சங்கீதம் 92 : 1 (IRVTA)
யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, [QBR] உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும், [QBR]
சங்கீதம் 92 : 2 (IRVTA)
பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், [QBR] தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், [QBR]
சங்கீதம் 92 : 3 (IRVTA)
காலையிலே உமது கிருபையையும், [QBR] இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும். [QBR]
சங்கீதம் 92 : 4 (IRVTA)
யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், [QBR] உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன். [QBR]
சங்கீதம் 92 : 5 (IRVTA)
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! [QBR] உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். [QBR]
சங்கீதம் 92 : 6 (IRVTA)
மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; [QBR] மூடன் அதை உணரமாட்டான். [QBR]
சங்கீதம் 92 : 7 (IRVTA)
துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, [QBR] அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, [QBR] அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். [QBR]
சங்கீதம் 92 : 8 (IRVTA)
யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர். [QBR]
சங்கீதம் 92 : 9 (IRVTA)
யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; [QBR] உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள். [QBR]
சங்கீதம் 92 : 10 (IRVTA)
என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; [QBR] புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன். [QBR]
சங்கீதம் 92 : 11 (IRVTA)
என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; [QBR] எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு [QBR] நேரிடுவதை என்னுடைய காது கேட்கும். [QBR]
சங்கீதம் 92 : 12 (IRVTA)
நீதிமான் பனையைப்போல் செழித்து, [QBR] லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். [QBR]
சங்கீதம் 92 : 13 (IRVTA)
யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் [QBR] எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள். [QBR]
சங்கீதம் 92 : 14 (IRVTA)
யெகோவா உத்தமரென்றும், [QBR] என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் [QBR] அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி, [QBR]
சங்கீதம் 92 : 15 (IRVTA)
அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, [QBR] புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

BG:

Opacity:

Color:


Size:


Font: