சங்கீதம் 72 : 1 (IRVTA)
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், [QBR] ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். [QBR]
சங்கீதம் 72 : 2 (IRVTA)
அவர் உம்முடைய மக்களை நீதியோடும், [QBR] உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். [QBR]
சங்கீதம் 72 : 3 (IRVTA)
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், [QBR] மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும். [QBR]
சங்கீதம் 72 : 4 (IRVTA)
மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, [QBR] ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். [QBR]
சங்கீதம் 72 : 5 (IRVTA)
சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். [QBR]
சங்கீதம் 72 : 6 (IRVTA)
புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். [QBR]
சங்கீதம் 72 : 7 (IRVTA)
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; [QBR] சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். [QBR]
சங்கீதம் 72 : 8 (IRVTA)
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், [QBR] நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். [QBR]
சங்கீதம் 72 : 9 (IRVTA)
வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; [QBR] அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள். [QBR]
சங்கீதம் 72 : 10 (IRVTA)
தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; [QBR] ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். [QBR]
சங்கீதம் 72 : 11 (IRVTA)
எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; [QBR] எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். [QBR]
சங்கீதம் 72 : 12 (IRVTA)
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். [QBR]
சங்கீதம் 72 : 13 (IRVTA)
எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, [QBR] எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார். [QBR]
சங்கீதம் 72 : 14 (IRVTA)
அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; [QBR] அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும். [QBR]
சங்கீதம் 72 : 15 (IRVTA)
அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; [QBR] அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், [QBR] எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். [QBR]
சங்கீதம் 72 : 16 (IRVTA)
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; [QBR] அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; [QBR] பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள். [QBR]
சங்கீதம் 72 : 17 (IRVTA)
அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; [QBR] சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; [QBR] மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், [QBR] எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள். [QBR]
சங்கீதம் 72 : 18 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; [QBR] அவரே அதிசயங்களைச் செய்கிறவர். [QBR]
சங்கீதம் 72 : 19 (IRVTA)
அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; [QBR] பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. [QBR] ஆமென், ஆமென். [QBR]
சங்கீதம் 72 : 20 (IRVTA)
ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: