நீதிமொழிகள் 3 : 1 (IRVTA)
{ஞானத்தினால் தொடர்ந்துவரும் பலன்கள்} [PS] என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; [QBR] உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். [QBR]
நீதிமொழிகள் 3 : 2 (IRVTA)
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், [QBR] நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும். [QBR]
நீதிமொழிகள் 3 : 3 (IRVTA)
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; [QBR] நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, [QBR] அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். [QBR]
நீதிமொழிகள் 3 : 4 (IRVTA)
அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். [QBR]
நீதிமொழிகள் 3 : 5 (IRVTA)
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், [QBR] உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, [QBR]
நீதிமொழிகள் 3 : 6 (IRVTA)
உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; [QBR] அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். [QBR]
நீதிமொழிகள் 3 : 7 (IRVTA)
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; [QBR] யெகோவாவுக்குப் பயந்து, [QBR] தீமையை விட்டு விலகு. [QBR]
நீதிமொழிகள் 3 : 8 (IRVTA)
அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், [QBR] உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். [QBR]
நீதிமொழிகள் 3 : 9 (IRVTA)
உன்னுடைய பொருளாலும், [QBR] உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து. [QBR]
நீதிமொழிகள் 3 : 10 (IRVTA)
அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; [QBR] உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். [QBR]
நீதிமொழிகள் 3 : 11 (IRVTA)
என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, [QBR] அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. [QBR]
நீதிமொழிகள் 3 : 12 (IRVTA)
தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, [QBR] யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார். [QBR]
நீதிமொழிகள் 3 : 13 (IRVTA)
ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், [QBR] புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். [QBR]
நீதிமொழிகள் 3 : 14 (IRVTA)
அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், [QBR] அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. [QBR]
நீதிமொழிகள் 3 : 15 (IRVTA)
முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; [QBR] நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. [QBR]
நீதிமொழிகள் 3 : 16 (IRVTA)
அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், [QBR] அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. [QBR]
நீதிமொழிகள் 3 : 17 (IRVTA)
அதின் வழிகள் இனிதான வழிகள், [QBR] அதின் பாதைகளெல்லாம் சமாதானம். [QBR]
நீதிமொழிகள் 3 : 18 (IRVTA)
அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், [QBR] அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். [QBR]
நீதிமொழிகள் 3 : 19 (IRVTA)
யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, [QBR] புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார். [QBR]
நீதிமொழிகள் 3 : 20 (IRVTA)
அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, [QBR] ஆகாயமும் பனியைப் பெய்கிறது. [QBR]
நீதிமொழிகள் 3 : 21 (IRVTA)
என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; [QBR] மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள். [QBR]
நீதிமொழிகள் 3 : 22 (IRVTA)
அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், [QBR] உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். [QBR]
நீதிமொழிகள் 3 : 23 (IRVTA)
அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், [QBR] உன்னுடைய கால் இடறாது. [QBR]
நீதிமொழிகள் 3 : 24 (IRVTA)
நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; [QBR] நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். [QBR]
நீதிமொழிகள் 3 : 25 (IRVTA)
திடீரென வரும் திகிலும், [QBR] துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம். [QBR]
நீதிமொழிகள் 3 : 26 (IRVTA)
யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, [QBR] உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார். [QBR]
நீதிமொழிகள் 3 : 27 (IRVTA)
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. [QBR]
நீதிமொழிகள் 3 : 28 (IRVTA)
உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: [QBR] நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. [QBR]
நீதிமொழிகள் 3 : 29 (IRVTA)
பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற [QBR] உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. [QBR]
நீதிமொழிகள் 3 : 30 (IRVTA)
ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, [QBR] காரணமின்றி அவனோடு வழக்காடாதே. [QBR]
நீதிமொழிகள் 3 : 31 (IRVTA)
கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; [QBR] அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. [QBR]
நீதிமொழிகள் 3 : 32 (IRVTA)
மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; [QBR] நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. [QBR]
நீதிமொழிகள் 3 : 33 (IRVTA)
துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, [QBR] நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார். [QBR]
நீதிமொழிகள் 3 : 34 (IRVTA)
இகழ்வோரை அவர் இகழுகிறார்; [QBR] தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். [QBR]
நீதிமொழிகள் 3 : 35 (IRVTA)
ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; [QBR] மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: