சங்கீதம் 83 : 1 (IRVTA)
தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், [QBR] பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம். [QBR]
சங்கீதம் 83 : 2 (IRVTA)
இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, [QBR] உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள். [QBR]
சங்கீதம் 83 : 3 (IRVTA)
உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, [QBR] உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள். [QBR]
சங்கீதம் 83 : 4 (IRVTA)
அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், [QBR] இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, [QBR] அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள். [QBR]
சங்கீதம் 83 : 5 (IRVTA)
இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், [QBR] இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும், [QBR]
சங்கீதம் 83 : 6 (IRVTA)
கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், [QBR] தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும், [QBR]
சங்கீதம் 83 : 7 (IRVTA)
ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, [QBR] உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 83 : 8 (IRVTA)
அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, [QBR] லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா) [QBR]
சங்கீதம் 83 : 9 (IRVTA)
மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், [QBR] கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு, [QBR]
சங்கீதம் 83 : 10 (IRVTA)
நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, [QBR] யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். [QBR]
சங்கீதம் 83 : 11 (IRVTA)
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், [QBR] அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். [QBR]
சங்கீதம் 83 : 12 (IRVTA)
தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. [QBR]
சங்கீதம் 83 : 13 (IRVTA)
என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், [QBR] காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். [QBR]
சங்கீதம் 83 : 14 (IRVTA)
நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், [QBR] அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும், [QBR]
சங்கீதம் 83 : 15 (IRVTA)
நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, [QBR] உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும். [QBR]
சங்கீதம் 83 : 16 (IRVTA)
யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, [QBR] அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். [QBR]
சங்கீதம் 83 : 17 (IRVTA)
யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே [QBR] நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி, [QBR]
சங்கீதம் 83 : 18 (IRVTA)
அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, [QBR] அவமானமடைந்து அழிந்துபோவார்களாக. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: