வெளிபடுத்தல் 18 : 1 (IRVTA)
{பாபிலோனின் வீழ்ச்சி} [PS] இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாக, வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாக இருந்தது.
வெளிபடுத்தல் 18 : 2 (IRVTA)
அவன் அதிக சத்தமிட்டு: [QBR] “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! [QBR] அது பேய்களுடைய குடியிருப்பும், [QBR] எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், [QBR] அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது. [QBR]
வெளிபடுத்தல் 18 : 3 (IRVTA)
அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; [QBR] பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; [QBR] பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான். [QBR]
வெளிபடுத்தல் 18 : 4 (IRVTA)
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: [QBR] “என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், [QBR] அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள். [QBR]
வெளிபடுத்தல் 18 : 5 (IRVTA)
அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, [QBR] அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார். [QBR]
வெளிபடுத்தல் 18 : 6 (IRVTA)
அவள் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் அவளுக்குச் செய்யுங்கள்; [QBR] அவளுடைய செய்கைகளுக்கு தகுந்தவாறு அவளுக்கு இரண்டுமடங்காகக் கொடுங்கள்; [QBR] அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரண்டுமடங்காக அவளுக்குக் கலந்துகொடுங்கள். [QBR]
வெளிபடுத்தல் 18 : 7 (IRVTA)
அவள் தன்னை மகிமைப்படுத்தி, எவ்வளவு செல்வச்செழிப்பாய் வாழ்ந்தாளோ [QBR] அந்த அளவுக்கே வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். [QBR] நான் அரசியாக இருக்கிறேன்; [QBR] நான் விதவைப் பெண் இல்லை, [QBR] நான் துக்கத்தைப் பார்ப்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே நினைத்தாள். [QBR]
வெளிபடுத்தல் 18 : 8 (IRVTA)
எனவே அவளுக்கு வரும் வாதைகளாகிய மரணமும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; [QBR] அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; [QBR] அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமை உள்ளவர். [PE][PS]
வெளிபடுத்தல் 18 : 9 (IRVTA)
“அவளுடன் வேசித்தனம்செய்து செல்வச்செழிப்பாய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் அக்கினியில் வேகிறதினால் உண்டான புகையைப் பார்க்கும்போது அவளுக்காக அழுது புலம்பி,
வெளிபடுத்தல் 18 : 10 (IRVTA)
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: [QBR] ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! [QBR] ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள். [PE][PS]
வெளிபடுத்தல் 18 : 11 (IRVTA)
“பூமியின் வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களான பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், மெல்லிய ஆடைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டு ஆடைகளையும், சிவப்பு ஆடைகளையும்,
வெளிபடுத்தல் 18 : 12 (IRVTA)
எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும்,
வெளிபடுத்தல் 18 : 13 (IRVTA)
இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனிதர்களுடைய ஆத்துமாக்களையும் இனி வாங்குகிறவர்கள் இல்லை என்பதால் அவளுக்காக அழுது புலம்புவார்கள்.
வெளிபடுத்தல் 18 : 14 (IRVTA)
உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை.
வெளிபடுத்தல் 18 : 15 (IRVTA)
இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று; [QBR]
வெளிபடுத்தல் 18 : 16 (IRVTA)
ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, [QBR] பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் [QBR] சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள். [PE][PS]
வெளிபடுத்தல் 18 : 17 (IRVTA)
கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று,
வெளிபடுத்தல் 18 : 18 (IRVTA)
அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
வெளிபடுத்தல் 18 : 19 (IRVTA)
தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: [QBR] ஐயோ, மகா நகரமே! [QBR] கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! [QBR] ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே!” என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள். [QBR]
வெளிபடுத்தல் 18 : 20 (IRVTA)
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! [QBR] தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். [QBR] உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” என்று தூதன் சொன்னான்.
வெளிபடுத்தல் 18 : 21 (IRVTA)
அப்பொழுது, பலமுள்ள தூதன் ஒருவன் பெரிய எந்திரக்கல்லுக்கு சமமான ஒரு கல்லை எடுத்துக் கடலிலே தூக்கியெறிந்து: [QBR] “இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாகத் தள்ளப்பட்டு, [QBR] இனி ஒருபோதும் பார்க்கமுடியாமல்போகும். [QBR]
வெளிபடுத்தல் 18 : 22 (IRVTA)
சுரமண்டலக்காரர்களும், கீதவாத்தியக்காரர்களும், [QBR] நாகசுரக்காரர்களும், எக்காளக்காரர்களுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; [QBR] எந்தக் கைவினைத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் இருக்கமாட்டார்கள்; [QBR] எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. [QBR]
வெளிபடுத்தல் 18 : 23 (IRVTA)
விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; [QBR] மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. [QBR] உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; [QBR] உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே. [QBR]
வெளிபடுத்தல் 18 : 24 (IRVTA)
தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் [QBR] பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று சொன்னான். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: