1 தெசலோனிக்கேயர் 4 : 1 (RCTA)
சகோதரர்களே, இறுதியாக உங்களுக்கு அறிவுறுத்த விரும்புவது: நீங்கள் எவ்வாறு நடக்கவேண்டும், கடவுளுக்கு உகந்தவர்களாக எவ்வாறு வாழ வேண்டும் என்ற படிப்பினையை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். அதன்படியே நடந்து வருகிறீர்கள்; இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று, ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 4 : 2 (RCTA)
ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகள் எவை என அறிவீர்களன்றோ?
1 தெசலோனிக்கேயர் 4 : 3 (RCTA)
நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்: அதாவது, கெட்ட நடத்தையை விட்டு விடவேண்டும்.
1 தெசலோனிக்கேயர் 4 : 4 (RCTA)
கடவுளை அறியாத புறவினத்தார் காம இச்சைகளுக்கு இடங்கொடுப்பது போல் நீங்கள் செய்யாமல்,
1 தெசலோனிக்கேயர் 4 : 5 (RCTA)
உங்களுள் ஒவ்வொருவரும் தன் உடலை அடக்கி ஆண்டு மரியாதையாய் நடத்தி, பரிசுத்தமாய்க் காப்பாற்ற அறிந்திருக்கவேண்டும்.
1 தெசலோனிக்கேயர் 4 : 6 (RCTA)
எவனும் இக்காரியத்தில் மீறி நடந்து, தன் சகோதரனை வஞ்சிக்காமல் இருப்பானாக. இவை அனைத்திற்காகவும் ஆண்டவரே பழி வாங்குவார். இதை உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம், வற்புறுத்திக் கூறியிருக்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 4 : 7 (RCTA)
கடவுள் நம்மை அசுத்தத்திற்காக அழைக்கவில்லை, பரிசுத்தத்திற்காகவே அழைத்திருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 4 : 8 (RCTA)
எனவே, இக்கட்டளைகளைப் புறக்கணிப்பவன் மனிதரைப் புறக்கணிப்பதில்லை; தம் பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளித்த கடவுளையே புறக்கணிக்கிறான்.
1 தெசலோனிக்கேயர் 4 : 9 (RCTA)
சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதத்தேவையில்லை; ஒருவருக்கொருவர் அன்புகாட்ட கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 4 : 10 (RCTA)
இதன்படி நீங்கள், மக்கெதோகியா நாடெங்கும் வாழும் சகோதரர்களே, நீங்கள் இதில் இன்னும் முன்னேற வேண்டுமேன்று வலியுறுத்துகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 4 : 11 (RCTA)
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக வாழ்வது பெருமையெனக் கருதி அதை நாடுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 4 : 12 (RCTA)
திருச்சபையைச் சேராதவர்கள் மட்டில் பாங்குடன் பழகி, பிறர் கையைப் பார்த்து வாழாதபடி, நாங்கள் கட்டளையிட்டது போல, உங்கள் கையாலேயே வேலை செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 4 : 13 (RCTA)
சகோதரர்களே, இறந்தோரைப் பற்றி உங்களுக்கு ஐயமிருத்தலாகாது, நம்பிக்கையற்ற ஏனையோரைப்போல் நீங்களும் வருந்தலகாது.
1 தெசலோனிக்கேயர் 4 : 14 (RCTA)
இயேசு இறந்தபின் உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவசிக்கின்றோம் அல்லவா? அப்படியானால் இயேசுவின் ஒன்றிப்பில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.
1 தெசலோனிக்கேயர் 4 : 15 (RCTA)
ஆண்டவருடைய வார்த்தையில் ஊன்றி, நாங்கள் உங்களுக்குச் சொல்லுவதாவது: உயிருடனிருக்கும் நாம், ஆண்டவரின் வருகை வரையில் உயிரோடு எஞ்சி நிற்கும் நாம், இறந்தோருக்கு முந்திக்கொள்ளமாட்டோம்.
1 தெசலோனிக்கேயர் 4 : 16 (RCTA)
அதிதூதரின் குரலொலியும் கடவுளின் எக்காளமும் அடையாளமாக முழங்க, ஆண்டவர் தாமே வானிலிருந்து இறங்கி வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் இறந்தோர், முதலில் உயிர்த்தெழவர்.
1 தெசலோனிக்கேயர் 4 : 17 (RCTA)
அதன் பின்னரே உயிரோடு எஞ்சி நிற்கும் நாம் அவர்களோடு கூட ஒன்றாய் மேகங்கள் மீது தூக்கிச் செல்லப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளப் போவோம். போய், ஆண்டவரோடு எப்போதும் இருப்போம்.
1 தெசலோனிக்கேயர் 4 : 18 (RCTA)
எனவே, இக்கருத்துக்களைக்கொண்டு ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: