நீதிமொழிகள் 15 : 1 (IRVTA)
{வாழ்வின் ஒழுங்குமுறைகள்} [PS] சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; [QBR] கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
நீதிமொழிகள் 15 : 2 (IRVTA)
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; [QBR] மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். [QBR]
நீதிமொழிகள் 15 : 3 (IRVTA)
யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, [QBR] நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. [QBR]
நீதிமொழிகள் 15 : 4 (IRVTA)
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். [QBR]
நீதிமொழிகள் 15 : 5 (IRVTA)
மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; [QBR] கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. [QBR]
நீதிமொழிகள் 15 : 6 (IRVTA)
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; [QBR] துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. [QBR]
நீதிமொழிகள் 15 : 7 (IRVTA)
ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; [QBR] மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. [QBR]
நீதிமொழிகள் 15 : 8 (IRVTA)
துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; [QBR] செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். [QBR]
நீதிமொழிகள் 15 : 9 (IRVTA)
துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; [QBR] நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். [QBR]
நீதிமொழிகள் 15 : 10 (IRVTA)
வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; [QBR] கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். [QBR]
நீதிமொழிகள் 15 : 11 (IRVTA)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, [QBR] மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? [QBR]
நீதிமொழிகள் 15 : 12 (IRVTA)
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; [QBR] ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். [QBR]
நீதிமொழிகள் 15 : 13 (IRVTA)
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; [QBR] மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். [QBR]
நீதிமொழிகள் 15 : 14 (IRVTA)
புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; [QBR] மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். [QBR]
நீதிமொழிகள் 15 : 15 (IRVTA)
சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; [QBR] மனரம்மியமோ நிரந்தர விருந்து. [QBR]
நீதிமொழிகள் 15 : 16 (IRVTA)
சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, [QBR] யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். [QBR]
நீதிமொழிகள் 15 : 17 (IRVTA)
பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, [QBR] சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. [QBR]
நீதிமொழிகள் 15 : 18 (IRVTA)
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; [QBR] நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். [QBR]
நீதிமொழிகள் 15 : 19 (IRVTA)
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; [QBR] நீதிமானுடைய வழியோ ராஜபாதை. [QBR]
நீதிமொழிகள் 15 : 20 (IRVTA)
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; [QBR] மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். [QBR]
நீதிமொழிகள் 15 : 21 (IRVTA)
மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; [QBR] புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். [QBR]
நீதிமொழிகள் 15 : 22 (IRVTA)
ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; [QBR] ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். [QBR]
நீதிமொழிகள் 15 : 23 (IRVTA)
மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; [QBR] ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! [QBR]
நீதிமொழிகள் 15 : 24 (IRVTA)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, [QBR] விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். [QBR]
நீதிமொழிகள் 15 : 25 (IRVTA)
அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; [QBR] விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். [QBR]
நீதிமொழிகள் 15 : 26 (IRVTA)
துன்மார்க்கர்களுடைய நினைவுகள் [QBR] யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; [QBR] சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். [QBR]
நீதிமொழிகள் 15 : 27 (IRVTA)
பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; [QBR] லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். [QBR]
நீதிமொழிகள் 15 : 28 (IRVTA)
நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; [QBR] துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். [QBR]
நீதிமொழிகள் 15 : 29 (IRVTA)
துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; [QBR] நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். [QBR]
நீதிமொழிகள் 15 : 30 (IRVTA)
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; [QBR] நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். [QBR]
நீதிமொழிகள் 15 : 31 (IRVTA)
வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது [QBR] ஞானிகளிடத்திலே தங்கும். [QBR]
நீதிமொழிகள் 15 : 32 (IRVTA)
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; [QBR] கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். [QBR]
நீதிமொழிகள் 15 : 33 (IRVTA)
யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; [QBR] மேன்மைக்கு முன்னானது தாழ்மை. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: