சங்கீதம் 128 : 1 (IRVTA)
யெகோவாவுக்குப் பயந்து, [QBR] அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். [QBR]
சங்கீதம் 128 : 2 (IRVTA)
உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; [QBR] உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். [QBR]
சங்கீதம் 128 : 3 (IRVTA)
உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் [QBR] திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; [QBR] உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். [QBR]
சங்கீதம் 128 : 4 (IRVTA)
இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் [QBR] இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான். [QBR]
சங்கீதம் 128 : 5 (IRVTA)
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; [QBR] நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். [QBR]
சங்கீதம் 128 : 6 (IRVTA)
நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், [QBR] இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். [PE]

1 2 3 4 5 6

BG:

Opacity:

Color:


Size:


Font: