சங்கீதம் 25 : 1 (IRVTA)
யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். [QBR]
சங்கீதம் 25 : 2 (IRVTA)
என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், [QBR] நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; [QBR] என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். [QBR]
சங்கீதம் 25 : 3 (IRVTA)
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; [QBR] காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. [QBR]
சங்கீதம் 25 : 4 (IRVTA)
யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; [QBR] உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். [QBR]
சங்கீதம் 25 : 5 (IRVTA)
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; [QBR] நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், [QBR] உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். [QBR]
சங்கீதம் 25 : 6 (IRVTA)
யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், [QBR] அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. [QBR]
சங்கீதம் 25 : 7 (IRVTA)
என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; [QBR] யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். [QBR]
சங்கீதம் 25 : 8 (IRVTA)
யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; [QBR] ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். [QBR]
சங்கீதம் 25 : 9 (IRVTA)
சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, [QBR] சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். [QBR]
சங்கீதம் 25 : 10 (IRVTA)
யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, [QBR] அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. [QBR]
சங்கீதம் 25 : 11 (IRVTA)
யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; [QBR] உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். [QBR]
சங்கீதம் 25 : 12 (IRVTA)
யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ [QBR] அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். [QBR]
சங்கீதம் 25 : 13 (IRVTA)
அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; [QBR] அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். [QBR]
சங்கீதம் 25 : 14 (IRVTA)
யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; [QBR] அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். [QBR]
சங்கீதம் 25 : 15 (IRVTA)
என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; [QBR] அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். [QBR]
சங்கீதம் 25 : 16 (IRVTA)
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; [QBR] நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். [QBR]
சங்கீதம் 25 : 17 (IRVTA)
என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; [QBR] என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். [QBR]
சங்கீதம் 25 : 18 (IRVTA)
என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, [QBR] என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். [QBR]
சங்கீதம் 25 : 19 (IRVTA)
என்னுடைய எதிரிகளைப் பாரும்; [QBR] அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 25 : 20 (IRVTA)
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; [QBR] நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். [QBR]
சங்கீதம் 25 : 21 (IRVTA)
உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; [QBR] நான் உமக்குக் காத்திருக்கிறேன். [QBR]
சங்கீதம் 25 : 22 (IRVTA)
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: