சங்கீதம் 102 : 1 (IRVTA)
யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; [QBR] என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக. [QBR]
சங்கீதம் 102 : 2 (IRVTA)
என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்; [QBR] உமது செவியை என்னிடத்தில் சாயும்; [QBR] நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும். [QBR]
சங்கீதம் 102 : 3 (IRVTA)
என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; [QBR] என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது. [QBR]
சங்கீதம் 102 : 4 (IRVTA)
என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; [QBR] என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன். [QBR]
சங்கீதம் 102 : 5 (IRVTA)
என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. [QBR]
சங்கீதம் 102 : 6 (IRVTA)
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; [QBR] பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன். [QBR]
சங்கீதம் 102 : 7 (IRVTA)
நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன். [QBR]
சங்கீதம் 102 : 8 (IRVTA)
நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; [QBR] என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள். [QBR]
சங்கீதம் 102 : 9 (IRVTA)
நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், [QBR] உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். [QBR]
சங்கீதம் 102 : 10 (IRVTA)
ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, [QBR] என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன். [QBR]
சங்கீதம் 102 : 11 (IRVTA)
என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; [QBR] புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். [QBR]
சங்கீதம் 102 : 12 (IRVTA)
யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; [QBR] உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும். [QBR]
சங்கீதம் 102 : 13 (IRVTA)
தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; [QBR] அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. [QBR]
சங்கீதம் 102 : 14 (IRVTA)
உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, [QBR] அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 102 : 15 (IRVTA)
யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். [QBR]
சங்கீதம் 102 : 16 (IRVTA)
திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், [QBR] அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். [QBR]
சங்கீதம் 102 : 17 (IRVTA)
அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், [QBR] பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். [QBR]
சங்கீதம் 102 : 18 (IRVTA)
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; [QBR] உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள். [QBR]
சங்கீதம் 102 : 19 (IRVTA)
யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், [QBR] கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், [QBR]
சங்கீதம் 102 : 20 (IRVTA)
தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, [QBR] வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். [QBR]
சங்கீதம் 102 : 21 (IRVTA)
யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது, [QBR]
சங்கீதம் 102 : 22 (IRVTA)
சீயோனில் யெகோவாவுடைய பெயரையும், [QBR] எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள். [QBR]
சங்கீதம் 102 : 23 (IRVTA)
பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, [QBR] என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார். [QBR]
சங்கீதம் 102 : 24 (IRVTA)
அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; [QBR] உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். [QBR]
சங்கீதம் 102 : 25 (IRVTA)
நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; [QBR] வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது. [QBR]
சங்கீதம் 102 : 26 (IRVTA)
அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; [QBR] அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும். [QBR]
சங்கீதம் 102 : 27 (IRVTA)
நீரோ மாறாதவராக இருக்கிறீர்; [QBR] உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. [QBR]
சங்கீதம் 102 : 28 (IRVTA)
உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; [QBR] அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: