சங்கீதம் 94 : 1 (IRVTA)
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே, [QBR] நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். [QBR]
சங்கீதம் 94 : 2 (IRVTA)
பூமியின் நியாயாதிபதியே, [QBR] நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும். [QBR]
சங்கீதம் 94 : 3 (IRVTA)
யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து, [QBR] எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்? [QBR]
சங்கீதம் 94 : 4 (IRVTA)
எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, [QBR] கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? [QBR]
சங்கீதம் 94 : 5 (IRVTA)
யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, [QBR] உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். [QBR]
சங்கீதம் 94 : 6 (IRVTA)
விதவையையும் அந்நியனையும் கொன்று, [QBR] திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: [QBR]
சங்கீதம் 94 : 7 (IRVTA)
யெகோவா பார்க்கமாட்டார், [QBR] யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள். [QBR]
சங்கீதம் 94 : 8 (IRVTA)
மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; [QBR] மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? [QBR]
சங்கீதம் 94 : 9 (IRVTA)
காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ? [QBR] கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ? [QBR]
சங்கீதம் 94 : 10 (IRVTA)
தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ? [QBR] மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ? [QBR]
சங்கீதம் 94 : 11 (IRVTA)
மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார். [QBR]
சங்கீதம் 94 : 12 (IRVTA)
யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், [QBR] நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து, [QBR]
சங்கீதம் 94 : 13 (IRVTA)
தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு [QBR] போதிக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
சங்கீதம் 94 : 14 (IRVTA)
யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், [QBR] தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். [QBR]
சங்கீதம் 94 : 15 (IRVTA)
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; [QBR] செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள். [QBR]
சங்கீதம் 94 : 16 (IRVTA)
துன்மார்க்கர்களுக்கு விரோதமாக [QBR] எனது சார்பாக எழும்புகிறவன் யார்? [QBR] அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்? [QBR]
சங்கீதம் 94 : 17 (IRVTA)
யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால், [QBR] என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும். [QBR]
சங்கீதம் 94 : 18 (IRVTA)
என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, [QBR] யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. [QBR]
சங்கீதம் 94 : 19 (IRVTA)
என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது, [QBR] உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. [QBR]
சங்கீதம் 94 : 20 (IRVTA)
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ? [QBR]
சங்கீதம் 94 : 21 (IRVTA)
அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, [QBR] குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். [QBR]
சங்கீதம் 94 : 22 (IRVTA)
யெகோவாவோ எனக்கு அடைக்கலமும், [QBR] என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார். [QBR]
சங்கீதம் 94 : 23 (IRVTA)
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, [QBR] அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்; [QBR] நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: