சங்கீதம் 130 : 1 (IRVTA)
யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். [QBR]
சங்கீதம் 130 : 2 (IRVTA)
ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; [QBR] என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு [QBR] உமது செவிகள் கவனித்திருக்கட்டும். [QBR]
சங்கீதம் 130 : 3 (IRVTA)
யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், [QBR] யார் நிலைநிற்பான், ஆண்டவரே. [QBR]
சங்கீதம் 130 : 4 (IRVTA)
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. [QBR]
சங்கீதம் 130 : 5 (IRVTA)
யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; [QBR] அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். [QBR]
சங்கீதம் 130 : 6 (IRVTA)
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட [QBR] அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. [QBR]
சங்கீதம் 130 : 7 (IRVTA)
இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; [QBR] கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. [QBR]
சங்கீதம் 130 : 8 (IRVTA)
அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார். [PE]

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: