சங்கீதம் 103 : 1 (IRVTA)
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; [QBR] என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று. [QBR]
சங்கீதம் 103 : 2 (IRVTA)
என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; [QBR] அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. [QBR]
சங்கீதம் 103 : 3 (IRVTA)
அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, [QBR] உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, [QBR]
சங்கீதம் 103 : 4 (IRVTA)
உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, [QBR] உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, [QBR]
சங்கீதம் 103 : 5 (IRVTA)
நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; [QBR] கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது. [QBR]
சங்கீதம் 103 : 6 (IRVTA)
ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். [QBR]
சங்கீதம் 103 : 7 (IRVTA)
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார். [QBR]
சங்கீதம் 103 : 8 (IRVTA)
யெகோவா உருக்கமும், இரக்கமும், [QBR] நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். [QBR]
சங்கீதம் 103 : 9 (IRVTA)
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; [QBR] என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை. [QBR]
சங்கீதம் 103 : 10 (IRVTA)
அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், [QBR] நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். [QBR]
சங்கீதம் 103 : 11 (IRVTA)
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, [QBR] அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. [QBR]
சங்கீதம் 103 : 12 (IRVTA)
மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, [QBR] அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். [QBR]
சங்கீதம் 103 : 13 (IRVTA)
தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, [QBR] யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். [QBR]
சங்கீதம் 103 : 14 (IRVTA)
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; [QBR] நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். [QBR]
சங்கீதம் 103 : 15 (IRVTA)
மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; [QBR] வெளியின் பூவைப்போல் பூக்கிறான். [QBR]
சங்கீதம் 103 : 16 (IRVTA)
காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; [QBR] அது இருந்த இடமும் இனி அதை அறியாது. [QBR]
சங்கீதம் 103 : 17 (IRVTA)
யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், [QBR] அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது. [QBR]
சங்கீதம் 103 : 18 (IRVTA)
அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. [QBR]
சங்கீதம் 103 : 19 (IRVTA)
யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; [QBR] அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது. [QBR]
சங்கீதம் 103 : 20 (IRVTA)
யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, [QBR] அவருடைய வசனத்தின்படி செய்கிற [QBR] பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, [QBR] அவரைத் துதியுங்கள். [QBR]
சங்கீதம் 103 : 21 (IRVTA)
யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, [QBR] அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, [QBR] அவரைப் போற்றுங்கள். [QBR]
சங்கீதம் 103 : 22 (IRVTA)
யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, [QBR] அவரைப் போற்றுங்கள்; [QBR] என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: