சங்கீதம் 108 : 1 (IRVTA)
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; [QBR] நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; [QBR] என்னுடைய மகிமையும் பாடும். [QBR]
சங்கீதம் 108 : 2 (IRVTA)
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், [QBR] நான் அதிகாலையில் விழிப்பேன். [QBR]
சங்கீதம் 108 : 3 (IRVTA)
யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; [QBR] தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [QBR]
சங்கீதம் 108 : 4 (IRVTA)
உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், [QBR] உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது. [QBR]
சங்கீதம் 108 : 5 (IRVTA)
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; [QBR] உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. [QBR]
சங்கீதம் 108 : 6 (IRVTA)
உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, [QBR] உமது வலதுகரத்தினால் இரட்சித்து, [QBR] எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும். [QBR]
சங்கீதம் 108 : 7 (IRVTA)
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், [QBR] ஆகையால் சந்தோஷப்படுவேன்; [QBR] சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். [QBR]
சங்கீதம் 108 : 8 (IRVTA)
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; [QBR] எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், [QBR] யூதா என்னுடைய செங்கோல். [QBR]
சங்கீதம் 108 : 9 (IRVTA)
மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; [QBR] ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; [QBR] பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். [QBR]
சங்கீதம் 108 : 10 (IRVTA)
வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? [QBR] ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? [QBR]
சங்கீதம் 108 : 11 (IRVTA)
எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? [QBR] எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ? [QBR]
சங்கீதம் 108 : 12 (IRVTA)
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; [QBR] மனிதனுடைய உதவி வீண். [QBR]
சங்கீதம் 108 : 13 (IRVTA)
தேவனாலே வெற்றி பெறுவோம்; [QBR] அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: