நீதிமொழிகள் 4 : 1 (IRVTA)
{ஞானமே பிரதானம்} [PS] பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, [QBR] புத்தியை அடையும்படி கவனியுங்கள். [QBR]
நீதிமொழிகள் 4 : 2 (IRVTA)
நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; [QBR] என் உபதேசத்தை விடாதிருங்கள். [QBR]
நீதிமொழிகள் 4 : 3 (IRVTA)
நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், [QBR] என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். [QBR]
நீதிமொழிகள் 4 : 4 (IRVTA)
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: [QBR] உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; [QBR] என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். [QBR]
நீதிமொழிகள் 4 : 5 (IRVTA)
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; [QBR] என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. [QBR]
நீதிமொழிகள் 4 : 6 (IRVTA)
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; [QBR] அதின்மேல் பிரியமாக இரு, [QBR] அது உன்னைக் காத்துக்கொள்ளும். [QBR]
நீதிமொழிகள் 4 : 7 (IRVTA)
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; [QBR] என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். [QBR]
நீதிமொழிகள் 4 : 8 (IRVTA)
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; [QBR] நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். [QBR]
நீதிமொழிகள் 4 : 9 (IRVTA)
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; [QBR] அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். [QBR]
நீதிமொழிகள் 4 : 10 (IRVTA)
என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; [QBR] அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். [QBR]
நீதிமொழிகள் 4 : 11 (IRVTA)
ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; [QBR] செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். [QBR]
நீதிமொழிகள் 4 : 12 (IRVTA)
நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; [QBR] நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். [QBR]
நீதிமொழிகள் 4 : 13 (IRVTA)
புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், [QBR] அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். [QBR]
நீதிமொழிகள் 4 : 14 (IRVTA)
துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; [QBR] தீயோர்களுடைய வழியில் நடக்காதே. [QBR]
நீதிமொழிகள் 4 : 15 (IRVTA)
அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; [QBR] அதைவிட்டு விலகிக் கடந்துபோ. [QBR]
நீதிமொழிகள் 4 : 16 (IRVTA)
தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; [QBR] அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். [QBR]
நீதிமொழிகள் 4 : 17 (IRVTA)
அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, [QBR] கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். [QBR]
நீதிமொழிகள் 4 : 18 (IRVTA)
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் [QBR] அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். [QBR]
நீதிமொழிகள் 4 : 19 (IRVTA)
துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; [QBR] தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். [QBR]
நீதிமொழிகள் 4 : 20 (IRVTA)
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; [QBR] என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். [QBR]
நீதிமொழிகள் 4 : 21 (IRVTA)
அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; [QBR] அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள். [QBR]
நீதிமொழிகள் 4 : 22 (IRVTA)
அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், [QBR] அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். [QBR]
நீதிமொழிகள் 4 : 23 (IRVTA)
எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், [QBR] அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். [QBR]
நீதிமொழிகள் 4 : 24 (IRVTA)
வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, [QBR] உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. [QBR]
நீதிமொழிகள் 4 : 25 (IRVTA)
உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; [QBR] உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். [QBR]
நீதிமொழிகள் 4 : 26 (IRVTA)
உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; [QBR] உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். [QBR]
நீதிமொழிகள் 4 : 27 (IRVTA)
வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; [QBR] உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: