா: அவர் இறந்தார், அடக்கம்செய்யப்பட்டார்; அவரது கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கின்றது.
அப்போஸ்தலர்கள் 2 : 30 (RCTA)
எனவே, ' அவர் பாதாளத்தில் விடப்படவில்லை ' என்றும், ' அவர் உடல் அழிவு காணவில்லை ' என்றும் அவர் கூறியது,
அப்போஸ்தலர்கள் 2 : 31 (RCTA)
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்தேயாகும். ஏனெனில் தாவீது இறைவாக்கினரானதால், அவர்வழித் தோன்றல் ஒருவர் அவருடைய அரியணையில் அமர்வார் என்று கடவுள் ஆணையிட்டு உறுதியாகக் கூறியதை அவர் அறிந்திருந்தார்.
அப்போஸ்தலர்கள் 2 : 32 (RCTA)
இந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகள்.
அப்போஸ்தலர்கள் 2 : 33 (RCTA)
இங்ஙனம், கடவுளின் வல்லமையால் உயர்த்தப்பெற்ற இவர், வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியைத் தந்தையிடமிருந்து பெற்று, நீங்கள் இப்பொழுது காண்பதும் கேட்பதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
அப்போஸ்தலர்கள் 2 : 34 (RCTA)
வானகத்திற்கு ஏறிச்சென்றவர் தாவீதல்லர்; ஏனெனில், அவரே கூறுகிறார்:
அப்போஸ்தலர்கள் 2 : 35 (RCTA)
' ஆண்டவர் என் ஆண்டவரிடம்: நாம் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் எம் வலப்பக்கத்தில் அமரும் என்றார். '
அப்போஸ்தலர்கள் 2 : 36 (RCTA)
"எனவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக ஆக்கினார் என்பதை இஸ்ராயேல் குலத்தவரெல்லாம் உறுதியாக அறிந்துகொள்வார்களாக."
அப்போஸ்தலர்கள் 2 : 37 (RCTA)
இதைக் கேட்டு, அவர்கள் உள்ளம்குத்துண்டவர்களாய், இராயப்பரையும் மற்ற அப்போஸ்தலர்களையும் நோக்கி, "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று வினவினார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 38 (RCTA)
அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 39 (RCTA)
ஏனெனில், இறைவன் தந்த வாக்குறுதி உங்களுக்குரியதே; ஏன், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள எல்லாருக்கும், நம் கடவுளாகிய ஆண்டவர் அழைக்கும் ஒவ்வொருவருக்குமே உரியது" என்றார்.
அப்போஸ்தலர்கள் 2 : 40 (RCTA)
இன்னும், அவர் பல ஆதாரங்களைக் காட்டி, சாட்சியங்கூறி, "நெறிகெட்ட இத்தலைமுறையிலிருந்து நீங்கி, உங்களை மீட்டுக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அப்போஸ்தலர்கள் 2 : 41 (RCTA)
அவருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்வாறு, அன்று ஏறத்தாழ மூவாயிரம் பேர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 42 (RCTA)
இவர்கள் அப்போஸ்தலர்களின் படிப்பினையைக் கேட்பதிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிட்குதலிலும், செபிப்பதிலும் நிலைத்திருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 43 (RCTA)
அற்புதங்கள், அருங்குறிகள் பல அப்போஸ்தலர்கள்வழியாய் நடைபெற்றன; இதனால் மக்களிடையே அச்சம் நிலவியது.
அப்போஸ்தலர்கள் 2 : 44 (RCTA)
விசுவசித்தவர்கள் எல்லாரும் ஒருமித்துத் தங்கள் உடைமைகள் அனைத்தையும் பொதுப்பொருளாய்க் கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 45 (RCTA)
நிலபுலங்களையும் உடைமைகளையும் விற்று, அவரவர் தேவைக்கேற்ப எல்லாரும் பங்கிட்டுக்கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 2 : 46 (RCTA)
நாடோறும் தவறாமல் ஒரே மனதாய்க் கோயிலில் கூடினர்; வீடுகளில் அப்பத்தைப்பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் உணவைப் பகிர்ந்துகொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 2 : 47 (RCTA)
இங்ஙனம் கடவுளைப் புகழ்ந்துவந்தனர்; மக்கள் அனைவருக்கும் வேண்டியவர்களாய் விளங்கினர். ஆண்டவரும் மீட்புப்பெறுவோரை நாள்தோறும் அவர்களோடு சேர்த்து வந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47

BG:

Opacity:

Color:


Size:


Font: