சங்கீதம் 50 : 1 (IRVTA)
வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, [QBR] சூரியன் உதிக்கும்திசை தொடங்கி [QBR] அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். [QBR]
சங்கீதம் 50 : 2 (IRVTA)
அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். [QBR]
சங்கீதம் 50 : 3 (IRVTA)
நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; [QBR] அவருக்கு முன்பு அக்கினி அழியும்; [QBR] அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும். [QBR]
சங்கீதம் 50 : 4 (IRVTA)
அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க [QBR] உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். [QBR]
சங்கீதம் 50 : 5 (IRVTA)
பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த [QBR] என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். [QBR]
சங்கீதம் 50 : 6 (IRVTA)
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; [QBR] தேவனே நியாயாதிபதி. (சேலா) [QBR]
சங்கீதம் 50 : 7 (IRVTA)
என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, [QBR] உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; [QBR] நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன். [QBR]
சங்கீதம் 50 : 8 (IRVTA)
உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; [QBR] உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QBR]
சங்கீதம் 50 : 9 (IRVTA)
உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், [QBR] உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. [QBR]
சங்கீதம் 50 : 10 (IRVTA)
எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். [QBR]
சங்கீதம் 50 : 11 (IRVTA)
மலைகளிலுள்ள [* ஆகாயத்தின்] பறவைகளையெல்லாம் அறிவேன்; [QBR] வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். [QBR]
சங்கீதம் 50 : 12 (IRVTA)
நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; [QBR] பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. [QBR]
சங்கீதம் 50 : 13 (IRVTA)
நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, [QBR] ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? [QBR]
சங்கீதம் 50 : 14 (IRVTA)
நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; [QBR]
சங்கீதம் 50 : 15 (IRVTA)
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; [QBR] நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். [QBR]
சங்கீதம் 50 : 16 (IRVTA)
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், [QBR] என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. [QBR]
சங்கீதம் 50 : 17 (IRVTA)
அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். [QBR]
சங்கீதம் 50 : 18 (IRVTA)
நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; [QBR] விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. [QBR]
சங்கீதம் 50 : 19 (IRVTA)
உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், [QBR] உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. [QBR]
சங்கீதம் 50 : 20 (IRVTA)
நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, [QBR] உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். [QBR]
சங்கீதம் 50 : 21 (IRVTA)
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், [QBR] உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; [QBR] ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, [QBR] அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். [QBR]
சங்கீதம் 50 : 22 (IRVTA)
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; [QBR] இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், [QBR] ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. [QBR]
சங்கீதம் 50 : 23 (IRVTA)
நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; [QBR] தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு [QBR] தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: