நீதிமொழிகள் 24 : 1 (IRVTA)
{ஞானத்திற்கான அறிவுரைகள்} [PS] பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; [QBR] அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. [QBR]
நீதிமொழிகள் 24 : 2 (IRVTA)
அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், [QBR] அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். [QBR]
நீதிமொழிகள் 24 : 3 (IRVTA)
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். [QBR]
நீதிமொழிகள் 24 : 4 (IRVTA)
அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். [QBR]
நீதிமொழிகள் 24 : 5 (IRVTA)
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; [QBR] அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான். [QBR]
நீதிமொழிகள் 24 : 6 (IRVTA)
நல்யோசனைசெய்து யுத்தம்செய்; [QBR] ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். [QBR]
நீதிமொழிகள் 24 : 7 (IRVTA)
மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; [QBR] அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். [QBR]
நீதிமொழிகள் 24 : 8 (IRVTA)
தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். [QBR]
நீதிமொழிகள் 24 : 9 (IRVTA)
தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன். [QBR]
நீதிமொழிகள் 24 : 10 (IRVTA)
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், [QBR] உன்னுடைய பெலன் குறுகினது. [QBR]
நீதிமொழிகள் 24 : 11 (IRVTA)
மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் [QBR] விடுவிக்க முடிந்தால் விடுவி. [QBR]
நீதிமொழிகள் 24 : 12 (IRVTA)
அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், [QBR] இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? [QBR] உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? [QBR] அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ? [QBR]
நீதிமொழிகள் 24 : 13 (IRVTA)
என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; [QBR] கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். [QBR]
நீதிமொழிகள் 24 : 14 (IRVTA)
அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; [QBR] அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், [QBR] உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. [QBR]
நீதிமொழிகள் 24 : 15 (IRVTA)
துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; [QBR] அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. [QBR]
நீதிமொழிகள் 24 : 16 (IRVTA)
நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; [QBR] துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். [QBR]
நீதிமொழிகள் 24 : 17 (IRVTA)
உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; [QBR] அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக. [QBR]
நீதிமொழிகள் 24 : 18 (IRVTA)
யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; [QBR] அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். [QBR]
நீதிமொழிகள் 24 : 19 (IRVTA)
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; [QBR] துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. [QBR]
நீதிமொழிகள் 24 : 20 (IRVTA)
துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; [QBR] துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும். [QBR]
நீதிமொழிகள் 24 : 21 (IRVTA)
என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, [QBR] கலகக்காரர்களோடு சேராதே. [QBR]
நீதிமொழிகள் 24 : 22 (IRVTA)
திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; [QBR] அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்? [QBR]
நீதிமொழிகள் 24 : 23 (IRVTA)
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: [QBR] நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல. [QBR]
நீதிமொழிகள் 24 : 24 (IRVTA)
துன்மார்க்கனைப் பார்த்து: [QBR] நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், [QBR] குடிமக்கள் அவனை வெறுப்பார்கள். [QBR]
நீதிமொழிகள் 24 : 25 (IRVTA)
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், [QBR] அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். [QBR]
நீதிமொழிகள் 24 : 26 (IRVTA)
செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் [QBR] உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம். [QBR]
நீதிமொழிகள் 24 : 27 (IRVTA)
வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, [QBR] வயலில் அதை ஒழுங்காக்கி, [QBR] பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு. [QBR]
நீதிமொழிகள் 24 : 28 (IRVTA)
நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; [QBR] உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. [QBR]
நீதிமொழிகள் 24 : 29 (IRVTA)
அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், [QBR] அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. [QBR]
நீதிமொழிகள் 24 : 30 (IRVTA)
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். [QBR]
நீதிமொழிகள் 24 : 31 (IRVTA)
இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; [QBR] நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, [QBR] அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.
நீதிமொழிகள் 24 : 32 (IRVTA)
அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; [QBR] அதை நோக்கிப் புத்தியடைந்தேன். [QBR]
நீதிமொழிகள் 24 : 33 (IRVTA)
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், [QBR] இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? [QBR]
நீதிமொழிகள் 24 : 34 (IRVTA)
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் [QBR] உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: