சங்கீதம் 142 : 1 (IRVTA)
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; [QBR] யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். [QBR]
சங்கீதம் 142 : 2 (IRVTA)
அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; [QBR] அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். [QBR]
சங்கீதம் 142 : 3 (IRVTA)
என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, [QBR] நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; [QBR] நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். [QBR]
சங்கீதம் 142 : 4 (IRVTA)
வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், [QBR] என்னை அறிவார் ஒருவரும் இல்லை; [QBR] எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; [QBR] என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. [QBR]
சங்கீதம் 142 : 5 (IRVTA)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR] நீரே என் அடைக்கலமும், [QBR] உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். [QBR]
சங்கீதம் 142 : 6 (IRVTA)
என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், [QBR] நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; [QBR] என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், [QBR] அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 142 : 7 (IRVTA)
உமது பெயரை நான் துதிக்கும்படி, [QBR] என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; [QBR] எனக்கு நீர் தயவு செய்யும்போது [QBR] நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள். [PE]

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: