சங்கீதம் 79 : 1 (IRVTA)
தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து, [QBR] உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, [QBR] எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். [QBR]
சங்கீதம் 79 : 2 (IRVTA)
உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும், [QBR] உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். [QBR]
சங்கீதம் 79 : 3 (IRVTA)
எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; [QBR] அவர்களை அடக்கம்செய்பவருமில்லை. [QBR]
சங்கீதம் 79 : 4 (IRVTA)
எங்களுடைய அயலாருக்கு நிந்தையும், [QBR] எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம். [QBR]
சங்கீதம் 79 : 5 (IRVTA)
எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ? [QBR] உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ? [QBR]
சங்கீதம் 79 : 6 (IRVTA)
உம்மை அறியாத தேசங்கள் மேலும், [QBR] உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும், [QBR] உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும். [QBR]
சங்கீதம் 79 : 7 (IRVTA)
அவர்கள் யாக்கோபை அழித்து, [QBR] அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே. [QBR]
சங்கீதம் 79 : 8 (IRVTA)
முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்; [QBR] உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக; [QBR] நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம். [QBR]
சங்கீதம் 79 : 9 (IRVTA)
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து, [QBR] உமது பெயருக்காக எங்களை விடுவித்து, [QBR] எங்களுடைய பாவங்களை மன்னியும். [QBR]
சங்கீதம் 79 : 10 (IRVTA)
அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்? [QBR] உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல் [QBR] தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும். [QBR]
சங்கீதம் 79 : 11 (IRVTA)
கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; [QBR] கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும். [QBR]
சங்கீதம் 79 : 12 (IRVTA)
ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, [QBR] ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும். [QBR]
சங்கீதம் 79 : 13 (IRVTA)
அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; [QBR] தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: