சங்கீதம் 84 : 1 (IRVTA)
சேனைகளின் யெகோவாவே, [QBR] உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! [QBR]
சங்கீதம் 84 : 2 (IRVTA)
என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; [QBR] என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. [QBR]
சங்கீதம் 84 : 3 (IRVTA)
என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, [QBR] உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், [QBR] தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. [QBR]
சங்கீதம் 84 : 4 (IRVTA)
உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; [QBR] அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா) [QBR]
சங்கீதம் 84 : 5 (IRVTA)
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும், [QBR] தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். [QBR]
சங்கீதம் 84 : 6 (IRVTA)
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; [QBR] மழையும் குளங்களை நிரப்பும். [QBR]
சங்கீதம் 84 : 7 (IRVTA)
அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, [QBR] சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். [QBR]
சங்கீதம் 84 : 8 (IRVTA)
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, [QBR] என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; [QBR] யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா) [QBR]
சங்கீதம் 84 : 9 (IRVTA)
எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; [QBR] நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும். [QBR]
சங்கீதம் 84 : 10 (IRVTA)
ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; [QBR] துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட [QBR] என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். [QBR]
சங்கீதம் 84 : 11 (IRVTA)
தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; [QBR] யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; [QBR] உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். [QBR]
சங்கீதம் 84 : 12 (IRVTA)
சேனைகளின் யெகோவாவே, [QBR] உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: