எண்ணாகமம் 13 : 1 (IRVTA)
{கானானை விவரித்தல்} [PS] யெகோவா மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 13 : 2 (IRVTA)
“நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 13 : 3 (IRVTA)
மோசே யெகோவாவுடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள்.
எண்ணாகமம் 13 : 4 (IRVTA)
அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.
எண்ணாகமம் 13 : 5 (IRVTA)
சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத்.
எண்ணாகமம் 13 : 6 (IRVTA)
யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப்.
எண்ணாகமம் 13 : 7 (IRVTA)
இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால்.
எண்ணாகமம் 13 : 8 (IRVTA)
எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா.
எண்ணாகமம் 13 : 9 (IRVTA)
பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி.
எண்ணாகமம் 13 : 10 (IRVTA)
செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல்.
எண்ணாகமம் 13 : 11 (IRVTA)
யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
எண்ணாகமம் 13 : 12 (IRVTA)
தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல்.
எண்ணாகமம் 13 : 13 (IRVTA)
ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர்.
எண்ணாகமம் 13 : 14 (IRVTA)
நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
எண்ணாகமம் 13 : 15 (IRVTA)
காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல்.
எண்ணாகமம் 13 : 16 (IRVTA)
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
எண்ணாகமம் 13 : 17 (IRVTA)
அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
எண்ணாகமம் 13 : 18 (IRVTA)
தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,
எண்ணாகமம் 13 : 19 (IRVTA)
அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
எண்ணாகமம் 13 : 20 (IRVTA)
நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது.
எண்ணாகமம் 13 : 21 (IRVTA)
அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
எண்ணாகமம் 13 : 22 (IRVTA)
தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது.
எண்ணாகமம் 13 : 23 (IRVTA)
பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
எண்ணாகமம் 13 : 24 (IRVTA)
இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல் [* திராட்சை குலை ] பள்ளத்தாக்கு எனப்பட்டது.
எண்ணாகமம் 13 : 25 (IRVTA)
அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள்.
எண்ணாகமம் 13 : 26 (IRVTA)
அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
எண்ணாகமம் 13 : 27 (IRVTA)
அவர்கள் மோசேயை நோக்கி: “நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் [† மிகவும் செழிப்பான] ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
எண்ணாகமம் 13 : 28 (IRVTA)
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம்.
எண்ணாகமம் 13 : 29 (IRVTA)
அமலேக்கியர்கள் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியர்களும், எபூசியர்களும், எமோரியர்களும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்கள் மத்திய தரைக் கடல் அருகிலும் யோர்தானுக்கு அருகில் குடியிருக்கிறார்கள்” என்றார்கள்.
எண்ணாகமம் 13 : 30 (IRVTA)
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம்” என்றான்.
எண்ணாகமம் 13 : 31 (IRVTA)
அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: “நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள்.
எண்ணாகமம் 13 : 32 (IRVTA)
“நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள்.
எண்ணாகமம் 13 : 33 (IRVTA)
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: