சங்கீதம் 95 : 1 (IRVTA)
யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, [QBR] நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். [QBR]
சங்கீதம் 95 : 2 (IRVTA)
துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, [QBR] பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். [QBR]
சங்கீதம் 95 : 3 (IRVTA)
யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். [QBR]
சங்கீதம் 95 : 4 (IRVTA)
பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; [QBR] மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். [QBR]
சங்கீதம் 95 : 5 (IRVTA)
கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; [QBR] காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. [QBR]
சங்கீதம் 95 : 6 (IRVTA)
நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக [QBR] நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள். [QBR]
சங்கீதம் 95 : 7 (IRVTA)
அவர் நம்முடைய தேவன்; [QBR] நாம் அவர் மேய்ச்சலின் மக்களும், [QBR] அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. [QBR]
சங்கீதம் 95 : 8 (IRVTA)
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், [QBR] வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, [QBR] உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள். [QBR]
சங்கீதம் 95 : 9 (IRVTA)
அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, [QBR] என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள். [QBR]
சங்கீதம் 95 : 10 (IRVTA)
நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து, [QBR] அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், [QBR] என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, [QBR]
சங்கீதம் 95 : 11 (IRVTA)
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று, [QBR] என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11

BG:

Opacity:

Color:


Size:


Font: