ஆதியாகமம் 10 : 1 (IRVTA)
{தேசங்களின் அட்டவணை} (1 நாளா 1:5) [PS] நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். [PS]
ஆதியாகமம் 10 : 2 (IRVTA)
{யாப்பேத்தின் வம்சம்} [PS] யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 3 (IRVTA)
கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 4 (IRVTA)
யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 5 (IRVTA)
இவர்களால் மத்திய தரைக்கடல் தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன. [PS]
ஆதியாகமம் 10 : 6 (IRVTA)
{காமின் வம்சம்} [PS] காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 7 (IRVTA)
கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 8 (IRVTA)
கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
ஆதியாகமம் 10 : 9 (IRVTA)
இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது.
ஆதியாகமம் 10 : 10 (IRVTA)
சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், [* பாபிலோன்] ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள்.
ஆதியாகமம் 10 : 11 (IRVTA)
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
ஆதியாகமம் 10 : 12 (IRVTA)
நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
ஆதியாகமம் 10 : 13 (IRVTA)
மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
ஆதியாகமம் 10 : 14 (IRVTA)
பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகிமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான். [PE][PS]
ஆதியாகமம் 10 : 15 (IRVTA)
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
ஆதியாகமம் 10 : 16 (IRVTA)
எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
ஆதியாகமம் 10 : 17 (IRVTA)
ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீனியர்களையும்,
ஆதியாகமம் 10 : 18 (IRVTA)
அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள்.
ஆதியாகமம் 10 : 19 (IRVTA)
கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது.
ஆதியாகமம் 10 : 20 (IRVTA)
இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர். [PS]
ஆதியாகமம் 10 : 21 (IRVTA)
{சேமின் வம்சம்} [PS] சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.
ஆதியாகமம் 10 : 22 (IRVTA)
சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 23 (IRVTA)
ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 24 (IRVTA)
அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 10 : 25 (IRVTA)
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
ஆதியாகமம் 10 : 26 (IRVTA)
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
ஆதியாகமம் 10 : 27 (IRVTA)
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
ஆதியாகமம் 10 : 28 (IRVTA)
ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
ஆதியாகமம் 10 : 29 (IRVTA)
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள்.
ஆதியாகமம் 10 : 30 (IRVTA)
இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது.
ஆதியாகமம் 10 : 31 (IRVTA)
இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர்.
ஆதியாகமம் 10 : 32 (IRVTA)
தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

BG:

Opacity:

Color:


Size:


Font: