அப்போஸ்தலர்கள் 1 : 1 (RCTA)
தெயோபிலே, இயேசு தாம் தேர்ந்துகொண்ட அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றைப் பரிசுத்த ஆவியினால் கட்டளையிட்டு விண்ணேற்படைந்த நாள்வரை,
அப்போஸ்தலர்கள் 1 : 2 (RCTA)
அவர் செய்தவை, போதித்தவை யாவற்றையும் என் நூலின் முதற்பகுதியில் எழுதினேன்.
அப்போஸ்தலர்கள் 1 : 3 (RCTA)
தாம் பாடுபட்ட பின்னர், இயேசு நாற்பது நாள் அளவாக அவர்களுக்குத் தோன்றி, கடவுளின் அரசைப்பற்றிக் கூறி, பல சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காட்டினார்.
அப்போஸ்தலர்கள் 1 : 4 (RCTA)
ஒருநாள் அவர் அவர்களோடு உண்ணும்போது, அவர்கள் யெருசலேமை விட்டு நீங்காமல் தந்தை வாக்களித்ததை எதிர்பார்க்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அப்போஸ்தலர்கள் 1 : 5 (RCTA)
"என் வாய்மொழியாக நீங்கள் கேட்டது இவ்வாக்குறுதியைப்பற்றித்தான்: அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்; நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 1 : 6 (RCTA)
ஆகவே, கூடிவந்திருந்தவர்கள், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு அரசாட்சியை நீர் மீட்டுத்தரும் காலம் இதுதானோ?" என்று வினவினார்கள்.
அப்போஸ்தலர்கள் 1 : 7 (RCTA)
அதற்கு அவர், "தந்தை தம் அதிகாரத்தால் குறித்துள்ள காலங்களையும் நேரங்களையும் அறிவது உங்களைச் சார்ந்ததன்று.
அப்போஸ்தலர்கள் 1 : 8 (RCTA)
ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 1 : 9 (RCTA)
இதைச் சொன்னபின்பு, அவர்கள்கண்முன்பாக அவர் மேலே உயர்த்தப்பெற்றார். மேகம் ஒன்று வந்து அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்துக்கொண்டது.
அப்போஸ்தலர்கள் 1 : 10 (RCTA)
அவர் போகும்பொழுது, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது வெண்ணாடை அணிந்த இருவர் அங்கே தோன்றி,
அப்போஸ்தலர்கள் 1 : 11 (RCTA)
"கலிலேயரே, ஏன் இப்படி வானத்தைப் பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? உங்கள் நடுவிலிருந்து வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்ற இந்த இயேசு எவ்வாறு வானகம் செல்லக் கண்டீர்களோ, அவ்வாறே மீண்டும் வருவார்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 1 : 12 (RCTA)
பின்பு அவர்கள் ஒலிவத்தோப்பு என்னும் மலையிலிருந்து யெருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை யெருசலேமுக்கு அருகில் உள்ளது; ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரம்தான்.
அப்போஸ்தலர்கள் 1 : 13 (RCTA)
இப்படித் திரும்பிவந்த இராயப்பர், அருளப்பர், யாகப்பர், பெலவேந்திரர், பிலிப்பு, தோமையார், பார்த்தொலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாகப்பர், தீவிரவாதி என்னும் சீமோன், யாகப்பரின் மகன் யூதா ஆகியவர்கள், தாங்கள் வழக்கமாய்த் தங்கும் மாடியறைக்குப் போனார்கள்.
அப்போஸ்தலர்கள் 1 : 14 (RCTA)
இவர்கள் எல்லாரும் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 1 : 15 (RCTA)
அப்பொழுது ஒருநாள், அங்கே - ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் கூடியிருக்கையில் - இராயப்பர் அவர்கள் நடுவில் எழுந்துநின்று பேசியதாவது:
அப்போஸ்தலர்கள் 1 : 16 (RCTA)
"சகோதரர்களே, இயேசுவைக் கைதுசெய்தவர்களுக்கு வழிகாட்டியான யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி, தாவீதின் வழியாக, முன்னறிவித்த மறைநூல்வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது. -
அப்போஸ்தலர்கள் 1 : 17 (RCTA)
அவன் நம்முள் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.
அப்போஸ்தலர்கள் 1 : 18 (RCTA)
இந்த யூதாஸ் தன் அநீதச் செயலுக்குக் கிடைத்த கூலியைக்கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். அவன் தலைகீழாய் விழ, அவன்வயிறு வெடித்துக் குடலெல்லாம் சிதறிப்போயின.
அப்போஸ்தலர்கள் 1 : 19 (RCTA)
இது யெருசலேமில் குடியிருப்பவர் அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் அந்த நிலம் அவர்கள் மொழியில் அக்கெல்டாமா, அதாவது இரத்த நிலம், எனப்படுகிறது.
அப்போஸ்தலர்கள் 1 : 20 (RCTA)
சங்கீத நூலில்: ' அவன் இல்லிடம் பாழாகட்டும், குடியற்றுப் போகட்டும் ' என்றும், ' அவன் அலுவலை வேறொருவன் ஏற்றுக்கொள்ளட்டும் ' என்றும் எழுதியுள்ளது.
அப்போஸ்தலர்கள் 1 : 21 (RCTA)
"ஆகையால், அருளப்பரின் ஞானஸ்நானம் முதல் ஆண்டவராகிய இயேசு நம் நடுவினின்று எடுத்துக் கொள்ளப்பெற்ற நாள்வரை,
அப்போஸ்தலர்கள் 1 : 22 (RCTA)
அவர் நம்மோடு பழகிய காலமெல்லாம் எங்களுடனிருந்தவர்களுள் ஒருவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக எங்களோடு சேர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது."
அப்போஸ்தலர்கள் 1 : 23 (RCTA)
எனவே, அவர்கள் இருவரைக் குறிப்பிட்டார்கள்: அவர்கள் ஒருவர் பர்சபாஸ் என்னும் சூசை; இவருக்கு யுஸ்துஸ் என்ற பெயருமிருந்தது; மற்றொருவர் மத்தியாஸ்.
அப்போஸ்தலர்கள் 1 : 24 (RCTA)
"ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, 'யூதாஸ் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி, இந்த அப்போஸ்தலர் ஊழியத்தில் இழந்துபோன இடத்தைப் பெறுவதற்கு,
அப்போஸ்தலர்கள் 1 : 25 (RCTA)
இவ்விருவருள் யாரை நீர் தேர்ந்துகொள்கிறீர் எனக் காண்பித்தருளும்" என்று அவர்கள் மன்றாடினார்கள்.
அப்போஸ்தலர்கள் 1 : 26 (RCTA)
பிறகு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாஸ் பேருக்கு விழவே, அவர் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

BG:

Opacity:

Color:


Size:


Font: