சங்கீதம் 107 : 1 (IRVTA)
யெகோவாவை துதியுங்கள்; [QBR] அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 107 : 2 (IRVTA)
யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, [QBR]
சங்கீதம் 107 : 3 (IRVTA)
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள [QBR] பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், [QBR] அப்படிச் சொல்வார்களாக. [QBR]
சங்கீதம் 107 : 4 (IRVTA)
அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், [QBR] வனாந்திரத்திலே பாலைவனவழியாக, [QBR]
சங்கீதம் 107 : 5 (IRVTA)
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் [QBR] அலைந்து திரிந்தார்கள். [QBR]
சங்கீதம் 107 : 6 (IRVTA)
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், [QBR] அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார். [QBR]
சங்கீதம் 107 : 7 (IRVTA)
வாழும் ஊருக்குப்போய்ச்சேர, [QBR] அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். [QBR]
சங்கீதம் 107 : 8 (IRVTA)
தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, [QBR] பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, [QBR]
சங்கீதம் 107 : 9 (IRVTA)
அவருடைய கிருபையினிமித்தமும், [QBR] மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. [QBR]
சங்கீதம் 107 : 10 (IRVTA)
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, [QBR] உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், [QBR]
சங்கீதம் 107 : 11 (IRVTA)
காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, [QBR] ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள். [QBR]
சங்கீதம் 107 : 12 (IRVTA)
அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; [QBR] உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள். [QBR]
சங்கீதம் 107 : 13 (IRVTA)
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; [QBR] அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார். [QBR]
சங்கீதம் 107 : 14 (IRVTA)
காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, [QBR] அவர்களுடைய கட்டுகளை அறுத்தார். [QBR]
சங்கீதம் 107 : 15 (IRVTA)
யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, [QBR] இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, [QBR]
சங்கீதம் 107 : 16 (IRVTA)
அவருடைய கிருபையினிமித்தமும், [QBR] மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. [QBR]
சங்கீதம் 107 : 17 (IRVTA)
புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் [QBR] தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். [QBR]
சங்கீதம் 107 : 18 (IRVTA)
அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, [QBR] அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள். [QBR]
சங்கீதம் 107 : 19 (IRVTA)
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; [QBR] அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார். [QBR]
சங்கீதம் 107 : 20 (IRVTA)
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, [QBR] அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். [QBR]
சங்கீதம் 107 : 21 (IRVTA)
அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், [QBR] மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, [QBR]
சங்கீதம் 107 : 22 (IRVTA)
நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக. [QBR]
சங்கீதம் 107 : 23 (IRVTA)
கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, [QBR]
சங்கீதம் 107 : 24 (IRVTA)
அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், [QBR] ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். [QBR]
சங்கீதம் 107 : 25 (IRVTA)
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, [QBR] அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும். [QBR]
சங்கீதம் 107 : 26 (IRVTA)
அவர்கள் வானத்தில் ஏறி, [QBR] ஆழங்களில் இறங்குகிறார்கள், [QBR] அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது. [QBR]
சங்கீதம் 107 : 27 (IRVTA)
குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; [QBR] அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. [QBR]
சங்கீதம் 107 : 28 (IRVTA)
அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், [QBR] அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். [QBR]
சங்கீதம் 107 : 29 (IRVTA)
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. [QBR]
சங்கீதம் 107 : 30 (IRVTA)
அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; [QBR] தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். [QBR]
சங்கீதம் 107 : 31 (IRVTA)
அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், [QBR] மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, [QBR]
சங்கீதம் 107 : 32 (IRVTA)
மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, [QBR] மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. [QBR]
சங்கீதம் 107 : 33 (IRVTA)
அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும், [QBR]
சங்கீதம் 107 : 34 (IRVTA)
குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். [QBR]
சங்கீதம் 107 : 35 (IRVTA)
அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், [QBR] வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, [QBR]
சங்கீதம் 107 : 36 (IRVTA)
பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; [QBR] அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, [QBR]
சங்கீதம் 107 : 37 (IRVTA)
வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், [QBR] அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். [QBR]
சங்கீதம் 107 : 38 (IRVTA)
அவர்களை ஆசீர்வதிக்கிறார், [QBR] மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார். [QBR]
சங்கீதம் 107 : 39 (IRVTA)
பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், [QBR] துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். [QBR]
சங்கீதம் 107 : 40 (IRVTA)
அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, [QBR] வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, [QBR]
சங்கீதம் 107 : 41 (IRVTA)
எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, [QBR] உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, [QBR] அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். [QBR]
சங்கீதம் 107 : 42 (IRVTA)
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; [QBR] நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும். [QBR]
சங்கீதம் 107 : 43 (IRVTA)
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; [QBR] ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43

BG:

Opacity:

Color:


Size:


Font: