சங்கீதம் 6 : 1 (IRVTA)
யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், [QBR] உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். [QBR]
சங்கீதம் 6 : 2 (IRVTA)
என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, [QBR] நான் பெலனில்லாமல் போனேன்; [QBR] என்னைக் குணமாக்கும் யெகோவாவே, [QBR] என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. [QBR]
சங்கீதம் 6 : 3 (IRVTA)
என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, [QBR] எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். [QBR]
சங்கீதம் 6 : 4 (IRVTA)
திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; [QBR] உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். [QBR]
சங்கீதம் 6 : 5 (IRVTA)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, [QBR] பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? [QBR]
சங்கீதம் 6 : 6 (IRVTA)
என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; [QBR] இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, [QBR] என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். [QBR]
சங்கீதம் 6 : 7 (IRVTA)
துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, [QBR] என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. [QBR]
சங்கீதம் 6 : 8 (IRVTA)
அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; [QBR] யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். [QBR]
சங்கீதம் 6 : 9 (IRVTA)
யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; [QBR] யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். [QBR]
சங்கீதம் 6 : 10 (IRVTA)
என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; [QBR] அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10

BG:

Opacity:

Color:


Size:


Font: